Monday, 13 January 2020

Melogathai Nadukirom மேலோகத்தை நாடுகிறோம்

Melogathai Nadukirom 1. மேலோகத்தை நாடுகிறோம் அதின் ஜோதிப் பிரகாசத்தையும் பேரின்பமாம் இன்பக் கடல் பார்த்தால் என்னமாயிருக்கும் பார்த்தால் பார்த்தால் பார்த்தால் என்னமாயிருக்கும் பேரின்பமாம் இன்பக் கடல் பார்த்தால் என்னமாயிருக்கும் 2. நம் மீட்பரின் வாசஸ்தலம் அவர் ரத்தத்தால் மீட்கப்பட்டோர் மேலோகத்தை நாடிடுவார் பார்த்தால் என்னமாயிருக்கும் 3. திரியேக தேவனை தாம் நாம் நேரில் கண்டானந்திப்போம் பாவம் சாபம் நீங்கலாகி பார்த்தால் என்னமாயிருக்கும்

Sunday, 12 January 2020

Yesu Entra Thiru Namathirku இயேசு என்ற திருநாமத்திற்கு

Yesu Entra Thiru Namathirku இயேசு என்ற திருநாமத்திற்கு எப்போதுமே மிக ஸ்தோத்திரம் 1. வானிலும் பூவிலும் மேலான நாமம் வல்லமையுள்ள நாமமது தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – இயேசு 2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த வீரமுள்ள திரு நாமமது நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே – இயேசு 3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கப் பாரினில் வந்த மெய் நாமமது பரலோகத்தில் சேர்க்கும் நாமமது – இயேசு 4. உத்தம பக்தர்கள் போற்றித்துதித்திடும் உன்னத தேவனின் நாமமது உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது – இயேசு 5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில் தாங்கி நடத்திடும் நாமமது தடைமுற்று மகற்றிடும் நாமமது – இயேசு

Inba Yesuvaiye Thinam Thuthithiduven இன்ப யேசுவையே தினம் துதித்திடுவேன்

Inba Yesuvaiye Thinam இன்ப யேசுவையே தினம் துதித்திடுவேன் புகழ் பாடி மகிழ்ந்திடுவேன் இனிமை சுகமே அளித்தோர் அவரை பண்பாடி வாழ்த்திடுவேன் (2) --- இன்ப 1. கோரத்தின் எல்லைப் புயலினில் பேரலை வீசும் கடலினில் மாளும் பாவி என்னைத் தூக்கி தோளில் தாங்கி கரை சேர்த்தார் மகிபன் அருளின் வடிவாம் அவரை மகிழ்வாய் பாடுகிறேன் --- இன்ப 2. மாந்தர் கைவிட்ட வேளைதனில் மாமன்னன் யேசு சேர்த்துக் கொண்டார் ஜீவ ரத்த மதால் மீட்டார் தூய வாழ்வு தனைத் தந்தார் மகவாய் எடுத்தே அணைத்தார் கரத்தில் மகிழ்வாய் பாடுகிறேன் --- இன்ப 3. வானக வேந்தன் என்றென்றுமே வாழ்ந்திடத் தந்தேன் என்னுள்ளமே வான தூதர் போல நானும் வாழ்வு காண வாக்குத் தந்தார் வருவார் அழைப்பார் வானகம் செல்லுவேன் வல்லோனை வாழ்த்திடுவேன் --- இன்ப

Friday, 10 January 2020

Aandavar Padaitha Vetriyin Naalithu ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது

Aandavar Padaitha Vetriyin Naalithu ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா தோல்வி இல்லை அல்லேலூயா வெற்றி உண்டு 1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர் என் பக்கம் இருக்கிறார் – 2 உலக மனிதர்கள் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும் – 2 தோல்வி இல்லை எனக்கு வெற்றி பவனி செல்வேன் தோல்வி இல்லை நமக்கு வெற்றி பவனி செல்வோம் 2. எனது ஆற்றுலும் எனது பாடலும் எனது மீட்புமானார் – 2 நீதிமான்களின் சபைகளிலே வெற்றி குரல் ஒலிக்கட்டும் – 2 – தோல்வி 3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும் மூலைக்கல்லாயிற்று – 2 கர்த்தர் செயல் இது அதிசயம் இது கைத்தட்டிப் பாடுங்களேன் – 2 – தோல்வி 4. என்றுமுள்ளது உமது பேரன்பு என்று பறை சாற்றுவேன் – 2 துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன் துணையாய் வந்தீரய்யா – 2 – தோல்வி

Arputhar Arputhar Arputhar அற்புதர் அற்புதர் அற்புதர்

Arputhar Arputhar Arputhar அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர் இயேசு அற்புதர் அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர் எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள் சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் – அற்புதர்
1. என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும் தீர்த்த இயேசு அற்புதர் எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும் காத்த இயேசு அற்புதர் உலகத்தில் இருப்போனிலும் – எங்கள் இயேசு பெரியவர் அற்புதரே உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும் இயேசு அற்புதரே – எல்லோரும்
2. அலைகடல் மேலே நடந்தவர் எங்கள் இயேசு அற்புதர் அகோர காற்றையும் அமைதிப்படுத்திய இயேசு அற்புதர் அறைந்தனர் சிலுவையிலே ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு அற்புதரே – எல்லோரும்

Thursday, 9 January 2020

Inba Yesu Rajavai Naan இன்ப இயேசு ராஜாவை நான்

Inba Yesu Rajavai Naan இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் 1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு கறை திரை அற்ற பரிசுத்தரோடு ஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் 2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் 3. முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன் பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன் 4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே அல்லேலூயா ஆமென் அல்லேலூயா வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா 5. ஆஹா எக்காளம் என்று முழங்கிடுமோ ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ அப்பா என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமே

Wednesday, 8 January 2020

Kanden Kalvariyin Katchi கண்டேன் கல்வாரியின் காட்சி

Kanden Kalvariyin Katchi கண்டேன் கல்வாரியின் காட்சி கண்ணில் உதிரம் சிந்துதே அன்பான அண்ணல் நம் இயேசு நமக்காய் பட்ட பாடுகள் 1.பாவ உலகினிலே ஜீவிக்கும் மானிடரே பாரும் அவர் உனக்காய் குருதி சிந்தும் காட்சி 2.கல்வாரி மலை மீதிலே கள்ளர்கள் மத்தியிலே சிலுவையில் அறைந்தனரே எனக்காய் சிந்தும் காட்சி 3.என் ஆத்ம நேசரே என் இயேசு இன்பரே என்றும் நான் உமக்காய் நல் சேவை செய்திடுவேன்