Thursday, 21 October 2021

Iniyum Ummodu Kitti இனியும் உம்மோடு கிட்டி


 


இனியும் உம்மோடு கிட்டி சேர
ஆவியின் மாரியை ஊற்றும்
ஆதி அன்பின் ஆழங்களில் என்னை
ஆற்றி கிருபை அளித்திடுமே

1. பெலவீனன் என் அருகில்
பெலம் தாரும் வந்தெனக்காய்
உம்மைப் போல் நான் கனி தரவே
உமதாவியால் நிறைத்திடுமே

2. நல்ல திராட்சை செடி நீரல்லோ
நானும் இணைந்து  வாழ்ந்திடவே
எல்லா நாளும் கனி தந்திட
இயேசுவே சுத்தமாக்கிடுமே


Wednesday, 20 October 2021

Leviarae Aasariyarae லேவியரே ஆசாரியரே


 

லேவியரே ஆசாரியரே

ஆனந்தமாய் நாம் கூடி வந்தோமே

இயேசுவின் பாதத்தில் பரவசமாய்

பாரத மீட்புக்காய் கிருபை பெறுவோம்   - லேவியரே

 

1. எட்டுத் திசைக்கும் இயேசு புகழ் பரவ

நித்திய சுவிசேஷம் ஏந்திச் செல்லுவோம்

சாத்தானின் கட்டுகளை அறுத்திடுவோம்

சத்திய சபை கட்டி எழுப்பிடுவோம்    - லேவியரே

 

2. விசுவாச வீரர்களாய் எழும்பிடுவோம்

வெளிப்பாடு வரங்களை உபயோகிப்போம்

பாதாளக் கட்டுகளை அறுத்திடுவோம்

பரலோக பலன்களை சேர்த்துக்குவிப்போம்   - லேவியரே

 

3. நம்பிக்கை நங்கூரமாய் நடந்திடுவோம்

தாழ்மையின் ரூபங்களால் வளர்ந்திடுவோம்

பாவத்தின் கட்டுகளை அறுத்திடுவோம்

காரிய சமர்த்தர்களாய் நின்றிடுவோம்   - லேவியரே

 

4. ஜெபத்தின் ஜெயங்களாய் முன் செல்லுவோம்

தியான ஊற்றுகளில் தூது பெறுவோம்

மாமிசத்தின் கட்டுகளை அறுத்திடுவோம்

கண்ணீரின் பள்ளத்தாக்கில் கர்த்தரைக் காண்போம்  - லேவியரே

 

5. பேச்சின் தூதர்களாய் பறந்திடுவோம்

நடக்கையின் நகல்களாய் விரைந்திடுவோம்

சமுதாயக் கட்டுகளை அறுத்திடுவோம்

நன்மையின் வாசல்களாய் விழித்திடுவோம்   - லேவியரே

 

6. இயேசுவின் காயங்களின் கனிகளே நாம்

களிகூர்ந்து மகிழ்ந்து ஆடிப்பாடுவோம்

அப்போஸ்தல ஊழியத்தில் ஆர்ப்பரிப்போம்

ஆசீர்வாத மழைக்கு மேகங்களாவோம்   - லேவியரே

Monday, 18 October 2021

Ulagathil Iruppavanilum உலகத்தில் இருப்பவனிலும்



 



உலகத்தில் இருப்பவனிலும்
உங்களில் இருப்பவர் பெரியவர்
கர்த்தர் பெரியவர் நல்லவர்
வல்லவர் என்றுமே

1. தண்ணீரைக் கடந்திடும் போதும்
உன்மேல் அவைகள் புரளுவதில்லை
அக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாதே
அவைகளை மிதித்து ஜெயமே அடைவாய்

2. உன் பக்கம் ஆயிரம் பேரும்
உன் மேல் விழுந்தும் தீங்கொன்றுமில்லை
கண்களினால் காணுவாய் தேவன் துணை உனக்கே
ஜெயதொனியோடே முன்னே செல்வாய்

3. என்றென்றும் கர்த்தரின் நாமம்
துணையே என்று அறிந்துணர்வாயே
உனக்கெதிராய் எழும்பிடும் ஒன்றும் வாய்க்காதே
சேனையின் தேவன் ஜெயமே அளிப்பார்

4. எந்நாளும் இயேசுவை நம்பு
குறைவேயில்லை ஜீவியமதிலே
பசுமையின் ஜீவியம் உந்தன் பங்காகும்
கர்த்தரின் ஆசீர் உனக்கே சொந்தம்








Sunday, 17 October 2021

Karthathi Karthanai கர்த்தாதி கரத்தனை


 


கர்த்தாதி கரத்தனை
இராஜாதி இராஜனை
நான் கெம்பீரித்து பாடுவேன்
நான் கெம்பீரித்து பாடுவேன்

ஆடுவேன் பாடுவேன் மகிழ்ந்திடுவேன்  
அன்பரின் பாதத்தில் அமர்ந்திடுவேன்  --- கர்த்தாதி
 

1. எனக்காக யாவற்றையும்
செய்து முடிப்பார் அவர்
கர்த்தரைத் தேடிடுவேன் என்றும்
எனக்கொன்றும் குறைவில்லையே  --- ஆடுவேன்

2. கர்த்தரை நம்பிடுவேன்
சகலமும் நன்மையாகும்
வாக்குதத்தம் செய்தவர் அவர்
வாக்கொன்றும் மாறிடாரே --- ஆடுவேன்

3. கோழி தன் குஞ்சுகளை
கூட்டி அணைப்பது போல்
சேதம் வராமல் என்னை
அவர் செட்டையில் காத்திடுவார் --- ஆடுவேன்

4. அழுகையின் பள்ளத்தாக்கை
நீரூற்றாய் மாற்றிடுவார்
திறந்த வாசல் ஒன்றை அவர்
எனக்காக வைத்திடுவார் --- ஆடுவேன்


Kalikooruvom Karthar Nam Patchamae களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே


 


1. களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே
தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்
அவர் நமக்கு யாவிலும் எல்லாமே
எப்பாவம் பயம் நீக்குவார்

கர்த்தர் நம் பட்சம்
கர்த்தர் நம்மோடு
கர்த்தர் சகாயர்
யார் எதிர்க்க வல்லோர்
யார் யார் யார்
யார் எதிர்க்க வல்லோர்
யார் வல்லோர்

2. திடனடைவோம் தீமை மேற்கொள்ளுவோம்
கர்த்தாவின் வல்ல கரத்தால்
உண்மை பக்தியாய் நாள்தோறும் ஜீவிப்போம்
அவரே திடன் ஆகையால்.

3. வாக்கை நம்புவோம் உறுதி மொழியாய்
கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே
பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய்
நிலைக்கும் இது மெய் மெய்யே.

4. நிலைத்திருப்போம்  கர்த்தரின் கட்டினில்
அதால் நித்ய ஜீவன் உண்டாம்
பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில்
வைத்தென்றும் பாதுகாப்பாராம்

Saturday, 16 October 2021

Yesuvin Namamae Thirunamam இயேசுவின் நாமமே திருநாமம்


 

இயேசுவின் நாமமே திருநாமம்முழு
இருதயத்தாற் தொழுவோம் நாமும்

1. காசினியி  லதனுக் கிணையில்லையே  விசு
வாசித்த வர்களுக்குக் குறைவில்லையே  --- இயேசு

2. இத்தரையில் மெத்தவதி சய நாமம்  அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெயநாமம்  --- இயேசு

3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம்  இது
சத்திய விதேய மனமொத்த நாமம் --- இயேசு 

4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்  நமை
அண்டிடும் பேய் பயந்தோடு தேவநாமம் --- இயேசு

5. பட்சமுடன் ரட்சை செயு முபகாரி  தீய
பாவப் பிணி தவிர்க்கும் பரிகாரி  --- இயேசு

Friday, 15 October 2021

Yesuvai Nambinor Mandathillai இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை


 

1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்

2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதல்ல தம் ஆலோசனை
கோர பயங்கரக் காற்றடித்தும்
கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும்

3. விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலதுபாரிசத்திலே
கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான்

4. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்தோடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்ந்திடும் ஐக்கியத்திலே
ஜெய கெம்பீரமே உனக்குண்டே

5. ஏழை உன் ஆத்மா பாதாளத்தில்
என்றும் அழிந்திடவிட்டு விடார்
தம் சமூகம் நித்ய பேரின்பமே
சம்பூர்ண ஆனந்தம் பொங்கிடுமே

6. அங்கே அனேக வாசஸ்தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே