Tuesday, 8 March 2022

En Kiribai Unakku Pothum என் கிருபை உனக்குப் போதும்


 

என் கிருபை உனக்குப் போதும்

பலவீனத்தில் என் பெலமோ

பூரணமாய் விளங்கும்

 

1. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்

எனக்கே நீ சொந்தம்

பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்

எனக்கே நீ சொந்தம்

 

2. உலகத்திலே துயரம் உண்டு

திடன் கொள் என் மகனே

கல்வாரி சிலுவையினால்

உலகத்தை நான் ஜெயித்தேன்

 

3. உனக்கெதிரான ஆயுதங்கள்

வாய்க்காதே போகும்

இருக்கின்ற பெலத்தோடு

தொடர்ந்து போராடு

 

4. எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்

ஒடுங்கி நீ போவதில்லை

கலங்கினாலும் மனம் முறிவதில்லை

கைவிடப் படுவதில்லை


Monday, 7 March 2022

En Yesu Rajavukke என் இயேசு ராஜாவுக்கே


 

என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்

1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கிறேன்
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன்நான்

2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர் தேற்றினீர்

3. இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக
உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
ஓயாமல் பாடுவேன்நான்

4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீர்
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே

Sunday, 6 March 2022

Siluvaiyandayil Nambi Vanthu சிலுவையண்டையில் நம்பி வந்து


 

சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்

பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்

எந்த நேரமும் என துள்ளத்திலும்

பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

 

1. நான் உம்மைப் பற்றி இரட்சகா

வீண் வெட்கம் அடையேன்

பேரன்பைக் குறித்தாண்டவா

நான் சாட்சி கூறுவேன்

 

2. உந்தன் நல்ல நாமத்தை

நான் நம்பிச் சார்வதால்

நீர் கைவிடீர் இவ்வேழையைக்

காப்பீர் தேவாவியால்

 

3. மாவல்ல வாக்கின் உண்மையை

கண்டுணரச் செய்தீர்

நான் ஒப்புவித்த பொருளை

விடாமல் காக்கிறீர்

 

4. நீர் மாட்சியோடு வருவீர்

அப்போது களிப்பேன்

ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்

மெய்ப் பாக்கியம் அடைவேன்


Saturday, 5 March 2022

En Yesu Raja Sthothiram என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்


 

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
உயிருள்ள நாளெல்லாமே

1. இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம் பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே

2. துதி கன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலி தனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்

3. கூப்பிடும் யாவருக்கும்
 அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும் குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே

4. உலகத் தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு
புது வாழ்வு தந்து விட்டீர்


Thursday, 3 March 2022

Enni Enni Thuthi Seivai எண்ணி எண்ணி துதி செய்வாய்


 


எண்ணி எண்ணி துதி செய்வாய்

எண்ணடங்காத கிருபைகட்காய்

என்றும் தாங்கும் தம் புயமே

இன்ப இயேசுவின் நாமமே


1. உன்னை நோக்கும் எதிரியின்

கண்ணின் முன்னே பதறாதே

கண்மணிபோல் காக்கும் கரங்களில்

உன்னை மூடி மறைப்பாரே


2. யோர்தான் புரண்டு வரும்போல்

எண்ணற்ற பாரங்களோ

எலியாவின் தேவன் எங்கே

உந்தன் விசுவாச சோதனையில்


3. உனக் கெதிராகவே

ஆயுதம் வாய்க்காதே

உன்னை அழைத்தவர் உண்மை தேவன்

அவர் தாசர்க்கு நீதியவர்


4. திறந்த வாசல் முன்னே

தீவிரம் பிரவேசிப்போம்

ஒரு மனிதனும் பூட்ட மாட்டான்

உன் கர்த்தர் முன் செல்வார்


5. மனிதரை ஜனங்களை

மன்னவர் தருவாரே

நம் ஜீவனை ஈடாய் கொடுப்போம்

ஜீவன் தந்தவர் கேட்கிறாரே 


6. ஓட்டத்தை முடித்திட

கிரீடத்தை சூடிட

உதவிடுவார் உயர்த்திடுவார்

உந்தன் கண்ணீர் மாறிடுமே


7. சோர்ந்திடும் நேரத்தில்

சார்ந்திட தேவன் உண்டே

உலகத்தில் இருப்பவனிலும்

உன்னில் இருப்பவர் பெரியவரே


Ennalume Thuthippai எந்நாளுமே துதிப்பாய்




 


எந்நாளுமே துதிப்பாய்என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்

இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது

1. பாவங்கள் எத்தனையோநினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றி குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி

2. எத்தனையோ கிருபைஉன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி
நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால்.

3. நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு
இன்னும் இளமை போலாகவே செய்ததால்.

4. பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே சத்திய மேயிது.

5. மன்னிப்பு மாட்சிமையாம்- மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணூவாயோ கிழக்கு மேற்கின் தூரமே
மண்ணில் உன்பாவம் அகன்றத் தூரமே.

6. தந்தைதன் பிள்ளைகட்குதயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால்,
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே.


Wednesday, 2 March 2022

Yesu Swami Arul Natha இயேசு சுவாமி அருள் நாதா


 

எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை

1. இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே - ஐயா

2. அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே - ஐயா

3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன் - ஐயா

4. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர் தானையா - ஐயா

5. வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர் - என்னை

6. உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே - ஐயா

7. உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன் - ஐயா