Friday, 1 November 2019

Singasanathil Veetrirukkum சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

Singasanathil Veetrirukkum
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை -2

கேரூபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே

ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே

ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே

இருபுறமும் கருக்குள்ள
பட்டயத்தை உடையவரே

அக்னிஜூவாலை போன்ற கண்களையும்
வெண்கலப் பாதங்களையும் உடையவரே

பரிசுத்தமும் சத்தியமும்
தாவீதின் திறவுகோல் உடையவரே

Kalvariye Kalvariye கல்வாரியே கல்வாரியே

Kalvariye Kalvariye
கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே

1. பாவி துரோகி சண்டாளன்
    நானாயினும்
   பாதகம் போக்கிப்
   பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே

2. பாவியை மீட்கவே நாயகன்
    இயேசு தம்
    ஜீவனின் இரத்தத்தைச்
    சிந்தின உன்னத – கல்வாரியே

3. நாதன் எனக்காக
   ஆதரவற்றோராய்ப்
   பாதகர் மத்தியில் பாதகன்
    போல் தொங்கும் – கல்வாரியே

4. முள்முடி சூடியே கூராணி
    மீதினில்
    கள்ளனை போல என்
    நாயகன் தொங்கிடும் – கல்வாரியே

5. சர்வம் படைத்தாளும்
    சொர்லோக நாயகன்
    கர்மத்தின் கோலமாய்
    நிற்பதைக் காண்பேனோ – கல்வாரியே

6. எண்ணும் நன்மை ஏதும்
    என்னிலே இல்லையே
   பின்னை ஏன் நேசித்தீர்
   என்னை என் பொன் நாதா – கல்வாரியே

7. இவ்வித அன்பை யான்
    எங்குமே காணேனே
   எவ்விதம் இதற்கீடு
   ஏழையான் செய்குவேன் – கல்வாரியே

Wednesday, 30 October 2019

Valiyentral Ethu Athu Jeeva Oli வழியென்றால் எது அது ஜீவ வழி

Valiyentral Ethu Athu Jeeva Oli
வழியென்றால் எது? அது ஜீவ வழி
வழி காட்டிட வந்தவர் யார்? அவர் இயேசு
                     வழியும் அவர் ஒளியும் அவர்
                     ஜீவ நதியும் அவரே
                     சத்தியமும் அவர் நித்தியமும் அவர்
                     ஜீவ அப்பமும் அவரே அவர் இயேசு

1.   ஒளியென்றால் எது? அது ஜீவ ஒளி
     ஒளி காட்டிடும் உத்தமர் யார்? அவர் இயேசு  --- வழியும்

2.  ஜலம் என்றால் எது? அது ஜீவ ஜலம்
   ஜலம் காட்டும் சற்குருயார்? அவர் இயேசு  --- வழியும்

3. சத்தியம் என்றால் எது? அது தேவ சத்யம்
   சத்தியம் காட்டிடும் சற்குணர்  யார்? அவர் இயேசு  --- வழியும்

4. அப்பம் என்றால் எது? அது ஜீவ அப்பம்
  அப்பம் ஊட்டிடும் அன்புளர்  யார்? அவர் இயேசு  --- வழியும்

5. அன்பு என்றால் எது? அது தேவ அன்பு
 அன்பு காட்டிடும் நற்குணர் யார்? அவர் இயேசு   --- வழியும்

Karthar yesu Varuvar கர்த்தர் இயேசு வருவார்

Karthar yesu Varuvar
கர்த்தர் இயேசு வருவார் 
நித்தம் காத்துத் தவிக்கும் தேவ புத்திரர்
களிப்பாய் வானத்தில் சேர்ந்திடவே

1.மேகத்தில் தோன்றும் மின்னொளியில்
மகிமைக் கிறிஸ்து வெளிப்படுவார்
தூதர் தொனி ஆரவாரத்துடன்
தேவ எக்காளம் முழங்கிடுமே - கர்த்தர்

2.ஆண்டவர் அழைத்த முதற்பலன்கள்
அமரர் வடிவாய் மாறிடுவோம்
கர்த்தருக்குள் மரித்தோர் எழும்ப
பக்தர்களோடு பறந்திடுவோம் - கர்த்தர்

3.தம் மணவாட்டி ஆயத்தமே
துதியே செலுத்தி மகிழ்ந்திடவே
நீதி விளங்கும் நல் வெண் வஸ்திரம்
ஜோதி இலங்கத் தரித்திடுவார்  - கர்த்தர்

4.நூதன சாலேம் வந்திறங்கும்
நடுவான மீதில் அலங்கரிப்பாய்
ஆட்டுக்குட்டியானவர் விருந்தே
அன்று சந்தோஷ சுப மங்களம் - கர்த்தர்

5.வெண் குதிரை மேல் ஏறிவந்தே
கண்கள் நெருப்பாய் மிக ஜொலித்தே
உண்மையும் சத்தியமும் நிறைந்தே
விண் மணவாளன் ஜெயம் எடுப்பார் – கர்த்தர்




Tuesday, 29 October 2019

Inba Thunba Nerathilum Un இன்ப துன்ப நேரத்திலும் உன்

Inba Thunba Nerathilum Un
இன்ப துன்ப நேரத்திலும்  உன்
அன்புள்ள இயேசுவைப் பார்

1.இன்பத்தினால் அகமகிழ்ந்து 
கிலேசத்தினால் துக்கித்து
சிற்றின்பப் பேருலகில்
சிக்கிக்கொண்டு இருக்கும் போதும்  - இன்ப

2. சோதனையால் பிடிபட்டு 
இடுக்கண்ணில் இருக்கும் போதும்
சாத்தான் உன்னை மேற்கொள்ளும் போதும்
அக்கினி யாஸ்திரம் எரியும்போதும் - இன்ப

3.தோழரால் பகைக்கப்பட்டு 
மனகிலேசம் அடையும் போதும்
உலகம் உன்னை இகழ்ச்சி செய்து
தங்கள் இடத்தை  விட்டோடும் போதும் - இன்ப

4.அவர் தாமே சோதிக்கப்பட்டு 
பாடு நமக்காய் பட்டதினால்
அவர் சோதிக்கப்படும்
நமக்கு உதவி செய்ய வல்லவராம் - இன்ப

5.வறுமையினால் யாசித்து 
பாடு மிகப்படும் போது
சாத்தான் உன்னைப் பகடிப் பண்ணி
உன் விசுவாசத்தைக் குறைக்கும் போதும் – இன்ப

6.கடுநோயால் பெலன் குன்றி 
பெவீனத்தால் தள்ளாடி
ஜீவன் உனக்குக் கசப்பாகி
சாவை நீ விரும்பும் போதும் - இன்ப

7.பகைஞரால் கல்லெறியுண்டு 
மரண நேரம் கிட்டும்போது
பக்தன் ஸ்தேவானைப் போல
தைரியமாய் உன் இயேசுவைப் பார் - இன்ப

8.நான்  என் இயேசுவின் தரிசனத்தை 
நிமிஷந் தோறும் காண்கிறதால்
நான் தான் பயப்படாதிருங்கள் 
என்றவர் என்னை தேற்றுகிறார் – இன்ப

Sunday, 27 October 2019

Naan Umai Patri Ratchaga நான் உம்மைப் பற்றி இரட்சகா

Naan Umai Patri Ratchaga
1.நான் உம்மைப் பற்றி இரட்சகா
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா
நான் சாட்சி கூறுவேன்

சிலுவையண்டையில்
நம்பி வந்து நிற்க்கையில்
பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

2.ஆ உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்

3.மா வல்ல வாக்கின் உண்மையைக்
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்

4.நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்

Virunthai Serumen Alaikirar விருந்தைச் சேருமேன் அழைக்கிறார்

Virunthai Serumen Alaikirar
1.விருந்தைச் சேருமேன் அழைக்கிறார்
ஆகாரம் பாருமேன் போஷிப்பிப்பார்
தாகத்தைத் தீர்க்கவும்
இயேசுவின் மார்பிலும்
சாய்ந்திளைப்பாறவும்
வா பாவி வா

2. ஊற்றண்டை சேரவும் ஜீவனுண்டாம்
பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்
நம்பி வந்தோருக்கு
திருப்தி உண்டாயிற்று
ஜீவாற்றின் அண்டைக்கு
வா பாவி வா

3. மீட்பரின் பாதமும் சேராவிடில்
தோல்வியே நேரிடும் போராட்டத்தில்
இயேசுவே வல்லவர்
இயேசுவே நல்லவர்
இயேசுவே ஆண்டவர்
வா பாவி வா

4. மோட்சத்தின் பாதையில் முன்செல்லுவாய்
சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்
வாடாத கிரீடமும்
ஆனந்த களிப்பும்
பேர் வாழ்வும் பெறவும்
வா பாவி வா

5. சேருவேன், இயேசுவே, ஏற்றுக்கொள்வீர்
பாவமும் அறவே சுத்தம்செய்வீர்
அப்பாலே மோட்சத்தில்
ஆனந்தக் கடலில்
மூழ்கிப் பேரின்பத்தில்
கெம்பீரிப்பேன்