Thursday, 31 March 2022

Vatraatha Neerutru Poliruppaai வற்றாத நீரூற்று போலிருப்பாய்


 


வற்றாத நீரூற்று போலிருப்பாய்

வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்

கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்

காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்

 

1. வாய்க்கால்கள் ஓரம்

நடப்பட்ட மரமாய்

எப்போதும் கனி கொடுப்பாய்

தப்பாமல் கனி கொடுப்பாய்

 

2. ஓடும் நதி நீ

பாயும் இடத்தில்

உயிரெல்லாம் பிழைத்திடுமே

சுகமாக வாழ்ந்திடுமே

 

3. பலநாட்டு மக்கள்

உன் நிழல் கண்டு

ஓடி வருவார்கள்

பாடி மகிழ்வார்கள்

 

4. பஞ்ச காலத்தில்

உன் ஆத்துமாவை

திருப்தியாக்கிடுவார்

தினமும் நடத்திடுவார்

 

5. கோடைக் காலத்தில்

வறட்சிக் காலத்தில்

அச்சமின்றி இருப்பாய்நீ

ஆறுதலாய் இருப்பாய்


Yaar Ennai Kaivittalum யார் என்னைக் கைவிட்டாலும்


 


யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்

1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்

2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே

3. எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்

4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே

5. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே

6. எனக்காகவே காயப்பட்டார்
என் நோய்கள் சுமந்து கொண்டார்


Tuesday, 29 March 2022

Mannorai Meetka Vantha Rajave மண்ணோரை மீட்க வந்த ராஜாவே


 


1. மண்ணோரை மீட்க வந்த ராஜாவே

விண்ணின்று மீண்டும் வாருமே

மண்ணோராம் எம்மை விண்ணோடு சேர்க்க 

விண் தூதரோடு வாருமே

 

பின்பற்றுவோர்க்கு பிதாவின் வீட்டில்

பேரின்பத்தோடு வாழ்வதற்கு

வாசஸ்தலங்கள் உண்டென்று சொல்லி

சென்ற எம் தேவா வாருமே

 

2. அறியாத நேரம் வருவேனென்றீரே

அடியார்கள் என்றும் ஊக்கத்தோடே

விசுவாசம் அன்பு நம்பிக்கையோடு

விழித்திருக்க அன்பால் அருள் தாருமே

 

நித்திரை செய்யும் தேவ தாசரும்

இத்தரை வாழ்வு பெற்ற நாமும்

கீர்த்தனம் பாடி எதிர்கொண்டு செல்ல

கெம்பீரமாக வாருமே


Monday, 28 March 2022

Magimaiyin Nambikkaiye மகிமையின் நம்பிக்கையே

 





மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா
உம்மையல்லோ பற்றிக்கொண்டேன்
உலகத்தில் வெற்றி கொண்டேன்

துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
தூயவர் உம்மை நான் பாடுவேன்

1. ஆத்துமாவின் நங்கூரமே
அழிவில்லா பெட்டகமே
நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
நிம்மதியின் கன்மலையே

2. பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பயமில்லை பாதிப்பில்லை
உம் குரலோ கேட்குதையா
உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா

3. நல் மேய்ப்பரே நம்பிக்கையே
நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
உம் தோளில் தான் நானிருப்பேன்

4. பிரகாசிக்கும் பேரொளியே
விடிவெள்ளி நட்சத்திரமே
உம் வசனம் ஏந்திக் கொண்டு
உலகெங்கும் சுடர்விடுவேன்


Magimai Umakkantro மகிமை உமக்கன்றோ


 


மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கன்றோ

ஆராதனை ஆராதனை என்
அன்பர் இயேசுவுக்கே

1.விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தீர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்

2.வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே

3.எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக

4.உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதிசயமன்றோ
உம் தூய வழிகள் நேர்மையான
சத்திய தீபமன்றோ


Saturday, 26 March 2022

Puthiya Paadal Paadi புதிய பாடல் பாடி


 

புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

1. கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன் தந்தார் ஆவியாலேஎனக்கு

2. உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்
புவிதனில் தருபவரேதினமும்

3. அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமை உள்ள தேவா
வரங்களின் மன்னவனேஎல்லா

4. கூப்பிட்டேன் பதில் வந்தது
குறைவெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா அவர்
மகத்துவமானவரேஇயேசு

5. மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
கோபமோ ஒரு நிமிடம்
கிருபையோ நித்தம் நித்தம்அவர்

Friday, 25 March 2022

Priyamanavane Un Aathuma பிரியமானவனே உன்ஆத்துமா




 

பிரியமானவனேஉன்
ஆத்துமா வாழ்வது போல்நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே

1. வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்து போராடி வெற்றி பெறு

2. பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான் கால்கள் உனக்குண்டு மறவாதே

3. ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓடு மகனே
நெருங்கி வரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே

Pithave Aaraathikkintrom பிதாவே ஆராதிக்கின்றோம்

 

                              



பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

ஆராதிக்கின்றோம்
ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம்

1. மகனாக தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே

2. சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே

3. ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்

4. பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே

5. உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்










Wednesday, 23 March 2022

Nesare Um Thiru Paatham நேசரே உம் திரு பாதம்

 




நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித் துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே

அடைக்கலமே அதிசயமே
ஆராதனை ஆராதனை

1. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதய்யா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா

வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை

2. பலியான செம்மறி பாவங்களெல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே

பரிசுத்தரே படைத்தவரே
ஆராதனை ஆராதனை

3. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
உம்மை பிரியேன் ஐயா
சித்தமே செய்து சாட்சியாய் வாழ்வேன்
நிச்சயம் நிச்சயமே

இரட்சகரே இயேசு நாதா
ஆராதனை ஆராதனை









Natha Um Thirukarathil நாதா உம் திருக்கரத்தில்


 


நாதா உம் திருக்கரத்தில் இசைக்கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல்

1. ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே அதிசயமே  

2. எங்கே நான் போக உம் சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்

3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன்

4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா -- உம்

5. ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்


Tuesday, 22 March 2022

Kuthukalam Kondattame குதூகலம் கொண்டாட்டமே


 


குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில்

1. பாவமெல்லாம் பறந்தது
நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால்

2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே

3. வல்லவராம் இயேசு
வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றி தந்தார்
ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம்

4. எக்காள சத்தம் தூதர்கள் கூட்டம்
நேசர் வருகின்றார்
ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம்


Monday, 21 March 2022

Devanuke Magimai தேவனுக்கே மகிமை


 


தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை --- என்னை
ஐயா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க

1. உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும்இந்தப்

2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம்
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமேஇந்தப்

3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலேஎங்கள்

4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும்
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமேஇன்று

5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனேபாவக்

 


Sunday, 20 March 2022

Theiveega Koodarame தெய்வீகக் கூடாரமே


 


தெய்வீகக் கூடாரமே என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

1. கல்வாரி திருப்பீடமே
கறை போக்கும் திரு இரத்தமே
உயிருள்ள பரிசுத்த ஜீவ பலியாக
ஓப்புக் கொடுத்தோம் ஐயா

2. ஈசோப்புல்லால் கழுவும்
இன்றே சுத்தமாவோம்
உறைகின்ற பனி போல வெண்மையாவோம் ஐயா
உம் திரு வார்த்தையினால்

3. அப்பா உம் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்

4. உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரிய விடும்

5. தூபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்

6. ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடாரத்திற்குள்ளே
மகிமையில் நுழைந்து விட்டோம்


Saturday, 19 March 2022

Sarva Sirushtikkum சர்வ சிருஷ்டிக்கும்


 


சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம்
என்றென்றும்
பணிந்து தொழுவோம்

ஆ ஆ ஆ.. அல்லேலூயா (7)  ஆமென்

1. வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும்
மாறாதே
இவ்வாழ்க்கை அழிந்து மறைந்துபோம்
விசுவாசி
என்றென்றும் நிலைப்பான்

2. கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே

3. எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயத்தை உம்மிடம் படைக்கின்றோம்
ஏங்குகின்றோம் உம் ஆசீர்பெறவே

4. சபையின் அஸ்திபாரமும் நீரே
சபையின் தலையானவர் நீரே
சபையை போஷித்து பாதுகாத்தென்றுமே
பார்த்துக் கொள்ள வருபவர் நீரே


Friday, 18 March 2022

Ellam Padaitha Namathu எல்லாம் படைத்த நமது


 


1. எல்லாம் படைத்த நமது

தயாபர பிதாவுக்கு

அனந்த காலமாக

அல்லேலூயா மகத்துவம்

பெலன் புகழ்ச்சி ஸ்தோத்திரம்

உண்டாய் இருப்பதாக

பார்ப்பார் காப்பார்

வல்லமையும் கிருபையும் அன்பும் எங்கும்

அவர் செய்கையால் விளங்கும்

 

2. மா நீசருக்கு மீட்பரும்

கர்த்தாவுமாம் சுதனுக்கும்

ரட்சிப்பின் அன்புக்காக

அல்லேலூயா புகழ்ச்சியும்

அநந்த ராஜரீகமும்

உண்டாய் இருப்பதாக

பாவம் சாபம்

எந்தத் தீங்கும் அதால் நீங்கும் என்றென்றைக்கும்

பாக்கியம் எல்லாம் கிடைக்கும்

 

3. மனந்திரும்பி  எங்களைப்

பர்த்தாவாம் யேசுவண்டையே

அழைத்து நேர்த்தியாகச்

சிங்காரிக்கும் தேவாவிக்கும்

அல்லேலூயா புகழ்ச்சியும்

வணக்கமும் உண்டாக

வான ஞான

வாழ்வினாலும் செல்வத்தாலும் தேற்றிவாறார்

அதின் முன் ருசியைத் தாரார்

 

4. எல்லா ஜனங்களாலேயும்

பிதா குமாரன் ஆவிக்கும்

அநந்த காலமாக

அல்லேலூயா மகத்துவம்

பலம் புகழ்ச்சி ஸ்தோத்திரம்

உண்டாய் இருப்பதாக

ஆமென் ஆமென்

நீர் ஆனந்தம் ஆதியந்தம் பரிசுத்தம்

பரிசுத்தம் பரிசுத்தம்.


Wednesday, 16 March 2022

Kalamo Selluthe காலமோ செல்லுதே


 


1. காலமோ செல்லுதே

வாலிபம் மறையுதே

எண்ணமெல்லாம் வீணாகும்

கல்வி எல்லாம் மண்ணாகும்

 

மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்

அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

 

2. கருணையின் அழைப்பினால்

மரண நேரம் வருகையில்

சுற்றத்தார் சூழ்ந்திட

பற்றுள்ளோர் கதறிட

 

3. துன்பமெல்லாம் மறைந்துபோம்

இன்னல் எல்லாம் மாறிப்போம்

வியாதி எல்லாம் நீங்கிப்போம்

நாயகன் நம் இயேசுவால்

 

4. வாழ்க்கையை இயேசுவால்

நாட்களைப் பூரிப்பாய்

ஓட்டத்தை முடித்திட

காத்துக் கொள் விசுவாசத்தை

 

5. உலகத்தின் மாந்தரே

கலங்காது வாருமேன்

இயேசுவை அண்டினால்

கிலேசங்கள் மாறிப்போம்


Monday, 14 March 2022

Kalangathe Kalangathe கலங்காதே கலங்காதே


 


கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்

1. முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடுநீ

2. கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வாநீ

3. காலமெல்லாம் உடனிருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார்உன்னை

4. உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம்தம்பி (நீ)
மறைவாக இருக்காதே

5. உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்

6. உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்