நான்
உன்னை விட்டு விலகுவதில்லை
நான்
உன்னை என்றும் கைவிடுவதில்லை
நான்
உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி
போல் உன்னைக் காப்பேன்
1. பயப்படாதே
நீ மனமே – நான்
காத்திடுவேன்
உன்னை தினமே
அற்புதங்கள்
நான் செய்திடுவேன்
உன்னை
அதிசயமாய் நான் நடத்திடுவேன்
2. திகையாதே
கலங்காதே மனமே – நான்
உன்னுடனிருக்க
பயமேன்
கண்ணீர்
யாவையும் துடைத்திடுவேன் உன்
கவலைகள்
யாவையும் போக்கிடுவேன்
3. அனுதினம்
என்னைத் தேடிடுவாய் – நான்
அளித்திடும்
பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம்
போல் செழித்திடுவாய் நான்
ஆசையாய்
உண்ண கனி கொடுப்பாய்
4. நீதியின்
வலக்கரத்தாலே உன்னை
தாங்குவேன்
நான் அன்பினாலே
ஆவியில்
உண்மையாய் ஜெபித்திடுவாய்
தினம்
அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்