Saturday 5 March 2022

En Yesu Raja Sthothiram என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்


 

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
உயிருள்ள நாளெல்லாமே

1. இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம் பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே

2. துதி கன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலி தனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்

3. கூப்பிடும் யாவருக்கும்
 அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும் குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே

4. உலகத் தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு
புது வாழ்வு தந்து விட்டீர்


Thursday 3 March 2022

Enni Enni Thuthi Seivai எண்ணி எண்ணி துதி செய்வாய்


 


எண்ணி எண்ணி துதி செய்வாய்

எண்ணடங்காத கிருபைகட்காய்

என்றும் தாங்கும் தம் புயமே

இன்ப இயேசுவின் நாமமே


1. உன்னை நோக்கும் எதிரியின்

கண்ணின் முன்னே பதறாதே

கண்மணிபோல் காக்கும் கரங்களில்

உன்னை மூடி மறைப்பாரே


2. யோர்தான் புரண்டு வரும்போல்

எண்ணற்ற பாரங்களோ

எலியாவின் தேவன் எங்கே

உந்தன் விசுவாச சோதனையில்


3. உனக் கெதிராகவே

ஆயுதம் வாய்க்காதே

உன்னை அழைத்தவர் உண்மை தேவன்

அவர் தாசர்க்கு நீதியவர்


4. திறந்த வாசல் முன்னே

தீவிரம் பிரவேசிப்போம்

ஒரு மனிதனும் பூட்ட மாட்டான்

உன் கர்த்தர் முன் செல்வார்


5. மனிதரை ஜனங்களை

மன்னவர் தருவாரே

நம் ஜீவனை ஈடாய் கொடுப்போம்

ஜீவன் தந்தவர் கேட்கிறாரே 


6. ஓட்டத்தை முடித்திட

கிரீடத்தை சூடிட

உதவிடுவார் உயர்த்திடுவார்

உந்தன் கண்ணீர் மாறிடுமே


7. சோர்ந்திடும் நேரத்தில்

சார்ந்திட தேவன் உண்டே

உலகத்தில் இருப்பவனிலும்

உன்னில் இருப்பவர் பெரியவரே


Ennalume Thuthippai எந்நாளுமே துதிப்பாய்




 


எந்நாளுமே துதிப்பாய்என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்

இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது

1. பாவங்கள் எத்தனையோநினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றி குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி

2. எத்தனையோ கிருபைஉன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி
நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால்.

3. நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு
இன்னும் இளமை போலாகவே செய்ததால்.

4. பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே சத்திய மேயிது.

5. மன்னிப்பு மாட்சிமையாம்- மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணூவாயோ கிழக்கு மேற்கின் தூரமே
மண்ணில் உன்பாவம் அகன்றத் தூரமே.

6. தந்தைதன் பிள்ளைகட்குதயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால்,
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே.


Wednesday 2 March 2022

Yesu Swami Arul Natha இயேசு சுவாமி அருள் நாதா


 

எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை

1. இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே - ஐயா

2. அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே - ஐயா

3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன் - ஐயா

4. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர் தானையா - ஐயா

5. வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர் - என்னை

6. உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே - ஐயா

7. உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன் - ஐயா

Monday 28 February 2022

Yesu Swami Arul Natha இயேசு சுவாமி அருள் நாதா


 


1. இயேசு சுவாமி அருள் நாதா
கெஞ்சிக் கேட்கிறேன்
பாவியேனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்

இயேசு சுவாமி
கெஞ்சிக் கேட்கிறேன்
பாவியேனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்

2. கெஞ்சினோர் அநேகர் பேரில்
தயை காட்டினீர்
எந்த நீசன் அண்டினாலும்
தள்ளவே மாட்டீர்

3. தீயகுணம் கிரியை யாவும்
முற்றும் வெறுத்தேன்
நீரே தஞ்சம் என்று நம்பி
வந்து நிற்கிறேன்

4. தூய ரத்தத்தாலே என்னைச்
சுத்தமாக்குவீர்
வல்ல ஆவியால் எந்நாளும்
காத்துக் கொள்ளுவீர்


Sunday 27 February 2022

Thuthi Gana Magimaku Pathirare துதி கன மகிமைக்கு பாத்திரரே


 


துதி கன மகிமைக்கு பாத்திரரே  உம்மை

அனுதினம் துதித்திடுவேன்

அன்பே உந்தன் ஆசிகளை எண்ணவே

ஆனந்தமே என்னில் பொங்குதே

 

1. நாடித் தேடி ஓடி உம் பாதம் வந்தேன்

நன்மை செய்யும் தேவன் நீரல்லோ

பாச வலையால் என்னை வீசி அணைத்தீர்

நேசா உமக்கென்ன செய்குவேன்

 

2. பாவ சேற்றில் மூழ்கிய பாவி என்னை

தேடி வந்த தேவன் நீரல்லோ

தூக்கி எடுத்தே தூய ஆவியும் ஈந்தீர்

தேவா என்னை சொந்தமாக்கினீர்

 

3. என்றும் உம்மோடு சீயோன் மலையில்

நிற்பதும் என் பாக்கியமல்லோ

ஆசையுடனே பூவில் காத்திருக்கிறேன்

ஆருயிரே வேகம் வாருமே

 

Saturday 26 February 2022

Aathiyum Anthamumanavare ஆதியும் அந்தமுமானவரே


 


ஆதியும் அந்தமுமானவரே

அல்பாவும் ஓமேகாவும் ஆனவரே

 அல்லேலுயா அல்லேலுயா (4)

 

1. வல்லவர் வல்லவர் வல்லவரே

நமது தேவன் வல்லவரே - அல்லேலுயா

 

2.  நல்லவர் நல்லவர் நல்லவரே

நமது தேவன் நல்லவரே - அல்லேலுயா

 

3. பரிசுத்த பிதாவே நீர் வாழ்க

யெகோவா தேவனே நீர் வாழ்க  - அல்லேலுயா

 

4. பரிசுத்த குமாரனே நீர் வாழ்க

இயேசு கிறிஸ்துவே நீர் வாழ்க - அல்லேலுயா

 

5. பரிசுத்த பலியாய் வந்தவரே

எங்களுக்காய் பலியானவரே - அல்லேலுயா

 

6. பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே - அல்லேலுயா

 

7. பரிசுத்த ஆவியே நீர் வாழ்க

தேற்றரவாளனே நீர் வாழ்க  - அல்லேலுயா

 

8. சீக்கிரமாக வருபவரே நீர்

 சீயோனின் இராஜாவே நீர் வாழ்க - அல்லேலுயா

 

9. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே - அல்லேலுயா 

 

10. அல்லேலுயா ஆமென் அல்லேலுயா

அல்லேலுயா ஆமென் அல்லேலுயா - அல்லேலுயா