Wednesday 3 June 2020

All Glory Laud And Honour



All glory laud and honour To thee, Redeemer, King, To whom the lips of children Made sweet hosannas ring 1. Thou art the King of Israel Thou David’s royal Son Who in the Lord’s name comest The King and Blessed One 2. The company of angels Are praising thee on high, And mortal men and all things Created make reply. 3. The people of the Hebrews With palms before thee went Our praise and love and anthems Before thee we present. 4. To thee, before thy passion, They sang their hymns of praise To thee, now high exalted, Our melody we raise. 5. Thou didst accept their praises; Accept the love we bring, Who in all good delightest Thou good and gracious King.

Jesus Keep Me Near



1. Jesus keep me near the cross there a precious fountain free to all a healing stream Flows from Calvary’s mountain. In the cross in the cross be my glory ever till my raptured soul shall find rest beyond the river 2. Near the cross a trembling soul Love and mercy found me there the Bright and Morning Star Sheds its beams around me. 3. Near the cross O Lamb of God Bring its scenes before me Help me walk from day to day with its shadow o’er me. 4. Near the cross I’ll watch and wait Hoping, trusting ever till I see my reach the golden strand just beyond the river

Vanthanam Vanthaname வந்தனம் வந்தனமே



Vanthanam Vanthaname வந்தனம் வந்தனமே தேவ துந்துமி கொண்டிதமே இதுவரையில் எமையே வளமாய் காத்த எந்துரையே மிகத் தந்தனம் 1. சந்ததஞ்சந்ததமே எங்கள் தகுநன்றிக் கடையாளமே நாங்கள் தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே --- வந்தனம் 2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்துவே எங்கள் சாமி பணிவாய் நேமி துதிபுகழ் தந்தனமே நிதமே --- வந்தனம் 3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிது சத்ய சருவேசுரனே கிருபாகரனே உன்சருவத்துக்குந் துதியே--- வந்தனம் 4. உந்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே --- வந்தனம் 5. மாறாப் பூரணனே, எல்லா வருடங்களிலும் எத்தனை உன்றன் வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே --- வந்தனம்

Kaalathin Arumaiyai Arinthu காலத்தின் அருமையை அறிந்து


















Kaalathin Arumaiyai Arinthu காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில் கண்ணீர் விடுவாயே ஞாலத்தின் பரனுனை நாட்டின நோக்கத்தைச் சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய் – கால 1. மதியை யிழந்துதீய வழியிலே நீ நடந்தால் வருங்கோபம் அறிந்திடாயோ கதியாம் ரஷண்ய வாழ்வைக் கண்டு நீ மகிழ்ந்திட காலம் இதுவே நல்லகாலம் என்றறியாயோ – கால 2. இகத்தினில் ஊழியம்அகத்தியம் நிறைவேற ஏசுனை அழைத்தாரல்லோ மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால் பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய் – கால 3. நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு நோக்கிப்பின் அழித்தாரன்றோ தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த தவணையின் காலமிவ் வருடமுடியலாமே – கால 4. முந்தி எரேமியாஅனனியாவுக் குரைத்த முடிவை நீ யறியாயோ எந்தக் காலமும் சிரஞ்சீவியென் றெண்ணிடாமல் ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ – கால

Tuesday 2 June 2020

Seer Thiree Yega Vasthe சீர்திரியேக வஸ்தே



Seer Thiree Yega Vasthe சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின் திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ பார்படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா நாருறுந் தூயவேதா நமோ நமோ நமோ --- சீர் 1. த‌ந்தைப் ப‌ராப‌ர‌னே நமோ நமோ எமைத் தாங்கி ஆத‌ரிப்போனே நமோ நமோ சொந்த‌க் குமார‌ன் த‌ந்தாய் சொல்ல‌ரும் ந‌ல‌மீந்தாய் எந்த‌விர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ--- சீர் 2. எங்க‌ள் ப‌வ‌த்தினாசா நமோ நமோ புது எருசலேம் நகர்ராசா நமோ நமோ எங்கும் நின் அரசேற எவரும் நின் புகழ்கூற‌ துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ--- சீர் 3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ, திட பலமளித் தெமைக்காவா நமோ நமோ கரிசித்துத்தா நற்புத்தி கபடற்ற மனசுத்தி திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ — சீர்

Aagamangal Pugaz ஆகமங்கள் புகழ்



Aagamangal Pugaz 1. ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ வாகு தங்கு குரு நாதா நமோ நமோ ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ --- அருரூபா 2. மாகமண்டல விலாசா நமோ நமோ மேகபந்தியி னுலாசா நமோ நமோ வான சங்கம விஸ்வாசா நமோ நமோ --- மனுவேலா 3. நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ காகமும் பணிசெய் சீலா நமோ நமோ நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ --- நரதேவா 4. ஏக மந்த்ரமுறு பூமா நமோ நமோ யூக தந்த்ரவதி சீமா நமோ நமோ ஏசு வென்ற திருநாமா நமோ நமோ --- இறையோனே 5. அறிவி னுருவாகிய மூலா நமோ நமோ மறையவர்கள் தேடிய நூலா நமோ நமோ அதிசய பராபர சீலா நமோ நமோ --- அருளாளா 6. பொறிவினை யுறாத சரீரா நமோ நமோ குறையணுவிலாத குமாரா நமோ நமோ புவன முழுதாள் அதிகாரா நமோ நமோ --- புதுவேதா 7. நிறைவழியின் மேவிய கோனே நமோ நமோ முறைகள் தவறாத விணோனே நமோ நமோ நிதிபெருகு மாரச தேனே நமோ நமோ --- நெறிநீதா 8. இறை தவிது பாடிய கீதா நமோ நமோ பாறைகள்பல கூடிய போதா நமோ நமோ எருசலை யினீடிய நாதா நமோ நமோ --- இறையோனே

Saturday 30 May 2020

Neer Thantha Nanmai Yavaiyum நீர் தந்த நன்மை யாவையும்

Neer Thantha Nanmai Yavaiyum 1. நீர் தந்த நன்மை யாவையும் நினைத்து, கர்த்தரே மகிழ்ச்சியோடு என்றைக்கும் நான் துதி செய்வேனே. 2. குழந்தைப் பருவமுதல் குறைவில்லாமலே எனக்களித்த நன்மைகள் ஏராளமானதே. 3. என்னோடு வாலிபத்திலும் இருந்தீர் தேவரீர் இக்கட்டுண்டான காலத்தும் விழாமல் தாங்கினீர். 4. அநேகமான தீமைகள் அண்டாமல் தடுத்தீர் கைம்மாறில்லாத நன்மைகள் கர்த்தாவே, பொழிந்தீர். 5. இம்மையில் என்றும் தாழ்மையாய் தெய்வன்பை நினைப்பேன்; மறுமையில் வணக்கமாய் உம்மையே போற்றுவேன். 6. புகழ்ச்சி துதி தோத்திரம் ஒன்றான உமக்கே இகத்திலும் பரத்திலும் எழும்பத் தகுமே.