Wednesday, 29 April 2020

Vallamai Thevai Deva வல்லமை தேவை தேவா

Vallamai Thevai Deva வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா இன்றே தேவை தேவா இப்போ தாரும் தேவா பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை 1. மாம்சமான யாவர் மீதும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் மூப்பர் வாலிபர் யாவரும் தீர்க்க தரிசனம் சொல்வாரே 2. பெந்தெகொஸ்தே நாளைப் போல பெரிதான முழக்கத்தோடே வல்லமையாக இறங்கி வரங்களினாலே நிரப்பும் 3. மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக ஆவியைத் தாரும் பிதாவே என்று அழைக்க புத்திர சுவிகாரம் ஈந்திடும்

Saturday, 25 April 2020

Varuthapattu Paaram Sumapavare வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே

Varuthapattu Paaram Sumapavare வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே வருவீர் இயேசுவண்டை இளைப்பாற 1. தாகமுள்ளவரே வாரும் என்றார் தாகத்தோடு வரும் சமாரியாளைக் கண்டார் தண்ணீர் கேட்டார் அவர் தாகம் தீர்த்தார் பாவ மன்னிப்பை கொடுத்து மகிழச் செய்தார் 2. பெரும்பாடுள்ள ஓர் ஸ்திரீ இருந்தாள் கடும் நோய் நீங்க பலரிடம் சென்றாள் நம்பிக்கை இழந்தாள் நாதன் இயேசுவைக் கண்டாள் நடுங்கி வஸ்திரம் தொட்டு சுகமடைந்தாள் 3. நாலு நாளாயிற்றே நாறுமென்றாள் நம்பிக்கை விடாதே அவன் பிழைப்பான் என்றார் கவலைப்பட்டார் இயேசு கண்ணீர் விட்டார் மரித்தவன் உயிர்த்தே வரச் சொன்னார் 4. நாடு நகரமெல்லாம் சுற்றி அலைந்தார் நானே வழி வேறில்லை என பகர்ந்தார் களைப்படைந்தார் அத்தி மரத்தைக் கண்டார் கனியற்றிருப்பதை கண்டு சபித்தார்

Friday, 24 April 2020

Magimai Matchimai மகிமை மாட்சிமை

Magimai Matchimai மகிமை மாட்சிமை நிறைந்தவரே மகிழ்வுடன் தொழுதிடுவோம் பரிசுத்த தேவனாம் இயேசுவை பணிந்தே தொழுகுவோம் 1. உன்னத தேவன் நீரே ஞானம் நிறைந்தவரே முழங்கால் யாவுமே பாரில் மடங்கிடுதே உயர்ந்தவரே சிறந்தவரே என்றும் தொழுதிடுவோம் – மகிமை 2. ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே ஒளியினை தந்துமே இதயத்தில் வாசம் செய்யும் ஒளிநிறைவே அருள் நிறைவே என்றும் தொழுதிடுவோம் – மகிமை 3. பரிசுத்த தேவன் நீரே பாதம் பணிந்திடுவோம் கழுவியே நிறுத்தினீரே சத்திய தேவன் நீரே கனம் மகிமை செலுத்தியே நாம் என்றும் தொழுதிடுவோம் – மகிமை 4. நித்திய தேவன் நீரே நீதி நிறைந்தவரே அடைக்கலமானவரே அன்பு நிறைந்தவரே நல்லவரே வல்லவரே என்றும் தொழுதிடுவோம் – மகிமை 5. அற்புத தேவன் நீரே ஆசீர் அளிப்பவரே அகமதில் மகிழ்ந்துமே துதியினில் புகழ்ந்துமே ஆவியோடும் உண்மையோடும் என்றும் தொழுதிடுவோம் – மகிமை

Thursday, 23 April 2020

Deva Saranam தேவா சரணம்

Deva Saranam தேவா சரணம் கர்த்தா சரணம் ராஜா சரணம் இயேசைய்யா சரணம் 1. தேவாதி தேவனுக்கு சரணம் இராஜாதி இராஜனுக்கு சரணம் தூய ஆவி சரணம் அபிஷேக நாதா சரணம் சரணம் சரணம் சரணம் (2) 2. கர்த்தாதி கர்த்தனுக்கு சரணம் காருண்ய கேடகமே சரணம் பரிசுத்த ஆவி சரணம் ஜீவநதியே சரணம் சரணம் சரணம் சரணம் (2) 3. மகிமையின் மன்னனுக்கு சரணம் மாசற்ற மகுடமே சரணம் சத்திய ஆவி சரணம் சர்வ வியாபியே சரணம் சரணம் சரணம் சரணம் (2)

Wednesday, 22 April 2020

Enthan Kanmalaiyanavare எந்தன் கன்மலையானவரே

Enthan Kanmalaiyanavare எந்தன் கன்மலையானவரே என்னை காக்கும் தெய்வம் நீரே வல்லமை மாட்சிமை நிறைந்தவரே மகிமைக்கு பாத்திரரே ஆராதனை உமக்கே (4) 1. உந்தன் சிறகுகளின் நிழலில் என்றென்றும் மகிழச் செய்தீர் தூயவரே என் துணையாளரே துதிக்குப் பாத்திரரே — ஆராதனை 2. எந்தன் பெலவீன நேரங்களில் உம் கிருபை தந்தீரைய்யா இயேசு ராஜா என் பெலனானீர் எதற்கும் பயமில்லையே — ஆராதனை 3. எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம் உம்மை புகழ்ந்து பாடிடுவேன் ராஜா நீர் செய்த நன்மைகளை எண்ணியே துதித்திடுவேன் — ஆராதனை

Tuesday, 21 April 2020

Uyirodu Elunthavare உயிரோடு எழுந்தவரே

Uyirodu Elunthavare 1. உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா ஓசன்னா -4 2. மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம் 3. அகிலத்தை ஆள்பவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஆனந்த பாக்கியமே உம்மை ஆராதனை செய்கிறோம்

Sunday, 19 April 2020

Kalai Velaiyile Nam Nathanai காலை வேளையிலே நம் நாதனை

Kalai Velaiyile Nam Nathanai காலை வேளையிலே நம் நாதனை போற்றிடுவோம் (2) துதி மாலையுடன் புகழ் பாடியே (2) அவர் பாதம் வீழ்ந்து பணிவோம் மகிழ்வோம் 1. காலை தோறும் புது கிருபையினால் நிறைத்திடும் தேவனை வாழ்த்திடுவோம் குறைகள் யாவும் குருசினில் ஏற்ற (2) திருமைந்தன் இயேசுவை வணங்கிடுவோம் (2) சரணம் சரணம் சரணம் (2) --- காலை வேளையிலே 2. பாவத்தை உணர்த்தும் தினம் வழி நடத்தும் ஆவியாம் தேவனை துதித்திடுவோம் மூன்றில் ஒன்றாய் அருள் ஒளி சுடராய் (2) திகழ்ந்திடும் திரியேகரை நமஸ்கரிப்போம் (2) சரணம் சரணம் சரணம் (2) --- காலை வேளையிலே