1. காலமோ செல்லுதே
வாலிபம் மறையுதே
எண்ணமெல்லாம் வீணாகும்
கல்வி எல்லாம் மண்ணாகும்
மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்
2. கருணையின் அழைப்பினால்
மரண நேரம் வருகையில்
சுற்றத்தார் சூழ்ந்திட
பற்றுள்ளோர் கதறிட
3. துன்பமெல்லாம் மறைந்துபோம்
இன்னல் எல்லாம் மாறிப்போம்
வியாதி எல்லாம் நீங்கிப்போம்
நாயகன் நம் இயேசுவால்
4. வாழ்க்கையை இயேசுவால்
நாட்களைப் பூரிப்பாய்
ஓட்டத்தை முடித்திட
காத்துக் கொள் விசுவாசத்தை
5. உலகத்தின் மாந்தரே
கலங்காது வாருமேன்
இயேசுவை அண்டினால்
கிலேசங்கள் மாறிப்போம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.