Tuesday 29 December 2020

Athi Maram Pol Ethanai அத்திமரம் போல் எத்தனை


 Athi Maram Pol Ethanai

அத்திமரம் போல் எத்தனை பேர்கள் வாழுகிறார்கள் தினம் அர்த்தமில்லாமல் கர்த்தர் இல்லாமல் வாழுகிறார்கள் 1. பார்க்க பார்க்க அழகாய் இருந்தது அத்திமரம் இயேசு ஆசையோடு க‌னியைத் தேடினார் ஏமாற்ற‌ம் இப்ப‌டித்தானே ம‌னித‌ர்க‌ள் வாழும் வாழ்க்கை ப‌ல‌ வேஷ‌ம் 2. ஊருக்குள்ளே உத்த‌ம‌ர் போல ந‌டிப்பார்க‌ள் ஆனால் உண்மையிலே அத்தி ம‌ர‌ம் போல் இருப்பார்க‌ள் பேசுவ‌தெல்லாம் வேத‌ங்க‌ள் போடுவ‌தெல்லாம் வேஷ‌ங்க‌ள் 3. ஊருக்கு எல்லாம் உபதேசங்கள் செய்தாலும் வெறும் புகழுக்காக தான தர்மம் செய்தாலும் அன்பு அதிலே இல்லையென்றால் வாழ்ந்து என்ன லாபம் தான் 4. ம‌னித‌னை ம‌ட்டும் ந‌ம்புவ‌தாலே ப‌ய‌னில்லை ஆனால் இறைவ‌னை ம‌ட்டும் ந‌ம்பிடுவாய் துன்ப‌மில்லை க‌வ‌லைக‌ள் எல்லாம் போக்கிடுவார் க‌ண்ணீர் எல்லாம் துடைத்திடுவார்

Sunday 27 December 2020

Yesuvai Pol Alagullore இயேசுவைப் போல் அழகுள்ளோர்


 Yesuvai Pol Alagullore

1. இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாருமில்லை பூவினில் இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் வெறும் 2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் --- பூரண 3. எருசலேம் குமாரிகள் எந்தனை வளைந்தோராய் உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார் --- பூரண 4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால் பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால் --- பூரண 5. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால் --- பூரண 6. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே --- பூரண

As With Gladness Men Of Old


 1. As with gladness men of old

did the guiding star behold as with joy they hailed its light leading onward beaming bright so most gracious God may we evermore be led to thee 2. As with joyful steps they sped Saviour to thy lowly bed there to bend the knee before thee whom heaven and earth adore so may we with willing feet ever seek thy mercy seat 3. As they offered gifts most rare at thy cradle rude and bare so may we with holy joy pure and free from sin’s alloy all our costliest treasures bring Christ to thee our heavenly king 4. Holy Jesus every day keep us in the narrow way and when earthly things are past bring our ransomed souls at last where they need no star to guide where no clouds thy glory hide 5. In the heavenly city bright none shall need created light Thou its light its joy its crown Thou its sun which goes not down There for ever may we sing alleluias to our king.

Saturday 26 December 2020

En Idhayam Yaarukku Theriyum என் இதயம் யாருக்கு தெரியும்


 En Idhayam Yaarukku Theriyum

என் இதயம் யாருக்கு தெரியும் என் வேதனை யாருக்கு புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னை தேற்றக் கூடும் (2) 1. நெஞ்சின் நோவுகள் அதை மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே (2) – என் 2. சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ (2) – என் 3. மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ (2) – என் 4.அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே (2) – என்

Thursday 24 December 2020

Perinba Nathiye பேரின்ப நதியே


 Perinba Nathiye

பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட பின் மாரியாக பொழிந்திடுமே (2) 1. எலியாவின் தேவன் எங்கே என்றானே சலியாமல் ஓடி சால்வை பெற்றானே பரலோக ராஜ்யம் பரிசுத்தவான்கள் பலவந்தமாக்கும் காலம் இதுவே (2) - பேரின்ப 2. மங்கும் திரிகள் நெரிந்த நாணல் தேங்கும் தண்ணீர்கள் போன்ற அநேகர் அனலுமில்லாத குளிருமில்லாத அனுபவத்தோடே ஜீவிக்கின்றாரே (2) - பேரின்ப 3. சவுலைப் பவுலாய் மாற்றிடும் தேவா சடுதி ஒளியால் சந்திக்கும் மூவா உலரும் எலும்பும் உயிரை அடையும் உயிர் மீட்சி தாரும் என் இயேசு நாதா (2) - பேரின்ப 4. பரிசுத்த ஆவி பெற்றிட வாரீர் பரிசுத்த தேவ அழைப்பை பாரீர் தேடுங்கள் கிடைக்கும் கேளுங்கள் தருவேன் தட்டுங்கள் திறப்பேன் என்றுரைத்தாரே (2) - பேரின்ப 5. ஊனர் குருடர் தீரா நோயாளர் ஊமை செவிடர் பேயால் பாடுவோர் அற்புத செயலால் வேண்டிடுவோமே ஆண்டவரிடமே வேண்டிடுவோமே (2) - பேரின்ப 6. சத்திய பரனை பக்தியுடனே நித்திய யுகமாய்ப் பாடிடுவேனே ஏதேனில் ஜீவ ஊற்றுகளருகே ஏழை என் தாகம் தீர்த்திடுவேனே (2) - பேரின்ப

Monday 21 December 2020

Deva Aseervatham Perugiduthe தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே


 Deva Aseervatham Perugiduthe

தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே துதிகள் நடுவே கர்த்தர் தங்க தூதர் சேனை தம் மகிமையோடிறங்க 1. எழும்பு சீயோனே ஒளி வந்ததே எரிந்திடும் விளக்கே திருச்சபையே காரிருளே கடந்திடுதே கர்த்தரின் பேரோளி வீசிடுதே --- தேவ 2. நலமுடன் நம்மை இதுவரையும் நிலைநிறுத்திடுதே அவர் கிருபை கண்மணிபோல் கடைசிவரை காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம் --- தேவ 3. குறித்திடும் வேளை உயர்த்திடுவார் கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம் தாழ்வில் நம்மை நினைத்தவரை வாழ்வினில் துதித்திட வாய் திறப்போம் --- தேவ 4. தெரிந்தெடுத்தார் தம் மகிமைக்கென்றே பரிந்துரைத்திடுவார் பிழைத்திடுவோம் இரட்சிப்பினால் அலங்கரித்தார் இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம் --- தேவ 5. பொருந்தொனி கேட்க ஏறிடுவோம் பரலோகந் திறந்தே அவர் வருவார் உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில் என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம் --- தேவ

Sunday 20 December 2020

Nam Devan Anbullavar நம் தேவன் அன்புள்ளவர்


 Nam Devan Anbullavar

நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர் நம் தேவன் நீதிபரர் நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே (2) 1. நன்மை ஏதும் ஒன்றும் நம்மில் இல்லையே என்ற போதும் நம்மை நேசித்தாரே ஆ அந்த அன்பில் மகிழ்வோம் அன்பரின் பாதம் பணிவோம் (2) --- நம் 2. அத்திமரம் துளிர் விடாமல் போனாலும் திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும் ஆ அவர் காயம் நோக்குவோம் அதுவே என்றும் போதுமே (2) --- நம் 3. வான மீதில் இயேசு இறங்கி வருவார் தேவ தூதர் போல மகிமை அடைவோம் ஆ எங்கள் தேவா வாருமே அழைத்து வானில் செல்லுமே (2) --- நம் 4. அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம் ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம் ஆ அந்த நாள் நெருங்குதே நினைத்தால் நெஞ்சம் பொங்குதே (2) --- நம்