நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்
1. வல்லவரே நல்லவரே
2. காண்பவரே காப்பவரே
3. பாவங்களைப் போக்கிவிட்டீர்
4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்
5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர்
6. புது
வாழ்வு எனக்குத் தந்தீர்
நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்
1. வல்லவரே நல்லவரே
2. காண்பவரே காப்பவரே
3. பாவங்களைப் போக்கிவிட்டீர்
4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்
5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர்
6. புது
வாழ்வு எனக்குத் தந்தீர்
உம்மோடு இருக்கணுமே ஐயா
உம்மைப் போல் மாறணுமே
உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
வெளிச்சம் கொடுக்கணுமே
1.
ஓடும் நதியின் ஓரம் வளரும்
மரமாய் மாறணுமே
எல்லா
நாளும் இலைகளோடு
கனிகள் கொடுக்கணுமே
2.
உலகப் பெருமை இன்பமெல்லாம்
குப்பையாய் மாறணுமே
உம்மையே என் கண்முன் வைத்து
ஓடி
ஜெயிக்கணுமே
3.
ஆத்ம பார உருக்கத்தோடு
அழுது
புலம்பணுமே
இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
மேய்ப்பன் ஆகணுமே
4.
பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
பிரசங்கம் பண்ணணுமே
கடினமான பாறை இதயம்
உடைத்து நொறுக்கணுமே
5.
வார்த்தை என்னும் வாளையேந்தி
யுத்தம் செய்யணுமே
விசுவாசம் என்னும் கேடயத்தால்
பிசாசை வெல்லணுமே
எப்படி பாடுவேன் நான் – என்
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன்
1. ஒரு வழி அடையும் போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ
2. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்
3. கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர்
Vallamai arul niraive varum
Pinmaari polinthidume
Theva aaviye thagam theerumae
Vallamaiyal intru emai nirapidume
1. Puthu ennai abishegam
Puthu belan alithidume
Navamoliyal thuthithidave
Vallamai alithidume – vallamai
2. Saththiya aaviye neer
Nithamum nadathidume
Muthiraiyaai abishegiyum
Aaviyin acharamaai – vallamai
3. Akkini abishegam
Nugathinai murithidume
Sathuruvai jeyithidave
Sathuvam alithidume – vallamai
4. Thooya nal aavithanai
Thukamum paduthaamal
Thooya vali nadathidave
Belan thanthu kaathidume – vallamai
5. Petra nal aavithanai
Kaathida varam tharum
Aaviyinal nadanthidave
Aalugai seithidume – vallamai
6. Ularnthidum elumpugalum
Uyirpetru elumpidave
Elupputhalai kandidave
Vallamai alithidume – vallamai
1. வாரும் மா தேவனே
உம்மைத் துதிக்கவே
துணை செய்யும்
உமக்கே கனத்தை
உமக்கே நன்றியை
உமக்கே துதியை
செலுத்துவேன்
2. அநாதி வார்த்தையே
அன்பாக நித்தமே
என்னோடிரும்
என்னைப் போதிக்கவும்
உம்மைப் போலாக்கவும்
மோட்சத்தில் சேர்க்கவும்
அருள் செய்யும்
3. மாசற்ற ஆவியே
அடியேன் நெஞ்சிலே
தரித்திரும்
என் ஆசை அறிவீர்
குறைவை நீக்குவீர்
திருப்தியாக்குவீர்
அன்பாகவும்
4. திரியேக தேவனே
நித்திய ஜீவனே
உம்மாலேயே
மானிடர் யாவரும்
இகபரத்திலும்
விரும்பும் பாக்கியம்
கிடைக்குமே
எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன்
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்ல பெரும் காரியம் செய்திடுவார்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே ஆர்ப்பரிப்போம்
1. வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன்
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்
பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார்
2. சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்
வீரமுடன் முழங்கினார் தேவ மனிதன்
அக்கினியால் பதிலளிக்கும்
தேவனே தேவன் என்றார் தேவ மனிதன்
3. தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார்
கேட்டருளும் கேட்டருளும்
என்றே கதறினார் தேவ மனிதன்
4. வானங்களை திறந்தே வல்ல தேவன்
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்
1. சோராது ஜெபித்திட
ஜெப ஆவி வரம் தாருமே
தடையாவும் அகற்றிடுமே
தயை கேட்டு உம் பாதம் வந்தேன் --- எந்தன்
2. உம்மோடு எந்நாளும்
உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேன் --- எந்தன்
3. நம்பிக்கை இல்லாமல்
அழிகின்ற மாந்தர்தனை
மீட்டிடும் என் இயேசுவே
போராடி ஜெபிக்கின்றேன் நாதா --- எந்தன்
4. நாளெல்லாம் பாதத்தில்
கர்த்தாவே காத்திருப்பேன்
கண்ணீரின் ஜெபம் கேளுமே
கருணையின் பிரவாகம் நீரே --- எந்தன்
5. சகாயம் பெற்றிட
கிருபாசனம் வந்தேனே
இரக்கங்கள் ஈந்திடுமே
என்றென்றும் தயை காட்டும் தேவா --- எந்தன்