Tuesday 6 April 2021

Karthar Anbe Thooya Anbe கர்த்தர் அன்பே தூய அன்பே


 Karthar Anbe Thooya Anbe

கர்த்தர் அன்பே தூய அன்பே பக்தர்கள் போற்றும் அன்பே - என் இயேசுவின் அன்பு மா பெரிதே எப்படி பாடுவேனோ 1. ஆண்டவர் அன்பின் ஆழம் நீளம் அன்பின் அகலம் உயரம் கண்டேன் இயேசு பக்தருடன் சேர்ந்துணர்ந்தேன் இன்றதைப் பாடிடுவேன் - என் - கர்த்தர் 2. இந்த உலகத் தோற்றம் முன்னே அந்த மேலான அன்பினிலே மாசற்றோராக நிறுத்த எம்மை மாதேவன் தெரிந்து கொண்டார் - தம்முன் - கர்த்தர் 3. என் முழு ஆத்துமா மனதுடனே என் முழு சக்தி பெலத்துடனே தேவனிடம் அன்பு கூர்ந்திடவே தேடியே நாடிடுவேன் - என் - கர்த்தர் 4. குற்றமில்லாத அன்புடனே மற்றவரை நான் நேசிக்கவே கற்பனையில் பிரதானம் ஒன்றே கைக் கொண்டு வாழ்ந்திடுவேன் - அவர் - கர்த்தர் 5. சத்துருவான மித்திரனை சோதரன் தோழனாய் நேசித்தீரே பாதம் பணிந்தும்மை வேண்டுகின்றேன் பூரண அன்பருள்வீர் - திருப் - கர்த்தர் 6. ஜீவனைத் தந்த அன்பதுவே தேவனின் சேவை செய்திடவே கர்த்தர் வருகையை கண்டிடவே காத்திருந்தே அடைவேன்- என் - கர்த்தர் 7. ஆவியின் வரங்கள் ஒன்பதுவே ஆவியின் நற்கனி ஈந்திடுமே தேவ அருள் வரம் தேவை அதே தாகத்தைத் தீர்த்திடுமே - என்றும் - கர்த்தர்

Monday 5 April 2021

Um Rajjiyam Varungaalai உம் ராஜ்ஜியம் வருங்காலை


 Um Rajjiyam Varungaalai

1. உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே அடியேனை நினையும் என்பதாய் சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய். 2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார் எவ்வடையாளமும் கண்டிலாரே. நம் பெலனற்ற கையை நீட்டினார். முட் கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே. 3. ஆனாலும் மாளும் மீட்பர் மா அன்பாய் அருளும் வாக்கு இன்று என்னுடன் மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய் என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன். 4. கர்த்தாவே நானும் சாகும் நேரத்தில் என்னை நினையும் என்று ஜெபித்தே உம் சிலுவையை தியானம் செய்கையில் உம் ராஜ்யத்தைக் கண்ணோக்கச் செய்யுமே. 5. ஆனால் என் பாவம் நினையாதேயும் உம் ரத்தத்தால் அதைக் கழுவினீர் உம் திரு சாவால் பாவமன்னிப்பும் ரட்சிப்பும் எனக்காய்ச் சம்பாதித்தீர். 6. என்னை நினையும் ஆனால் உமக்கு என்னால் உண்டான துன்பம் கொஞ்சமோ சிலுவை நோவு ரத்த வேர்வையும் சகித்த நீர் இவை மறுப்பீரோ. 7. என்னை நினையும் நான் மரிக்கும் நாள் நீயும் என்னோடு தங்குவாய் இன்றே நற் பரதீஸில் என்னும் உம் வாக்கால் என் ஆவி தேர்ந்து மீளச் செய்யுமே.

Sunday 4 April 2021

Thuyarutra Venthare துயருற்ற வேந்தரே


 Thuyarutra Venthare

1. துயருற்ற வேந்தரே சிலுவை ஆசனரே நோவால் வாடும் முகத்தை இருள் திரை மூடிற்றே எண்ணிறந்த துன்பம் நீர் மௌனமாகச் சகித்தீர். 2. பலியாக மரிக்கும் வேளை வரும் அளவும் மூன்று மணி நேரமாய் துணையின்றி மௌனமாய் காரிருளில் தேவரீர் பேயோடே போராடினீர். 3. தெய்வ ஏக மைந்தனார் அபிஷேக நாதனார் தேவனே என் தேவனே என்தனை ஏன் கைவிட்டீர் என்றுரைக்கும் வாசகம் கேள் இருண்ட ரகசியம் 4. துயர் திகில் இருண்டே சூழும்போது தாசரை கைவிடாதபடி நீர் கைவிடப்பட்டிருந்தீர் இக்கட்டில் சமீபம் நீர் என்றிதாலே கற்பிப்பீர்

Siluvaiyai Patri Nintru சிலுவையைப் பற்றி நின்று


 Siluvaiyai Patri Nintru

1. சிலுவையைப் பற்றி நின்று துஞ்சும் மகனைக் கண்ணுற்று விம்மிப் பொங்கினார் ஈன்றாள் தெய்வ மாதா மயங்கினார் சஞ்சலத்தால் கலங்கினார் பாய்ந்ததாத்துமாவில் வாள். 2. பாக்கியவதி மாதா உற்றார் சிலுவையை நோக்கிப் பார்த்தார் அந்தோ என்ன வேதனை ஏக புத்திரனிழந்து துக்க சாகரத்தில் ஆழ்ந்து சோகமுற்றனர் அன்னை. 3. இணையிலா இடருற்ற அன்னை அருந்துயருற யாவரும் உருகாரோ தெய்வ மைந்தன் தாயார் இந்த துக்க பாத்திரம் அருந்த மாதாவோடழார் யாரோ 4. தம் குமாரன் காயப்பட முள்ளால் கிரீடம் சூட்டப்பட இந்த நிந்தை நோக்கினார் நீதியற்ற தீர்ப்புப் பெற அன்பர் சீஷர் கைவிட்டோட அவர் சாகவும் கண்டார். 5. அன்பின் ஊற்றாம் இயேசுஸ்வாமி உமதன்னைக்குள்ள பக்தி என்தன் நெஞ்சில் ஊற்றிடும் அன்பினால் என் உள்ளம் பொங்க அனல் கொண்டகம் உருக அருளைக் கடாட்சியும்.

Saturday 3 April 2021

koor Aani Thegam Paya கூர் ஆணி தேகம் பாய


 koor Aani Thegam Paya

1. கூர் ஆணி தேகம் பாய மா வேதனைப்பட்டார் பிதாவே இவர்கட்கு மன்னிப்பீயும் என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரை நல் மீட்பர் நிந்தியார் மா தெய்வ நேசத்தோடு இவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அவ்வுருக்கம் எனக்கே அச்செபம் அவ்வித மன்னிப்பையே எனக்கும் அருளும். 4. நீர் சிலுவையில் சாக செய்ததென் அகந்தை கடாவினேன் இயேசுவே நானுங் கூர் ஆணியை. 5. உம் சாந்தக் கண்டிதத்தை நான் நித்தம் இகழ்ந்தேன் எனக்கும் மன்னிப்பீயும் எண்ணாமல் நான் செய்தேன். 6. ஆ இன்ப நேச ஆழி ஆ திவ்விய உருக்கம் நிந்திப்போர் அறியாமல் செய் பாவம் மன்னியும்.

Saturday 20 March 2021

Karthave Ummai Nithame கர்த்தாவே உம்மை நித்தமே


 

1. கர்த்தாவே உம்மை நித்தமே

துதித்துப் போற்றுவேன்

எல்லோர் முன்னும் நான் உம்மையே

அறிக்கை பண்ணுவேன்


2. எவ்வித பாக்கியங்களும்

உம்மாலேதான் உண்டே

உண்டான எந்த நன்மைக்கும்

ஊற்றானவர் நீரே


3. இக்கட்டில் நாங்கள் கூப்பிட்டால்

நீர் கேட்டிரங்குவீர்

எங்களைச் சுத்த தயவால்

ரட்சித்துத் தாங்குவீர்


4. அநந்த வாழ்வையும் இனி

கொடுத்தருள்வீரே

அடியாருக்கு நற்கதி

அப்போதுண்டாகுமே


5. ஆ களிகூர்ந்து பூரித்து

மகிழ் என் உள்ளமே

பராபரன் தான் உனது

அநந்த செல்வமே


6. அவர் உன் பங்கு உன் பலம்

உன் கேடகம் நன்றாய்த்

திடப்படுத்தும் உன் திடம்

நீ கைவிடப்படாய்

Sunday 14 March 2021

Marithaare Kiristhesu மரித்தாரே கிறிஸ்தேசு


  Marithaare Kiristhesu

மரித்தாரே கிறிஸ்தேசு உனக்காகப் பாவி 1. திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே தீன தயாளத்வ மனுவேலே பாராய் - மரித்தாரே 2. லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே லோலாயமாய்ச் சிலுவையிலே பாராய் - மரித்தாரே 3. மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே மா பாடுபட்டுத் தரித்ததே பாராய் - மரித்தாரே 4. மன்னிப்புண்டாக்கவே மத்யஸ்தராக மாவாதைக்குள்ளானார் தாமே நீ பாராய் – மரித்தாரே