Monday, 16 December 2019

Arasanai Kanamalirupomo அரசனைக் காணமலிருப்போமோ

Arasanai Kanamalirupomo அரசனைக் காணமலிருப்போமோ - நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ - யூதர் பாடனு பவங்களை ஒழிப்போமோ - யூத 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல் ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே, ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம் தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே - யூத --- அரசனை 2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார் - மேற்குத் திசை வழி காட்டிமுன் செல்லுது பார் பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர் பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே - யூத --- அரசனை 3. அலங்காரமனை யொன்று தோணுது பார் - அதன் அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார் இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்- நாம் எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் - யூத --- அரசனை 4. அரமனையில் அவரைக் காணோமே! - அதை அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, - பெத்லேம் வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார் - யூத --- அரசனை 5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, - ராயர் பொற்கழல் அர்ச்சனை புரிவோமே வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், - தேவ வாக்கினால் திரும்பினோம் சோராமல், - யூத --- அரசனை

Aanantha Geethangal Ennalum ஆனந்த கீதங்கள் எந்நாளும்

Aanantha Geethangal Ennalum ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம் 1.புதுமை பாலன் திருமனுவேலன் வறுமை கோலம் எடுத்தவதரித்தார் முன்னுரைப் படியே முன்னணை மீதே மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே --- ஆனந்த 2.மகிமை தேவன் மகத்துவ ராஜன் அடிமை ரூபம் தரித்திக லோகம் தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற துதிக்குப் பாத்திரர் பிறந்தாரே --- ஆனந்த 3.மனதின் பாரம் யாவையும் நீக்கி மரண பயமும் புறம்பே தள்ளி மா சமாதானம் மா தேவ அன்பும் மாறா விஸ்வாசமும் அளித்தாரே --- ஆனந்த 4.அருமை இயேசுவின் திரு நாமம் இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும் கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும் வலிமை வாய்ந்திடும் நாமமிதே --- ஆனந்த 5.கருணை பொங்க திருவருள் தங்க கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம் எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம் --- ஆனந்த

Sunday, 15 December 2019

Chinnanjiru Suthane சின்னஞ்சிறு சுதனே

Chinnanjiru Suthane சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே மன்னர் மன்னவனே உன்னதத் திருவே 1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டு கூடுண்டு பறவைகட்கு பாடுண்டு உமக்கு மனிதகுமாரனே வீடுண்டோ உந்தனுக்கு தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க தாரகம் நீரானீரோ கோரவன் பகைகள் பாரச்சுமைகள் தீர மருந்தானீரோ ஆ.. ஆ.. ஆ ம் ம் ம் --- சின்னஞ்சிறு 2. அன்பின் தாய் தந்தை எல்லாம் எனக்கு உன்னதர் நீரல்லவோ துன்பம் துடைக்க பண்பினைக் காக்க என்னருள் நீரல்லவோ பாசமாய் வந்தே காசினை மீட்ட நேசமுள்ள ஏசுவே நீச சிலுவை தொங்கப் பிறந்த தாசரின் தாபரமே ஆ.. ஆ.. ஆ ம் ம் ம் --- சின்னஞ்சிறு

Thursday, 12 December 2019

Aathuma Kartharai Thuthikintrathe ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

Aathuma Kartharai Thuthikintrathe ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – என்றன் ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே – இதோ 1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை அனைவரும் பாக்கிய மென்பாரே முடிவில்லா மகிமை செய்தாரே – பல முடையவர் பரிசுத்தர் என்பாரே – இதோ – ஆத்துமா 2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் – நரர் பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் – இதோ – ஆத்துமா 3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் – அந்த முனியாபி ராமுட ஜனமதன்பால் நட்புடன் நினை வொடு நல்லிஸரேல் – அவன் நலம்பெற ஆதரித் தார்மறவேல் – இதோ – ஆத்துமா

Bethalaiyil Piranthavarai பெத்தலையில் பிறந்தவரை

Bethalaiyil Piranthavarai பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே – இன்னும் 1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில் 2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில் 3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில் 4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில் 5. இவ்வளாவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம் எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்

Wednesday, 11 December 2019

Bethalehem Oororam பெத்தலகேம் ஊரோரம்

Bethalehem Oororam 1.பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி பக்தியுடன் இத்தினம் வா ஓடி ஓடி --- பெத்தலகேம் 2.எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் நேரம் --- பெத்தலகேம் 3.வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான்வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தைவாடின புல் பூண்டோ ஆன பழங்கந்தை என்ன பாடோ பாடோ --- பெத்தலகேம் 4.அந்தரத்தில் பாடுகின்றார்தூதர் சேனை கூடி மந்தை ஆயர்ஓடுகின்றார் பாடல்கேட்கத் தேடி இன்றிரவில் என்ன இந்த மோடி மோடி --- பெத்தலகேம் 5.ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர்மகிமை கண்டு அட்டியின்றிகாபிரியேல் சொன்ன செய்தி கொண்டு நாட்டமுடன் இரட்சகரை கண்டு கண்டு --- பெத்தலகேம்

Aar Ivar Aaraaro ஆர் இவர் ஆராரோ

Aar Ivar Aaraaro ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் சரணங்கள் 1. பாருருவாகுமுன்னே – இருந்த – பரப்பொருள் தானிவரோ சீருடன் புவி, வான் அவை பொருள் யாவையுஞ் சிருஷ்டித்த மாவலரோ 2. மேசியா இவர் தானோ – நம்மை – மேய்த்திடும் நரர் கோனோ ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ 3. தித்திக்குந் தீங்கனியோ – நமது தேவனின் கண்மணியோ மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய மேவிய விண் ணொளியோ 4. பட்டத்துத் துரை மகனோ – நம்மைப் – பண்புடன் ஆள்பவனோ கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந் தாயகனோ 5. ஜீவனின் அப்பமோதான் – தாகம் தீர்த்திடும்பானமோ தான் ஆவலாய் ஏழைகள் அடைந்திடு மடைக்கல மானவரி வர்தானோ