Thursday, 25 November 2021

Siluvaiyin Nilalil Anuthinam சிலுவையின் நிழலில் அனுதினம்


 

சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாறிடுவேன்

சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்சிலுவையின்

1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்து
தளர்ந்த என் ஜீவியமே
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகில்
ஏகுவேன் பறந்தே வேகம்சிலுவையின்

2. எவ்வித கொடிய இடறுக்கும் அஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன்
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார்சிலுவையின்

3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன்
திருமறை இன்னிசை நாதம்
தேனிலும் இனிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம்சிலுவையின்

Tuesday, 23 November 2021

En Yesuvae Ummai Allal என் இயேசுவே உம்மை அல்லால்


 

என் இயேசுவே உம்மை அல்லால்
மண்ணில் ஆறுதல்
ஒன்றும் கண்டிலேன்

1. சுக செல்வ மகிமை பெருமையிலெங்கும்
இன்பம் தரும் பொருள் காணேன்
தாகம் பெருகும் தண்ணீரேயன்றி
லோகம் வேறொன்றும் நல்காதே

2. ஆபத்துக் காலத்தில் அனுகூலமான
துணையும் நீர் பெலனுமே நாதா
ஆகையால் பூமி நிலை மாறினாலும்
அஞ்சேன் கடல் பொங்கினாலும்

3. பாழ்மணல் பாதையில் எரியும் வெயிலில்
பரனே உம் கிருபையின் நிழலில்
பாடி மகிழ்வேன் குருசை புகழ்வேன்
பேரின்ப நாட்டில் நான் வாழ்வேன்

4. என் நேசர் இயேசுவில் நித்தமும் சார்ந்து
பரதேச  யாத்திரை செய்வேன்
பாரினில் பொங்கும் துயரங்கள் தங்கும்
பாரங்கள் ஏதும் நானறியேன்

5. உமதன்பின் இனிமையை என்றும் ருசிப்பேன்
உலகின் வினைகள் மறப்பேன்
உருகும் என் நெஞ்சம் அருளும் நல் தஞ்சம்
பெருகும் என் இதயத்தின் இன்பம்

Friday, 19 November 2021




இஸ்ரவேலின் ஜெய பெலனே

சேனை அதிபதியே

முன்னே செல்லும் எங்கள் இயேசு

வெற்றி சிறந்தவரே

 

1. எகிப்தின் ஜனத்தை இருளும் பின்ன

திகைத்து தவித்தனரே

ஒளியில் என்றும் இஸ்ரவேலை

நடத்தி நிதமே காத்திடுவார்

 

2. கடலைப் பிளந்து வழியைத் திறப்பார்

கர்த்தர் பெரியவரே

பார்வோன் சேனை தொடர்ந்து வரினும்

துணிந்து முன்னே சென்றிடுவோம்

 

3. தேவ ஜனத்தின் எதிராய் தோன்றும்

சத்ரு வீழ்ந்திடுவான்

ஓங்கும் புயமும் தேவ கரமும்

தாங்கி நம்மை நடத்திடுமே

 

4. பாலைவனத்தில் பசியை ஆற்ற

மன்னா அளித்தனரே

நமது ஆத்ம தாகம் தீர்த்து

புதிய பெலனை அளித்திடுவார்

 

5. பொங்கி எழும்பும் யோர்தான் நதியை

தடுத்து நிறுத்தினாரே

அல்லல் யாவும் நீக்கி நம்மை

அக்கரையில் சேர்த்திடுவார்

Thursday, 18 November 2021

Aranum Kotaiyum அரணும் கோட்டையும்



 




அரணும் கோட்டையும்

பெலனாய் காப்பவர்

திடமாய் ஜெயித்திட

எனது என்றென்றும் துணையே

 

1. ஜீவ நம்பிக்கை நல்க

இயேசு மரித்து எழுந்தார்

அழிந்திடாத உரிமை பெறவே

மறு ஜென்மம் அடையச் செய்தார் - அரணும்

 

2. மகிழ்ச்சி ஆனந்தம் தங்க

மகிமை நம்பிக்கை ஈந்தார்

நீதிமானை செழிக்கச் செய்து

என்றென்றும் ஜெயம் நல்குவார் - அரணும்

 

3. தம்மால் மதிலை தாண்டி

உம்மால் சேனைக்குள் பாய்வேன்

எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன்

என்றென்றும் துணை செய்கின்றார் - அரணும்

 

4. வாழ்வில் முன்னேறிச் செல்ல

நல்ல நம்பிக்கை ஈந்தார்

கிருபை சொரிந்து அன்பை பொழிந்தார்

வளர்ந்தே நிலைத்திடுவோம்   - அரணும்

 

5. இருளை வெளிச்சமாக்க

ஒளியை அருளிச் செய்வார்

எந்தன் தீபம் நின்று எரிய

என்றென்றும் அருள் செய்குவார் - அரணும்


Jeevikirar Yesu Jeevikirar ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்


 

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்

1. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்

2. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே


Tuesday, 16 November 2021

என் மீட்பர் சென்ற பாதையில்


 


1. என் மீட்பர் சென்ற பாதையில்
நீ செல்ல ஆயத்தமா
கொல்கதா மலை வாதையில்
பங்கைப் பெறுவாயா

சிலுவையை நான் விடேன் (2)
சிலுவையை சிலுவையை
நான் விடேன்

2. ஊரார் இனத்தார் மத்தியில்
துன்பம் சகிப்பாயா
மூர்க்கர் கோபிகள் நடுவில்
திடனாய் நிற்பாயா

3. தாகத்தாலும் பசியாலும்
தோய்ந்தாலும் நிற்பாயா
அவமானங்கள் வந்தாலும்
சிலுவை சுமப்பாயா

4. பாவாத்மாக்கள் குணப்பட
நீ தத்தம் செய்வாயா
கோழை நெஞ்சர் திடப்பட
மெய்யுத்தஞ் செய்வாயா

5. லோகத்தார் மாண்டு போகிறார்
மெய் வீரர் இல்லாமல்
பார் மீட்பர் ஜீவனை விட்டார்
தொங்கிச் சிலுவையில்

6. வாழ்நாளெல்லாம் நிலை நின்று
சிலுவையை சுமப்பேனே
தேவ அருளினால் வென்று
மேல் வீட்டைச் சேருவேன்


Sunday, 14 November 2021

Anbe Anbe Anbe அன்பே அன்பே அன்பே


 


அன்பே அன்பே அன்பே
ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தமே

1. ஒரு நாளுந்தயை கண்டேனையா
அந்நாள் என்னை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா  என் மேல்
உம் தயை பெரிதையாஅன்பே

2. பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகரில் அன்பேனையா
ஆழம் அறிவேனோ  அன்பின்
ஆழம் அறிவேனோஅன்பே

3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே  எனையும்
அணைத்தீர் அன்பாலேஅன்பே

4. பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல்
வாடாதே ஐயா  அன்பு
வாடாதே ஐயாஅன்பே

5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் நான்
இசைக்கவும் எளிதாமோ பரத்தில்
இசைக்கவும் எளிதாமோஅன்பே