Tuesday 31 May 2022

Jeevanulla Devan Ennodirupathal ஜீவனுள்ள தேவன் என்னோடிருப்பதால்


 


ஜீவனுள்ள தேவன் என்னோடிருப்பதால்

எனக்கு என்ன கவலை

ஜீவனுள்ள தேவன் என்னோடிருப்பதால்

எனக்கு ஏது கவலை

இல்லை கவலை எனக்கு இல்லை கவலை

ஏது கவலை எனக்கு ஏது கவலை

 

1. அஞ்சாதே முதலும் முடிவும் நான் என்றதால்

எனக்கு ஏன் கவலை

ஆபத்து காலத்தில் தப்புவிப்பேன் என்றதால்

பயமே எனக்கு இல்லை

 

2. வாக்கு மாறா வல்லவர் என்னோடிருப்பதால்

எனக்கு ஏன் கவலை

சர்வ வல்லவர் நிழலில் நான் உள்ளதால்

பயமே எனக்கு இல்லை

 

3. வாதை உன் கூடாரத்தை அணுகாது என்றதால்

எனக்கு ஏன் கவலை

வழிகள் எல்லாம் என்னைக் காக்க தூதர்கள் உள்ளதால்

கலக்கம் ஏதுமில்லை

 

4. நித்தம் என்னை நடத்துவேன் என்று நீர் சொன்னதால்

எனக்கு என்ன கவலை

என் கிருபை போதும் என்ற வாக்கு இருப்பதால்

பயமே எனக்கு இல்லை

 

5. என்னை விசுவாசி அற்புதங்கள் காண்பாய் என்றதால்

எனக்கு என்ன கவலை

பரிசுத்தமாய் வாழ்ந்து பலர் பரத்துக்கு வரணுமே

அதுதான் எந்தன் கவலை


Sunday 29 May 2022

Ponnana Yesuvai பொன்னான இயேசுவை


 

பொன்னான இயேசுவை
புண்ணிய நல் நேசரை
கொண்டு செல்வோம் பூலோகம் எங்கும்
அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம்

தேவனே வந்து நம்மை நடத்திடுவார்
தேவை அறிந்து பயன்படுத்திடுவார்

1. அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்
அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை
அஞ்சாமல் செல்வோம் வஞ்சகனை வெல்வோம்
அரணான கோட்டைகளை பிடித்திடுவோம்

2. அவர் எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார்
இந்த நாளில் உங்கள் மூலம் நிச்சயம் செய்வார்
எத்தனையோ நோய்கள் அத்தனையும் போக்கும்
இயேசுவின் இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம்

3. காலமும் கடலலையும் காத்திருக்காதுஇந்த
காலத்திலே உலகை கலக்கிடுவோம்
கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும்
கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம்


Friday 27 May 2022

Aaviyanavare Aaviyanavare ஆவியானவரே ஆவியானவரே


 


ஆவியானவரே ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே
அன்பின் ஆவியே, அன்பின் ஆவியே
அபிஷேகம் இன்று தாருமே

1. பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமே
கன்மலை தடாகமாக வேண்டுமே
கற்பாறை நீரூற்றாக வேண்டுமே
வரப்புகள் யாவும் தணிய வேண்டுமே

2. ஜனத்தின் மேல் அசைவாட வேண்டுமே
ஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமே
ஒழுங்கின்மை மாற வேண்டுமே
வெறுமை நிறைவாக வேண்டுமே

3. உள்ளத்தில் ஆறுதல் வேண்டுமே
வாழ்விலே மாறுதல் வேண்டுமே
ஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமே
பாழிடங்கள் அரண்மனையாகவே

4. நாவிலே அக்கினி வேண்டுமே
உள்ளத்தில் ஜீவநதி ஓடவே
பெருங்காற்று முழக்கம் வேண்டுமே
இருக்கும் இடம் அசைய வேண்டுமே

5. வல்லமை வரங்கள் வேண்டுமே
சொல்லவும் வாக்குகள் வேண்டுமே
கள்ளங்கபடு மாற வேண்டுமே
உள்ளத்தில் தேவ அன்பு வேண்டுமே

6. அந்நிய பாஷைகள் பேசியே
மண்ணிலே சாட்சியாய் வாழவே
விண்ணிலே உம்மை நான் சந்திக்க
புண்ணியரே என்னையும் நிரப்புமே


Thursday 26 May 2022

Aaviyana Engal Anbu Theivame ஆவியான எங்கள் அன்பு தெய்வமே


 


ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
அடியோரை ஆட்கொண்டு நடத்துமே

ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
அன்பினால் இன்று அலங்கரியும்

1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே
துதிக்கத் தூண்டும் துணையாளரே
சாத்தானின் சகல தந்திரங்களை
தகர்த்தெறிய வாரும் ஐயா

2. சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
உயிர் பெறச் செய்பவரே
சரீரங்களின் தீய செயல்களையே
சாகடிக்க வாருமையா

3. பெலன் இல்லாத நேரங்களில்
உதவிடும் துணையாளரே
சொல்லொண்ணா பெருமூச்சோடு
ஜெபித்திட வாருமையா

4. மனதைப் புதிதாக்கும் மன்னவனே
மறுரூபமாக்குமையா
ராஜாவின் இரண்டாம் வருகைக்காக
எந்நாளும் ஏங்கச் செய்யும்

5. தேவாதி தேவனின் ஆழங்களை
ஆராய்ந்து அறிபவரே
அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி
எப்போதும் நடத்தும் ஐயா

6. பாவம், நீதி, நியாயத்தீர்ப்பை
கண்டித்து உணர்த்தும் ஐயா
பரிபூரண உம் சத்தியத்திற்குள்
பக்தர்களை நடத்தும் ஐயா


Wednesday 25 May 2022

Pallangalellam Nirambida Vendum பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்


 

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்

ராஜா வருகிறார் ஆயத்தமாவோம்
இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்வோம்

1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்

2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே

3. அந்நாளில் வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும்

4. கரையில்லாமலே குற்றமில்லாமலே
கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்

5. அனுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்
அபிஷேக எண்ணெயால் நிரம்பிடுவோம்


Tuesday 24 May 2022

Kartharai Thuthipen கர்த்தரை துதிப்பேன்


 

கர்த்தரை துதிப்பேன்
என் தேவனை ஆராதிப்பேன் -2

1. யூத கோத்திரனை துதிப்பேன்
இம்மானுவேலரை துதிப்பேன் -2

2. ஏசுவே உம்மை நான் துதிப்பேன்
பரிசுத்தரே உம்மை துதிப்பேன் -2

3. உந்தன் பெலனாக துதிப்பேன்
என் கீதமே உம்மை துதிப்பேன் -2

4. நல்லவரே உம்மை துதிப்பேன்
நாள் முழுதும் உம்மை துதிப்பேன் -2


Monday 23 May 2022

Anathi Snegathal அநாதி சிநேகத்தால்


 


அநாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரையா
காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே

உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது

1. அனாதையாய்  அலைந்த
என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து
காத்துக் கொண்டீரே

2. நிலையில்லாத உலகத்தில்
அலைந்தேனையா
நிகரில்லாத இயேசுவே
அணைத்துக் கொண்டீரே

3. தாயின் கருவில் தோன்றும் முன்னே
தெரிந்து கொண்டீரே
தாயைப் போல ஆற்றித்
தேற்றி நடத்தி வந்தீரே

4. நடத்தி வந்த பாதைகளை
நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதிக்கின்றேனையா

5. கர்த்தர் செய்ய நினைத்தது
தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக
செய்து முடித்தீரே