Wednesday, 9 February 2022

Varum Maa Devane வாரும் மா தேவனே


 

1. வாரும் மா தேவனே

உம்மைத் துதிக்கவே

துணை செய்யும்

உமக்கே கனத்தை

உமக்கே நன்றியை

உமக்கே துதியை

செலுத்துவேன்

 

2. அநாதி வார்த்தையே

அன்பாக நித்தமே

என்னோடிரும்

என்னைப் போதிக்கவும்

 உம்மைப் போலாக்கவும்

மோட்சத்தில் சேர்க்கவும்

அருள் செய்யும்

 

3. மாசற்ற ஆவியே

அடியேன் நெஞ்சிலே

தரித்திரும்

என் ஆசை அறிவீர்

குறைவை நீக்குவீர்

 திருப்தியாக்குவீர்

அன்பாகவும்

 

4. திரியேக தேவனே

நித்திய ஜீவனே

உம்மாலேயே

மானிடர் யாவரும்

இகபரத்திலும்

விரும்பும் பாக்கியம்

கிடைக்குமே

 


Tuesday, 8 February 2022

Eliyavin Devan எலியாவின் தேவன்


 

எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன்
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்ல பெரும் காரியம் செய்திடுவார்

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே ஆர்ப்பரிப்போம்

1. வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன்
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்
பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார்

2. சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்
வீரமுடன் முழங்கினார் தேவ மனிதன்
அக்கினியால் பதிலளிக்கும்
தேவனே தேவன் என்றார் தேவ மனிதன்

3. தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார்
கேட்டருளும் கேட்டருளும்
என்றே கதறினார் தேவ மனிதன்

4. வானங்களை திறந்தே வல்ல தேவன்
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்

Monday, 7 February 2022

Enthan Jeba Velai எந்தன் ஜெபவேளை


 

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்

தேவா பதில் தாருமே

எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே

உம்மை நான் நாடி வந்தேன்

 

1. சோராது ஜெபித்திட

ஜெப ஆவி வரம் தாருமே

தடையாவும் அகற்றிடுமே

தயை கேட்டு உம் பாதம் வந்தேன் --- எந்தன்

 

2. உம்மோடு எந்நாளும்

உறவாட அருள் செய்யுமே

கர்த்தாவே உம் வார்த்தையை

கேட்டிட காத்திருப்பேன் --- எந்தன்

 

3. நம்பிக்கை இல்லாமல்

அழிகின்ற மாந்தர்தனை

மீட்டிடும் என் இயேசுவே

போராடி ஜெபிக்கின்றேன் நாதா --- எந்தன்

 

4. நாளெல்லாம் பாதத்தில்

கர்த்தாவே காத்திருப்பேன்

கண்ணீரின் ஜெபம் கேளுமே

கருணையின் பிரவாகம் நீரே --- எந்தன்

 

5. சகாயம் பெற்றிட

கிருபாசனம் வந்தேனே

இரக்கங்கள் ஈந்திடுமே

என்றென்றும் தயை காட்டும் தேவா --- எந்தன்


Sunday, 30 January 2022

Deva Ennai Aaseervathiyum தேவா என்னை ஆசீர்வதியும்


 

தேவா என்னை ஆசீர்வதியும்
எல்லையை பெரிதாக்கும்
உமது கரமே என்னுடன் இருந்து
எல்லா தீங்குக்கும் விலக்கிடும்
தேவனே இயேசுவே தேவனே
இயேசு தேவா

1. தாகம் தீர்க்கும் தண்ணீரையும்
வறட்சி நீக்கும் ஆறுகளும்
தேவ ஜனத்தில் ஆவியையும்
இன்று பலமாய் ஊற்றிடும்

 தேவ சபையில் எழுந்தருளி
மகிமை பொழிந்திடுவீர்
மகிழ்ச்சி பொங்க பாடிடும் மக்கள்
மனதில் நிறைந்திடுவீர்

2. இரட்சிப்பின் மதில்கள் உயர்ந்திட
வாசல்கள் துதியால் நிறைந்திடும்
ஊழிய எல்லையை நீர் விரித்து
எந்நாளும் சேவையில் கலந்திடும்

3. என்றென்றும் இயேசுவின் கரத்தினால்
அன்றன்று தேவையை பெற்றிடுவேன்
ஒன்றுக்கும் இனி குறைவு இல்லை
சொந்தமாய் உம்மை சார்ந்திடுவேன்

4. தெய்வீக வாசனை சாட்சிக்கே
தீங்கை முற்றும் நீக்கிடுமே
ஆவியும் அருளும் தங்கிடவே
ஞானத்தின் அறிவு பெற்றிடுவேன்

Saturday, 29 January 2022

Thuthiungal Thevanai துதியுங்கள் தேவனை


 

துதியுங்கள் தேவனை 

துதியுங்கள் தூயோனை 


1. அவரது அதிசயங்களை பாடி 

அவரது நாமத்தை பாராட்டி 

அவரை ஆண்டவர் என்றறிந்து 

அவரை போற்றுங்கள் 

ஆப்ரகாமின் தேவனை 

ஈசாக்கின் தேவனை 

ஆர்ப்பரித்து வணங்குங்கள் --- துதியுங்கள் 


2. இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை 

இடையூற்றினை போக்கினோனே 

கானானின் தேசத்தை காட்டினோனே 

கர்த்தரை போற்றுங்கள் 

ராஜாதி ராஜனை 

கர்த்தாதி கரத்தனை 

ஆர்ப்பரித்து வணங்குங்கள் --- துதியுங்கள்


Tuesday, 25 January 2022

Kirubai Purinthenai Aal கிருபை புரிந்தெனை ஆள்


 

கிருபை புரிந்தெனை ஆள்நீ பரனே
கிருபை புரிந்தெனை ஆள்நிதம்

1. திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து
வரில் நரனாகிய மாதுவின் வித்துகிருபை

2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து
நிண்ணயமாய் மிகவும் தயை வைத்துகிருபை

3. தந்திரவான் கடியின் சிறை மீட்டு
எந்தை மகிழ்ந்துன்றன் அன்பு பாராட்டுகிருபை

4.  தீமை உறும் பல  ஆசையை நீக்கி
ஸ்வாமி என்னை உமக்காலயம்  ஆக்கிகிருபை

5. தொல் வினையால் வரு சாபம் ஒழித்து
நல் வினையே செய் திராணி அளித்துகிருபை

6. அம்பர மீதுறை வானவர் போற்றக்
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்தகிருபை


Sunday, 23 January 2022


 

என்னை சுமப்பதனால் இறைவா
உம் சிறகுகள் முறிவதில்லை
அள்ளி அணைப்பதினால் இறைவா
உம் அன்பு குறைவதில்லை
ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
வானம் கிழிவதில்லை
ஆயிரம் மைல்கள் நடந்திட்ட போதும்
நதிகள் அழுவதில்லை
நதிகள் அழுவதில்லை

1. கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்
குழந்தை சுமையில்லை
கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு
இமைகள் சுமையில்லை
மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்
பனித்துளி சுமையில்லை
வானை சுமக்கும் மேகத்திற்கென்றும்
மழைத்துளி சுமையில்லை
மழைத்துளி சுமையில்லை

2. அகழும் மனிதரை தாங்கும்
பூமிக்கு முட்கள் சுமையில்லை
இகழும் மனிதரில் இரங்கும்
மனதிற்கு சிலுவைகள் சுமையில்லை
உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்
நான் ஒரு சுமையில்லை
உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என்
இதயம் சுமையில்லை
இதயம் சுமையில்லை