Kaaviyam Padiduven
காவியம் பாடிடுவேன்
காலமும் வாழ்வினிலே
இயேசுவின் அன்பினையே
இறைமகன் இயேசுவின் அன்பினையே
இதயமெல்லாம் மகிழ்ந்திடவே
கீதம் பாடிடுவேன் (2) --- காவியம்
1. சொந்தம் பந்தம் எல்லாம்
வாழ்வில் மாறுமே
நெஞ்சில் வாழும் இயேசு
மாறா தெய்வமே (2)
அதை நினைப்பதினால் நன்றியுடன்
கீதம் பாடிடுவேன் (2)--- காவியம்
2. என்னை தேடி வந்தாய்
அன்பாய் தேவனே
என்றும் என்னை காக்கும்
தெய்வம் இயேசுவே (2)
அதை உள்ளத்திலே உணர்வதினால்
கீதம் பாடிடுவேன்( 2)--- காவியம்
Enthan Vanjai Paralogame
எந்தன் வாஞ்சை பரலோகமே
என்று சேர்ந்திடுவேன்
என் நேசரை என் ராஜனை
என்று நான் கண்டிடுவேன்
1. நேசர் தேசமதில்
என்றும் பேரின்பமே
கண்ணீரெல்லாம் மாறிடுமே
என்றும் ஆனந்தமே --- எந்தன்
2. சாவின் கூர்மை யாவும்
அழிந்து ஒழிந்ததே
சஞ்சலமோ அங்கில்லையே
நேசரை கண்டிடுவேன் --- எந்தன்
3. வீதி பொன் மயமே
பாடியே மகிழுவேன்
இராப்பகலோ அங்கில்லையே
வெளிச்சம் இயேசு தானே --- எந்தன்
4. ஜீவ தண்ணீரினால்
தாகம் தீர்த்திடுவார்
உள்ளமெல்லாம் ஏங்கிடுதே
என்று சேர்ந்திடுவேன் --- எந்தன்
5. தேவ அன்பதுவே
நெருக்கி ஏவிடுதே
பிரிக்கவோ ஏதுமில்லை
அன்பரை சேர்ந்திடுவேன் --- எந்தன்
Deva Sabaiyile Devan Eluntharulinar
தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்
1.பயத்தோடே நல் பக்தியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம் --- தேவ
2.ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே --- தேவ
3.இராப்பகலாய் தன் கண்மணிபோல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார் --- தேவ
4.உலகின் முடிவு வரைக்கும் நான்
உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர் --- தேவ
5.சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே --- தேவ
6.ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜே ஜெய ராஜனுக்கு ஜெயம் மூழங்கிடுவோம் --- தேவ
En Yesu Raja Saronin Roja
என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும் (2)
அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிருபை முன் செல்ல அருளும் (2)
1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2)
கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ
கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) – என் இயேசு
2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2)
பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது
பரமனே என் முன் தீபமாய் வாரும் (2) – என் இயேசு
3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (2)
இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்
என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) – என் இயேசு
Konja Kalam yesuvukkaga
கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப் பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது (2)
அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன்
ஆனந்தக் கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன்
1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன் (2)
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் --- கொஞ்ச
2. இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார் (2)
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
இயேசுவோடு நான் குடியிருப்பேன் --- கொஞ்ச
3. வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரவேற்பு அளிக்கப்படும் (2)
என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
எனக்கானந்தம் பொங்கிடுமே --- கொஞ்ச
4. பலியாக காணிக்கையாக
படைத்தேனே உமக்காக (2)
என்னை ஏற்றுக் கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை --- கொஞ்ச