Thursday, 12 December 2019

Bethalaiyil Piranthavarai பெத்தலையில் பிறந்தவரை

Bethalaiyil Piranthavarai பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே – இன்னும் 1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில் 2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில் 3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில் 4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில் 5. இவ்வளாவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம் எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்

Wednesday, 11 December 2019

Bethalehem Oororam பெத்தலகேம் ஊரோரம்

Bethalehem Oororam 1.பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி பக்தியுடன் இத்தினம் வா ஓடி ஓடி --- பெத்தலகேம் 2.எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் நேரம் --- பெத்தலகேம் 3.வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான்வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தைவாடின புல் பூண்டோ ஆன பழங்கந்தை என்ன பாடோ பாடோ --- பெத்தலகேம் 4.அந்தரத்தில் பாடுகின்றார்தூதர் சேனை கூடி மந்தை ஆயர்ஓடுகின்றார் பாடல்கேட்கத் தேடி இன்றிரவில் என்ன இந்த மோடி மோடி --- பெத்தலகேம் 5.ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர்மகிமை கண்டு அட்டியின்றிகாபிரியேல் சொன்ன செய்தி கொண்டு நாட்டமுடன் இரட்சகரை கண்டு கண்டு --- பெத்தலகேம்

Aar Ivar Aaraaro ஆர் இவர் ஆராரோ

Aar Ivar Aaraaro ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் சரணங்கள் 1. பாருருவாகுமுன்னே – இருந்த – பரப்பொருள் தானிவரோ சீருடன் புவி, வான் அவை பொருள் யாவையுஞ் சிருஷ்டித்த மாவலரோ 2. மேசியா இவர் தானோ – நம்மை – மேய்த்திடும் நரர் கோனோ ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ 3. தித்திக்குந் தீங்கனியோ – நமது தேவனின் கண்மணியோ மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய மேவிய விண் ணொளியோ 4. பட்டத்துத் துரை மகனோ – நம்மைப் – பண்புடன் ஆள்பவனோ கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந் தாயகனோ 5. ஜீவனின் அப்பமோதான் – தாகம் தீர்த்திடும்பானமோ தான் ஆவலாய் ஏழைகள் அடைந்திடு மடைக்கல மானவரி வர்தானோ

Monday, 9 December 2019

Panivilum Ravinil பனிவிழும் ராவினில்

Panivilum Ravinil பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில் கன்னிமரி மடியில் விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிட இயேசு பிறந்தாரே ராஜன் பிறந்தார் (2) நேசர் பிறந்தாரே (2) 1.மின்னிடும் வானக தாரகையே தேடிடும் ஞானியர் கண்டிடவே முன்வழி காட்டிச் சென்றதுவே பாலனைக் கண்டு பணிந்திடவே மகிழ்ந்தார் புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை --- பனி 2.மகிமையில் தோன்றிய தவமணியே மாட்சிமை தேவனின் கண்மணியே மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே மானிடனாக உதித்தவரே பணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை --- பனி

Thuthiyungal Devanai துதியுங்கள் தேவனை

Thuthiyungal Devanai துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை - 2 1. அவரது அதிசயங்களை பாடி (2) அவர் நாமத்தை பாராட்டி அவரை ஆண்டவர் என்றறிந்து அவரையே போற்றுங்கள் ஆப்ரகாமின் தேவனை ஈசாக்கின் தேவனை ஆர்ப்பரித்து வணங்குங்கள் - துதியுங்கள் 2. இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை (2) இடையூற்றினை போக்கினோனே கானானின் தேசத்தை காட்டினோனே கர்த்தரை போற்றுங்கள் ராஜாதி ராஜனை கர்த்தாதி கர்த்தனை ஆர்ப்பரித்து வணங்குங்கள் - துதியுங்கள்

Thinam Thinam Nam Devanaiye தினம் தினம் நம் தேவனையே

Thinam Thinam Nam Devanaiye தினம் தினம் நம் தேவனையே மனம் மகிழ்ந்து துதித்திடுவோம் (2) 1.இரக்கம் உருக்கம் நிறைந்தவரே மறவாமல் நம்மை காப்பவரே (2) சிறந்த நாமம் உடையவரே அரணான துணையாய் இருப்பவரே (2) - தினம் 2.அன்பின் உருவம் உடையவரே ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தாரே (2) ஆறுதல் எல்லோருக்கும் தருபவரே அன்னையை போல அணைப்பவரே (2) - தினம் 3.விண்ணில் மகிமை உடையவரே மண்ணில் சமதானம் தருபவரே (2) என்னில் தினமும் வாழ்பவரே உன்னில் அழைத்தால் வருபவரே (2) - தினம்

Pongi Valiyum Deva Kirubai பொங்கி வழியும் தேவ கிருபை

Pongi Valiyum Deva Kirubai பொங்கி வழியும் தேவ கிருபை மண்ணில் வந்தது இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க தன்னை ஈந்தது 1. உலகை மீட்கும் உண்மை உருவே மாட்டுத் தொழுவில் பிறந்த திருவே உலகெல்லாம் போற்றிடும் தூய்மையின் அன்பின் உருவே — பொங்கி 2. கருவில் உதித்த தூய கனியே கவலை தீர்க்கும் கண்ணின் மணியே உள்ளமெல்லாம் பூரிக்கும் தூய்மையே உந்தன் வரவே — பொங்கி 3. விழிகள் திறந்த விந்தை தெய்வம் பழிகள் சுமந்த விந்தை தெய்வம் உலகெல்லாம் தொழுதிடும் உன்னதம் உந்தன் நாமம் — பொங்கி