Sunday 6 March 2022

Siluvaiyandayil Nambi Vanthu சிலுவையண்டையில் நம்பி வந்து


 

சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்

பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்

எந்த நேரமும் என துள்ளத்திலும்

பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

 

1. நான் உம்மைப் பற்றி இரட்சகா

வீண் வெட்கம் அடையேன்

பேரன்பைக் குறித்தாண்டவா

நான் சாட்சி கூறுவேன்

 

2. உந்தன் நல்ல நாமத்தை

நான் நம்பிச் சார்வதால்

நீர் கைவிடீர் இவ்வேழையைக்

காப்பீர் தேவாவியால்

 

3. மாவல்ல வாக்கின் உண்மையை

கண்டுணரச் செய்தீர்

நான் ஒப்புவித்த பொருளை

விடாமல் காக்கிறீர்

 

4. நீர் மாட்சியோடு வருவீர்

அப்போது களிப்பேன்

ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்

மெய்ப் பாக்கியம் அடைவேன்


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.