Thinam Thinam Nam Devanaiye
தினம் தினம் நம் தேவனையே
மனம் மகிழ்ந்து துதித்திடுவோம் (2)
1.இரக்கம் உருக்கம் நிறைந்தவரே
மறவாமல் நம்மை காப்பவரே (2)
சிறந்த நாமம் உடையவரே
அரணான துணையாய் இருப்பவரே (2) - தினம்
2.அன்பின் உருவம் உடையவரே
ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தாரே (2)
ஆறுதல் எல்லோருக்கும் தருபவரே
அன்னையை போல அணைப்பவரே (2) - தினம்
3.விண்ணில் மகிமை உடையவரே
மண்ணில் சமதானம் தருபவரே (2)
என்னில் தினமும் வாழ்பவரே
உன்னில் அழைத்தால் வருபவரே (2) - தினம்
Ponnana Neram Ven Pani
பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்
தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்
1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக
பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க
பிறந்து வந்தார்
உலகை ஜெயிக்க வந்தார்
அல்லேலுயா பாடுவோம்
மீட்பரை வாழ்த்துவோம்
2. உண்மையின் ஊழியம் செய்திடவே
வானவர் இயேசு பூவில் வந்தார்
வல்லவர் வருகிறார்
நம் மேய்ப்பர் வருகிறார்
அல்லேலுயா பாடுவோம்
மேய்ப்பரை வாழ்த்துவோம்
3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து
வேதத்தின் ஓளியை பரப்பினாரே
இருளை அகற்றுவார்
நம்மை இரட்சித்து நடத்துவார்
அல்லேலுயா பாடுவோம்
தேவ மைந்தரை வாழ்த்துவோம்
Yesu Manidanai Piranthar
இயேசு மானிடனாய் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்
1.மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள்
மந்தையைக் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனைத் துதித்தனரே--- இயேசு
2.ஆலோசனை கர்த்தரே இவர்
அற்புதமானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே --- இயேசு
3.மாட்டுத் தொழுவத்திலே பரன்
முன்னணையில் பிறந்தார்
தாழ்மையைப் பின்பற்றுவோம் அவர்
ஏழ்மையின் பாதையிலே --- இயேசு
4.பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப்
போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே – வான
சாஸ்திரிகள் பணிந்தனரே --- இயேசு
5.அன்னாளும் ஆலயத்தில் அன்று
ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே கூறி
தூயனைப் புகழ்ந்தனரே --- இயேசு
6.யாக்கோபில் ஓர் நட்சத்திரம் இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார் --- இயேசு