Thursday 9 June 2022

Naan Unnai Vittu Vilaguvathillai நான் உன்னை விட்டு விலகுவதில்லை


 


நான் உன்னை விட்டு விலகுவதில்லை

நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை

நான் உன்னைக் காண்கின்ற தேவன்

கண்மணி போல் உன்னைக் காப்பேன்

 

1. பயப்படாதே நீ மனமேநான்

காத்திடுவேன் உன்னை தினமே

அற்புதங்கள் நான் செய்திடுவேன்

உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்

 

2. திகையாதே கலங்காதே மனமேநான்

உன்னுடனிருக்க பயமேன்

கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் உன்

கவலைகள் யாவையும் போக்கிடுவேன்

 

3. அனுதினம் என்னைத் தேடிடுவாய் நான்

அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்

அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்

ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்

 

4. நீதியின் வலக்கரத்தாலே உன்னை

தாங்குவேன் நான் அன்பினாலே

ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய்

தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.