Sunday 5 June 2022

Athikalaiyil Palanai Thedi அதிகாலையில் பாலனை தேடி


 


அதிகாலையில் பாலனை தேடி

செல்வோம் நாம் யாவரும் கூடி

அந்த மாடடையும் குடில் நாடி

தேவ பாலனை பணிந்திட வாரீர்

வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்

 

1. அன்னை மரியின் மடிமேலே

மன்னன் மகவாகவே தோன்ற

விண் தூதர்கள் பாடல்கள் பாட

விரைவாக நாம் செல்வோம் கேட்கஅதி

 

2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே

அந்த மன்னவன் முன்னிலை நின்றே

தம் சிந்தை குளிர்ந்திட போற்றும்

நல்ல காட்சியை கண்டிட வாரீர்அதி

Friday 3 June 2022

Alleluah Kartharaiye அல்லேலூயா கர்த்தரையே



 

1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்

ராஜாதி ராஜனாம் இயேசு ராஜன் பூமியில் ஆட்சி செய்வார்
அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள்

2. தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்ததினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் --- ராஜாதி

3. சூரியனே சந்திரனே தேவனைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
அக்கினியே கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் --- ராஜாதி

4. பிள்ளைகளே வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள் --- ராஜாதி

5. ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள் --- ராஜாதி

Oru Varthai Sollum Karthave ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே


 

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

1.மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமேநீர்

2.இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமேநீர்

3.எரிகோவின் தடைகள் எல்லாம்
துதிகளாலே மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமேநீர்

4.வியாதிகள் வறுமையெல்லாம்
விசுவாசத்தால் மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமேநீர்


Nanum En Veetarum நானும் என் வீட்டாரும்


 

நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்

1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமே

முழந்தாழ்படியிட்டு
முழுவதும் தருகிறேன்நான்

2. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்;

3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே

4. யேகோவாஷம்மா கூடவே இருக்கிறீர்
யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்

5. யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பரே
யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே

6. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே இனிமேல் வருபவரே


Wednesday 1 June 2022

Um Samoogame En Pakiame உம் சமூகமே என் பாக்கியமே


 

உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்க
இராஜா இயேசு இராஜா

1. ஒரு கோடி செல்வங்கள் எனைத்
தேடி வந்தாலும்
உமக்கது ஈடாகுமோ
செல்வமே ஒப்பற்ற செல்வமே
நல் உணவே நாளெல்லாம் உம் நினைவே

2. என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு
தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
ஆளுகை செய்யும்

3. எத்தனையோ எழில்மிகு காட்சிகள் கண்டாலும்
எல்லாமே மாயை ஐயா
தண்ணீரே ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
மூழ்கணுமே


Athikalai Sthothira Bali அதிகாலை ஸ்தோத்திர பலி


 

அதிகாலை ஸ்தோத்திர பலி 
அப்பா அப்பா உங்களுக்குத் தான் 
ஆராதனை ஸ்தோத்திர பலி 
அப்பா அப்பா உங்களுக்குத் தான் – 2 

1. எபிநேசர் எபிநேசர் 
இதுவரை உதவி செய்தீர் 
இதுவரை உதவி செய்தீர் 
எபிநேசர் எபிநேசர் 

2. பரிசுத்தர் பரிசுத்தர் 
பரலோக ராஜாவே 
பரலோக ராஜாவே 
பரிசுத்தர் பரிசுத்தர் 

3. எல்ஷடாய் எல்ஷடாய் 
எல்லாம் வல்லவரே 
எல்லாம் வல்லவரே 
எல்ஷடாய் எல்ஷடாய் 

4. எல்ரோயி எல்ரோயி 
என்னை காண்பவரே 
என்னை காண்பவரே 
எல்ரோயி எல்ரோயி 

5. யேகோவா யீரே 
எல்லாம் பார்த்துக் கொள்வீர் 
எல்லாம் பார்த்துக் கொள்வீர் 
யேகோவா யீரே 

6. அதிசய தெய்வமே 
ஆலோசனை கர்த்தரே 
ஆலோசனை கர்த்தரே 
அதிசய தெய்வமே 

7. யேகோவா ஷம்மா 
எங்களோடு இருப்பவரே 
எங்களோடு இருப்பவரே 
யேகோவா ஷம்மா 

8. யேகோவா ஷாலோம் 
சாமாதானம் தருகிறீர் 
சாமாதானம் தருகிறீர் 
யேகோவா ஷாலோம் 

9. யேகோவா நிசியே 
எந்நாளும் வெற்றி தருவீர் 
எந்நாளும் வெற்றி தருவீர் 
யேகோவா நிசியே 

10. யேகோவா ரஃப்பா 
சுகம் தரும் தெய்வம் 
சுகம் தரும் தெய்வம் 
யேகோவா ரஃப்பா


Tuesday 31 May 2022

Jeevanulla Devan Ennodirupathal ஜீவனுள்ள தேவன் என்னோடிருப்பதால்


 


ஜீவனுள்ள தேவன் என்னோடிருப்பதால்

எனக்கு என்ன கவலை

ஜீவனுள்ள தேவன் என்னோடிருப்பதால்

எனக்கு ஏது கவலை

இல்லை கவலை எனக்கு இல்லை கவலை

ஏது கவலை எனக்கு ஏது கவலை

 

1. அஞ்சாதே முதலும் முடிவும் நான் என்றதால்

எனக்கு ஏன் கவலை

ஆபத்து காலத்தில் தப்புவிப்பேன் என்றதால்

பயமே எனக்கு இல்லை

 

2. வாக்கு மாறா வல்லவர் என்னோடிருப்பதால்

எனக்கு ஏன் கவலை

சர்வ வல்லவர் நிழலில் நான் உள்ளதால்

பயமே எனக்கு இல்லை

 

3. வாதை உன் கூடாரத்தை அணுகாது என்றதால்

எனக்கு ஏன் கவலை

வழிகள் எல்லாம் என்னைக் காக்க தூதர்கள் உள்ளதால்

கலக்கம் ஏதுமில்லை

 

4. நித்தம் என்னை நடத்துவேன் என்று நீர் சொன்னதால்

எனக்கு என்ன கவலை

என் கிருபை போதும் என்ற வாக்கு இருப்பதால்

பயமே எனக்கு இல்லை

 

5. என்னை விசுவாசி அற்புதங்கள் காண்பாய் என்றதால்

எனக்கு என்ன கவலை

பரிசுத்தமாய் வாழ்ந்து பலர் பரத்துக்கு வரணுமே

அதுதான் எந்தன் கவலை