Deva Sabaiyile Devan Eluntharulinar
தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்
1.பயத்தோடே நல் பக்தியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம் --- தேவ
2.ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே --- தேவ
3.இராப்பகலாய் தன் கண்மணிபோல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார் --- தேவ
4.உலகின் முடிவு வரைக்கும் நான்
உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர் --- தேவ
5.சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே --- தேவ
6.ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜே ஜெய ராஜனுக்கு ஜெயம் மூழங்கிடுவோம் --- தேவ
En Yesu Raja Saronin Roja
என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும் (2)
அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிருபை முன் செல்ல அருளும் (2)
1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2)
கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ
கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) – என் இயேசு
2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2)
பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது
பரமனே என் முன் தீபமாய் வாரும் (2) – என் இயேசு
3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (2)
இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்
என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) – என் இயேசு
Konja Kalam yesuvukkaga
கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப் பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது (2)
அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன்
ஆனந்தக் கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன்
1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன் (2)
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் --- கொஞ்ச
2. இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார் (2)
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
இயேசுவோடு நான் குடியிருப்பேன் --- கொஞ்ச
3. வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரவேற்பு அளிக்கப்படும் (2)
என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
எனக்கானந்தம் பொங்கிடுமே --- கொஞ்ச
4. பலியாக காணிக்கையாக
படைத்தேனே உமக்காக (2)
என்னை ஏற்றுக் கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை --- கொஞ்ச
Vinnil Oor Natchathiram
விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே
தூதர்கள் பாடல்கள் பாடிடவே
தாவீதின் மரபினில் தோன்றினாரே
மரியன்னை புதல்வனாய் அவதரித்தார்
ஆனந்தம் பரமானந்தம்
இயேசு பாலனை போற்றிடுவோம்
ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம்
இச்சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம்
1. மந்தையை காக்கும் ஆயர்களும்
சாஸ்திரியர் மூவரும் வந்தனரே
முன்னணை பாலனை கண்டனரே
பொன் போளம் தூபம் படைத்தனரே — ஆனந்தம்
2. பெத்லேகேம் ஊரில் ஏழைக்கோலமாய்
மானிடர் வாழவே வந்துதித்தார்
இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார்
மன்னாதி மன்னனாம் மனுவேலனே — ஆனந்தம்
Vinnil Oor Natchathiram
1.விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே
தூதர்கள் பாடல்கள் பாடிடவே
தாவீதின் மரபினில் தோன்றினாரே
மரியன்னை புதல்வனாய் அவதரித்தார்
ஆனந்தம் பரமானந்தம்
இயேசு பாலனை போற்றிடுவோம்
ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம்
இச்சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம்
2. மந்தையை காக்கும் ஆயர்களும்
சாஸ்திரியர் மூவரும் வந்தனரே
முன்னணை பாலனை கண்டனரே
பொன் போளம் தூபம் படைத்தனரே — ஆனந்தம்
3. பெத்லேகேம் ஊரில் ஏழைக்கோலமாய்
மானிடர் வாழவே வந்துதித்தார்
இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார்
மன்னாதி மன்னனாம் மனுவேலனே — ஆனந்தம்