இயேசு உன்னை
அழைக்கிறார்
இன்ப தொனி
பின் வாராயோ
இன்னல் தீர்க்க
வல்லவரை
இன்று நீ
நம்பிடுவாய்
1. வருந்தி
பாரங்கள் சுமந்த நீ
விரும்பி
சிலுவை நோக்கியே பார்
அருமை ஆண்டவர்
உனக்காக
சிறுமை அடைந்து
உயிர் தந்தாரே
2. உன் கையில்
நீ செய்த பாவத்திற்காய்
தன் கையில்
ஆணிகள் பாய்ந்திடவே
முள் முடி
சூடினார் உன் வினைக்காய்
மன்னிப்பு
இரட்சண்யம் உனக்களிப்பார்
3. மனந்திரும்பி
நீ மாறினாலோ
மறுபிறப்பை
நீ கண்டடைவாய்
இயேசுவை உன்
ஆத்ம இரட்சகராய்
ஏற்றுக்கொள்
கிடைக்கும் சமாதானமே
4. வல்லமை
உண்டவர் இரத்தத்திலே
வியாதியின்
வேரும் கூரும் முறியும்
கர்த்தரின்
காயங்கள் தழும்புகள்
சுத்தமாய்
உன்னையும் குணமாக்கிடும்
5. சத்திய
பரனே அழைக்கிறார்
நித்திய ஜீவனை
ஈந்திடுவார்
இயேசுவாலாகாத
தொன்றுமில்லை
இப்போதும் உன் தேவை வேண்டிக் கொள்வாய்