Sunday 10 October 2021

Athi Mangala Karananae அதி மங்கல காரணனே


 

அதி மங்கல காரணனே
துதி தங்கிய பூரணனே- நரர் வாழ
விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே

1. மதி மங்கின எங்களுக்கும்
திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்
மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிட வையாய் துங்கவனே

2. முடி மன்னர்கள் மேடையையும்
மிகு உன்னத வீடதையும்நீங்கி
மாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழ
வந்தனையோ தரையில்

3. தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்
வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று
வாழ்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ

Illaiparuthal Eenthidum இளைப்பாறுதல் ஈந்திடும்


 

1. இளைப்பாறுதல் ஈந்திடும் நாடே

இன்ப இயேசுவின் மோட்ச வீடே

புவி யாத்திரை தீர்ந்திடும் போதே

பரலோகம் அழைத்திடுமே

 

எந்தன் வஞ்சை உயர் சீயோன்

என்னை வந்தவர் சேர்த்துக் கொள்வார்

கண்ணீர் யாவையுமே  மிக  அன்புடனே

கர்த்தர் தாமே துடைத்திடுவார்

 

2. இந்த மண்ணுலகாசை வெறுத்தேன்

இப்புவி எந்தன் சொந்தமல்ல

இன்பம் எண்ணம் மனம் எல்லாம் இயேசு

இலக்கை நோக்கித் தொடருகிறேன்  - எந்தன்

 

3. நம் முன்னோர் பலர் அக்கரை மீதே

நமக்காகவே காத்திருக்க

விண்ணில் ஜீவ நதிக்கரை ஓரம்

வேகம் நானும் சேர்ந்து கொள்வேன்  - எந்தன்

 

4. அற்பமான சரீரம் அழிந்தே

அடைவேன் மறு ரூபமாக

புதுராகம் குரல் தொனியோடே

புதுப்பாட்டு பாடிடுவேன்எந்தன்

 

5. பரலோகத்தில் இயேசுவே அல்லால்

பரமானந்தம் வேறில்லையே

அங்கு சேர்ந்து அவர் முகம் காண்பேன்

ஆவல் தீர அணைத்துக் கொள்வேன் - எந்தன்

 

6. உண்மையாக உம் ஊழியம் செய்ய

உன்னத அழைப்பை ஈந்தீரே

தவறாமலே கர்த்தர்  கரத்தில்

தருவேன் என் ஆவியை நான்எந்தன்

Saturday 9 October 2021

Naan Sellum Paathai நான் செல்லும் பாதை


 

நான்செல்லும்பாதை என்
 நேசர்அறிவாரே
 நாசம்அணுகாமல்காப்பாரே

1. மரணப்பள்ளத்தாக்கிலும்நான்
வரும்எத்தீமைக்கும்அஞ்சேன்
கருத்தாய்க்காத்திட வாக்குத்தவறிடா
வல்ல ஓர்தேவன்உண்டெனக்கு   — நான்

2. கண்ணீரின்பள்ளத்தாக்கல்லோ இது
தண்ணீரில்லாப்பாலையன்றோ
கண்ணீரை மாற்றியே சந்தோஷம்பொங்கிடும்
தணணீர்த்தடாகமாய்மாற்றுவார் ‌ — நான்

3. பாடுகள்சகித்த இயேசு அவர்
நடந்த பாதை இதல்லோ
ஓடியே வீரனாம்இயேசுவை நோக்கியே
பாடுவேன்நம்பிக்கையுடனே   — நான்

4. மண்வாழ்வின்இன்பம்வெறுத்தேன் மேல்
விண்வாழ்வின்இன்பத்தைக்கண்டே
துன்பங்கள்மூலமாய்ச்சுத்தரானோருடன்
பொன்நகரம்சேர்ந்து வாழுவேன்‌   — நான்

5. ஆதரவாய்இடைகட்டி என்னை
ஆனந்தமாயோடச்செய்தார்
ஆவி அச்சாரத்தால்புத்திர சுவிகாரம்
ஆளுகையும்அன்று பெறுவேன்‌   -- நான்

6. மங்கள கீதம்முழங்க  சபை
எங்கும்துதிகளைச்சாற்ற
எங்களின்மன்னவன்மங்கிடா நீதியின்
செங்கோலும்ஓங்குமே நித்தியமாய்‌   -- நான்

Naan Ummai Uruthiyaga நான் உம்மை உறுதியாக


 

நான் உம்மை உறுதியாக
என்றென்றும் பற்றிடுவேன்
சமாதானம் பூரணமாய்
அளித்து என்றும் நடத்துவீர்

1. என் ஆத்துமாவின் வாஞ்சை நீர்
என் ஆவி உம்மைத் தேடும்
உந்தனின் பாதையில்
செம்மையாய் நடத்துவீர்நான்

2. நல் வாசல்கள் திறந்திட
உம் தாசர் உள்ளே செல்வார்
சத்தியம் காத்திட
கர்த்தனே அருள் செய்வீர்நான்

3. உம் நியாயங்கள் நிறைவேற
உம் வேளைக்காக வந்தோம்
தேவனே ராஜனே
ஜெயமதைத் தந்திடுவீர் நான்

4. என் கிரியைகள் அனைத்துமே
நீர் ஏற்று என்றும் காப்பீர்
நடத்தியே தாங்குவீர்
சமாதானம் அருள்வீர்நான்

5. உம் கைகள் எமக்காய் ஓங்கிட
உம் வல்லமை விளங்கும்
உம்மையே சார்ந்துமே
உம் புகழ் சாற்றிடுவோம்நான்

Friday 8 October 2021

Yaar Vendum Naatha யார் வேண்டும் நாதா


 

யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான வாழ்க்கை வெறுத்தேனையா

1. உம்மோடல்லாது வாழ்வது ஏன்
உம் உள்ளம் மகிழாது வாழ்வது ஏன்
மனம் போன வாழ்க்கை  வாழ்க்கையல்ல
வாழ்வேனே என்றும் உமக்காக நான்

2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்
பேரின்ப நாதா நீர் போதாதோ
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லால்

3. உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்

4. உற்றாரின் பாசம் உடன் வருமோ
மற்றோரின் நேசம் மாறாததோ
உம்மன்பின் நேசத்திற் கிணையாகுமோ
ஏனய்யா கேட்டீர் இக் கேள்வியை

5. என்னைத் தள்ளினால் நான் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்

Thursday 7 October 2021

Arpanithen Ennai Mutrilumai அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்


 

1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்

அனைத்தும் கிறிஸ்துவுக்கே  எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழுத்தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே

2. என் எண்ணம்போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்ட தாருமில்லை
உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்

3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான்புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்

4. பாதாளம் மரணம் அண்டக் கூடா
மாபெரும் அக்கினியாம் உந்தன் நேசம்
வெள்ளமோ ஆட்சியோ தணித்திடா
நேசமே உமக்கே நான் அடிமை

5. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறந்திட முற்றும் தந்தேன்

Wednesday 6 October 2021

Yesuvin Namamae Kiristhesuvin Namamae இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே


 

இயேசுவின் நாமமே
கிறிஸ்தேசுவின் நாமமே – வானம்
பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

1. மாந்தர் போற்றும் நாமம் – விண்
தூதர் வாழ்த்தும் நாமம்
பூவுலகோர் போற்றும்
மேன்மையான நாமம் – இயேசு

2. பாவம் போக்கும் நாமம் – தூய
வாழ்வளிக்கும் நாமம்
நித்திய ஜீவன் அருளும்
ஈடில்லாத நாமம் – இயேசு

3. பேய் நடுங்கும் நாமம் – கடும்
நோய் அகற்றும் நாமம்
நேற்றும் இன்றும் என்றும்
மாறிடாத நாமம் – இயேசு

4. இனிமை தங்கும் நாமம் – தீய
இன்னல் மாற்றும் நாமம்
இருளின் பயங்கள் நீக்கும்
ஈடில்லாத நாமம் – இயேசு

5. சாவை வென்ற நாமம் – பாவ
சாபம் போக்கும் நாமம்
சர்வ வல்ல நாமம்
இயேசுவின் நாமமே – இயேசு