Saturday, 31 July 2021

Adimai Naan Aandavare அடிமை நான் ஆண்டவரே


 

அடிமை நான் ஆண்டவரேஎன்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்

1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்
எந்நாளும் வாசம் செய்யும்

2. உலக இன்பமெல்லாம்நான்
உதறித் தள்ளி விட்டேன்

3. பெருமை செல்வமெல்லாம்இனி
வெறுமை என்றுணர்ந்தேன்

4. வாழ்வது நானல்லஎன்னில்
இயேசுவே வாழ்கின்றீர்

5. என் பாவம் மன்னித்தருளும்உம்
இரத்தத்தால் கழுவிவிடும்

6. முள்முடி எனக்காகஐயா
கசையடி எனக்காக

7. என் பாவம் சுமந்து கொண்டீர்என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர்

Friday, 30 July 2021

Vaan Pugal Valla வான் புகழ் வல்ல


 

வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்

வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே

காத்திடும் கரமதின் வல்லமையை என்றும்

கனிவுடன் பாடியே போற்றிடுவோமே

 

1. யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம்

யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்

யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்

நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே — வான்

 

2. பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து

இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்

அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்

கர்த்தன் தம் சேனையால் காத்திடுவாரே — வான்

 

3. உக்கிரமாய் எரியும் அக்கினி நடுவில்

சுற்றி உலாவின நித்திய தேவன்

மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்

முற்றும் தம் தாசரைக் காத்திடுவாரே — வான்

 

4. சிறைச்சாலைக் கதவுகள் அதிர்ந்து நொறுங்க

சீஷரை சிறை மீட்டார் சத்திய தேவன்

சத்துருவின் எண்ணங்கள் சிதறுண்டு மாள

சேனைகளின் கர்த்தர் காத்திடுவாரே — வான்

 

5. அழைத்தனரே தம் மகிமைக்கென்றே எம்மை

தெரிந்தெடுத்தாரே தம் சாயலை அணிய

வழுவ விடாமலே காத்திடும் தேவன்

மாசற்றோராய் தம்முன் நிறுத்திடுவாரே — வான்

 

6. மகத்துவ தேவன் வானில் ஆயத்தமாக

மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்க

மணவாளன் வரும்வேளை அறியலாகாதே

மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர் — வான்

Thursday, 29 July 2021

Yesuve Unthan Masilla இயேசுவே உந்தன் மாசில்லா


 

1. இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்
எந்தனுக்காக சிந்தினீரே
கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்
அத்தனையும் எனக்காகவோ

மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்

2. என் மேல் பாராட்டின உமதன்புக்
கீடாய் என்ன நான் செய்திடுவேன்
நரகாக்கினையில் நின்று மீட்ட
சுத்த கிருபையை நித்தம் பாடுவேன்

3. எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல்
தாங்கக்கூடாத மா பாரமே
மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா
மன்னித்தும் மறந்தும் தள்ளினீர்

4. எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போது
வலக்கரத்தாலே தாங்குகின்றீர்
மனபாரத்தால் சோர்ந்திடும்போது
ஜீவ வார்த்தையால் தேற்றுகின்றீர்

5. எனக்காக நீர் யாவும் முடித்தீர்
உமக்காக நான் என்ன செய்வேன்
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்
சிலுவை சுமந்து வருவேன்

Wednesday, 28 July 2021

Nantriyaal Ponguthe Emathullam நன்றியால் பொங்குதே எமதுள்ளம்


 

நன்றியால் பொங்குதே எமதுள்ளம்

நாதன் செய்பல நன்மைகட்காய்

நாள்தோறும் நலமுடன் காத்தனரே

நன்றியால் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா

நன்றியால் ஸ்தோத்தரிப்போம்

 

1. கடந்த வாழ்நாளில்  கருத்துடனே

கண்மணிபோல் நம்மைக் காத்தனரே

கண்ணீர் கவலையினை மாற்றினாரே

கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா

கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் – நன்றியால்

 

2. ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து

ஜீவிய பாதை நடத்தினாரே

ஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம்

ஜீவனின் அதிபதியை அல்லேலூயா

ஜீவனின் அதிபதியை – நன்றியால்

 

3. அற்புத கரம் கொண்டு நடத்தினாரே

அதிசயங்கள் பல புரிந்தனரே

ஆயிரம் நாவுகள் தான் போதுமா

ஆண்டவரைத் துதிக்க அல்லேலூயா

ஆண்டவரைத் துதிக்க – நன்றியால்

 

4. பாவ சேற்றில் அமிழ்ந்த எம்மை

பாச கரம் கொண்டு தூக்கினாரே

கன் மலைமேல் நம்மை நிறுத்தி அவர்

கருத்துடன் காத்தனரே அல்லேலூயா

கருத்துடன் காத்தனரே – நன்றியால்

 

5. பொருத்தனை பலிகள் தினம் செலுத்தி

பொற்பரன் இயேசுவை வாழ்த்திடுவோம்

ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே

நேத்திரமாய் துதிப்போம் அல்லேலூயா

நேத்திரமாய் துதிப்போம் – நன்றியால்

 

Tuesday, 27 July 2021

Asaivaadum Aaviyae அசைவாடும் ஆவியே


 

அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே

1. பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே

2. தேற்றிடுமே உள்ளங்களை
இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால்

3. துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால்
நிறைத்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே

4. அலங்கரியும் வரங்களினால்
எழும்பி ஜொலித்திடவே
தந்திடுமே கனிகளையும்
நிறைவாக இப்பொழுதே

Monday, 26 July 2021

Arul Eralamai Peiyum அருள் ஏராளமாய் பெய்யும்


 

1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்

உறுதி வாக்கிதுவே

ஆறுதல் தேறுதல் செய்யும்

சபையை உயிர்ப்பிக்குமே

 

அருள் ஏராளம்

அருள் அவசியமே

அற்பமாய் சொற்பமாயல்ல

திரளாய்ப் பெய்யட்டுமே

 

2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்

மேகமந்தார முண்டாம்

காடான நிலத்திலேயும்

செழிப்பும் பூரிப்புமாம்அருள்

 

3. அருள் ஏராளமாய்ப் பெய்யும்

இயேசு  வந்தருளுமேன்

இங்குள்ள கூட்டத்திலேயும்

கிரியை செய்தருளுமேன்அருள்

 

4. அருள் ஏராளமாய்ப் பெய்யும்

பொழியும் இஷணமே

அருளின் மாரியைத் தாரும்

ஜீவ தயாபரரேஅருள்

Sunday, 25 July 2021

Ennuyire Ennuyire என்னுயிரே என்னுயிரே


 

என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே

காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான்

 

கண் காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும்

கரையாத அவரன்பு குறையாது

கண்ணாக எந்நாளும் காத்திடுவார்

 

துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்

துணையாளன் இருக்கின்றார் திகையாதே

தோள் மீது உனைத் தாங்கி நடத்திடுவார்

 

உலகெல்லாம் வெறுத்தாலும் உறவெல்லாம் மறந்தாலும்

உலகாளும் மன்னவன் உனக்குண்டு

என்றென்றும் தன் அன்பில் தேற்றிடுவார்