Intha Kaalam Pollathathu
இந்த காலம் பொல்லாதது
உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்
நீ வாழும் வாழ்க்கை தான்
அது வாடகை வீடு தான்
1. உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவர்
இன்னும் காத்து வருகிறார் --- இந்த
2. வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா
சாத்தான் களத்தினில் போரிட
ஜெய வீரனாய் திகழ வா --- இந்த
3. பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே
சத்திய தேவனின் வார்த்தையோ
நித்திய ஜீவனை அருளுமே --- இந்த
4. காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே
மனம் திரும்பி நீ வாழவே
மன்னன் இயேசுன்னை அழைக்கிறார் --- இந்த
Narkarunai Naathane
நற்கருணை நாதனே
சற்குருவே அருள்வாய் பொறுமை (2)
1. கோதுமை கனிமணி போல்
தீ திலோர் குண நலன்கள்
யோக்கியமாய் சேர்ந்திடவே
தூயனே அருள் மழை பொழிவாய் (2)
2. திராட்சை கனி ரசமே
தெய்வீக பானமதாம்
பொருளினில் மாறுதல் போல்
புவிக்கொரு புது முகம் நல்கிடுவார் (2)
3. சுவை மிகு தீங்கனியே
திகட்டாத தேன் சுவையே
தித்திக்கும் கிருபையினாலே
எங்களை மார்பினில் அணைத்து கொள்வார் (2)
4. தேடி வந்தவரே
தினம் உனதன்பாலே
தாய் மனம் போல் அருளி
தாரணி செழித்தோங்கிடவே (2)
Yesuvai Thuthiungal Entrum
இயேசுவை துதியுங்கள் என்றும்
இயேசுவை துதியுங்கள் (2)
மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை
என்றென்றும் துதியுங்கள் (2) --- இயேசு
1. ஆற்றலும் அவரே அமைதியும் அவரே
அன்பரை துதியுங்கள் (2)
சர்வ வல்லமையும் பொருந்திய நமது
இயேசுவை துதியுங்கள் (2) --- இயேசு
2. ஆவியின் அருளால் பாவி நமை சேர்த்த
தலைவனை துதியுங்கள் (2)
நீதி வழி நின்று நேர்மை வழி சென்ற
நேயனை துதியுங்கள் (2) --- இயேசு
3. பாவியை ரட்சிக்க பூமியில் தோன்றிய
பரமனைத் துதியுங்கள் (2)
ஆசை கோபம் களவுகள் மறந்த
கர்த்தனைத் துதியுங்கள் (2) --- இயேசு
Niyaaya Theerpu Naalana
நியாய தீர்ப்பு நாளான அந்த நாள்
மகா பெரிய நாள் இந்த பூவிலுள்ளோர்
அனைவரும் நடுங்கும் நாள் --- அந்த நாள்
1. நீதியும் அநீதியும் பிரிக்கப்படுமே அவரவர்
ஜீவனும் ஆக்கினையும் அடைந்திடவே
2. சிறியவரும் பெரியவரும் ஏகமாய் நிற்க அங்கு
தங்கள் தங்கள் கிரியைகளின் பங்கைப் பெற்றிட
3. வலது புறத்தில் நிற்போரேல்லாம் ஆசி பெற்றிட அன்று
இடது புறத்தில் நிற்போரேல்லாம் சபிக்கவேப் பட
4. இம்மையிலே இயேசுவுக்காய் ஜீவிப்பாயானால் திட்டம் நன்மையாலே உன்னை அவர் நிரப்பிடுவாரே
Immanuvelin Ratha Ootratho
இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ
என் பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ
அல்லேலூயா பாரதோ கல்வாரியிலே அதோ
ஐந்தாறு கூடி ஓடுது
அன்பின் இன்ப வெள்ளம் பெருகுது (2)
1. பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமே
நீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே
2. பாவியான கள்ளனும் மா ஊற்றில் மூழ்கினான்
பாவ மன்னிப் பானந்தமும் கண்டு பூரித்தான்
3. ஆவியில் நிறைத்து தேவ சாயலாக்கினார்
தூய ரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார்
4. பிசாசு உலகம் மாம்சம் மூன்றும் ஜெயித்த ரத்தமே
பின்னடையா சிலுவை கொடி உயர்த்துவோம் நாமே