Thursday, 19 May 2022

Raja Neer Seitha Nanmaigal ராஜா நீர் செய்த நன்மைகள்


 


ராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதையா
நான் ஏறெடுப்பேன் நன்றிபலி
என் ஜீவ நாளெல்லாம்

நன்றி ராஜா இயேசு ராஜா (4)

1. அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி
புது கிருபை தந்தீரையா
ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
தினம் நன்றி சொல்ல வைத்தீரையா

2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
உம் வெளிச்சம் தந்தீரையா
பாதம் அமர்ந்து நான் உம் குரல்
கேட்கும் பாக்கியம் தந்தீரையா

3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரையா
உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
வழிநடத்தி வந்தீரையா

4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
தூக்கிச் சென்றீரையா
அன்பர் உம்கரத்தால் அணைத்து அணைத்து தினம்
அதிசயம் செய்தீரையா

5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
விடுதலை தந்தீரையா
குறைகளை நீக்கி கறைகளைப்  போக்கி
கூடவே வந்தீரையா

6. உமக்காக வாழ உம்  நாமம் சொல்ல
தெரிந்து எடுத்தீரையா
உம்மோடு வாழ ஊழியனாக
உருவாக்கி வந்தீரையா


Wednesday, 18 May 2022

Nantri Bali Nantri Bali நன்றி பலி நன்றி பலி


 


நன்றி பலி நன்றி பலி
நல்லவரே உமக்குத்தான்
அதிகாலை ஆனந்தமேஎன்
அப்பா உம் திருப்பாதமே

1. நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்ததையாஅது
நிரந்தரமானதையா

கோடி கோடி நன்றி டாடி (3)

2. இரவெல்லாம் காத்தீர்
இன்னும் ஓர் நாள் தந்தீர்
மறவாத என் நேசரேஇன்று
உறவாடி மகிழ்ந்திடுவேன்

3. ஊழியப் பாதையிலே
உற்சாகம் தந்தீரையா
ஓடி ஓடி உழைப்பதற்கு
உடல் சுகம் தந்தீரையா

4. வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில்
நாள்தோறும் வாழ்வேனையாஇயேசு

5. ஜெபத்தைக் கேட்டீரையா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே
பாதுகாத்து வந்தீரையா

6. என் நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமை தானே

7. புதிய நாள் தந்தீரையா
புது கிருபை தந்தீரையா
அதிசயமானவரே
ஆறுதல் நாயகனே


Nantri Entru Sollukirom Naatha நன்றி என்று சொல்லுகிறோம் நாதா


 

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி இயேசு ராஜா (2)

1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்திரே நன்றி ராஜா

2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா

3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா

4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா

5. தனிமையிலே துணை நின்றீர் நன்றி ராஜா
தாயைப் போல் தேற்றினீர் நன்றி ராஜா

6. சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே

7. புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா
புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா

8. ஊழியம் தந்தீரே நன்றி ராஜா
உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா


Monday, 16 May 2022

Idukkamana Vasal Valiye இடுக்கமான வாசல் வழியே


 


இடுக்கமான வாசல் வழியே
வருந்தி நுழைய முயன்றிடுவோம்
சிலுவை சுமந்து இயேசுவின் பின்
சிரித்த முகமாய் சென்றிடுவோம்

1. வாழ்வுக்கு செல்லும்
வாசல் இடுக்கமானது
பரலோகம் செல்லும்
பாதை குறுகலானது - சிலுவை

2. நாம் காணும் இந்த உலகம்
ஒருநாள் மறைந்திடும்
புது வானம் பூமி நோக்கி
பயணம் செய்கின்றோம் - சிலுவை

3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்
சிலகாலம் தான் நீடிக்கும்
இணையில்லாத மகிமை
இனிமேல் நமக்குண்டு - சிலுவை

4. அழிவுக்கு செல்லும் வாயில்
மிகவும் அகன்றது
பாதாளம் செல்லும் பாதை
மிகவும் விரிந்தது - சிலுவை


Yesu Ennodu Iruppatha இயேசு என்னோடு இருப்பத


 


இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா
என்னுள்ளம் துள்ளுதம்மா
நன்றி என்று சொல்லுதம்மா
.... லலல்லாலாலா ம்ம்..

1. கவலை கண்ணீரெல்லாம்
கம்ப்ளீட்டா மறையுதம்மா
பயங்கள் நீங்குதம்மா
பரலோகம் தெரியுதம்மா

அகிலம் ஆளும் தெய்வம்என்
அன்பு இதய தீபம்

2. பகைமை கசப்பு எல்லாம்
பனிபோல மறையுதம்மா
பாடுகள் சிலுவை எல்லாம்
இனிமையாய் தோன்றுதம்மா

3. உலக ஆசை எல்லாம்
கூண்டோடே மறையுதம்மா
உறவு பாசமெல்லாம்
குப்பையாய் தோன்றுதம்மா

4. எரிகோ கோட்டை எல்லாம்
இல்லாமல் போகுதம்மா
எதிர்க்கும் செங்கடல்கள்
இரண்டாய் பிரியுதம்மா


Sunday, 15 May 2022


 


போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ
பாராளும் இயேசு உண்டு பதறாதே மனமே

1. அலைகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
கரம் நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே

.. ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே

2. கடந்ததை நினைத்து தினம்
கண்ணீர்  வடிக்கின்றாயோ
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி..நன்றி..சொல்லு

3. வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு

4. நண்பன் கைவிட்டானோ
நம்பினோர் எதிர்த்தனரோ
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு


Saturday, 14 May 2022

Senaigalaai Elumbiduvom சேனைகளாய் எழும்பிடுவோம்


 


சேனைகளாய் எழும்பிடுவோம்
தேசத்தை கலக்கிவோம்புறப்படு
இந்தியாவின் எல்லையெங்கும்
இயேசு நாமம் சொல்லிடுவோம்  புறப்படு

புறப்படு புறப்படு
தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு

1.பாதாளம் சென்றிடும்
பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா
பட்டணங்கள் கிராமங்களில்
கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா

2. உலக இன்பம் போதுமென்று
பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்
பாவசேற்றிலே மூழ்கி பணத்திற்காக
வாழ்பவர்கள் மனந்திரும்பணும்

3. அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு
அறியாயோ மகனே
பயிர்கள் முற்றி அறுவடைக்கு
தயாராக உள்ளது தெரியாதா மகளே

4. இயேசு நாமம் அறியாத எத்தனையோ
கோடிகள் இந்தியாவிலே
இன்னும் சும்மா இருப்பது நியாயம்
இல்லையே தம்பி இன்றே புறப்படு

5. வழிதெரியா ஆடுகள் தொய்ந்து போன
இதயங்கள் லட்சங்கள் உண்டு
உண்மை தெய்வம் அறியாது குருடர்களாய்
வாழ்பவர்கள் கோடிகள் உண்டு

புறப்பட்டோம் புறப்பட்டோம்
தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம்
சேனைகளாய் எழும்பிடுவோம்
தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம்
இந்தியாவின் எல்லையெங்கும்
இயேசு நாமம் சொல்லிடவே புறப்பட்டோம்