உயிரோடு எழுந்த என் இயேசுவே
நான் வாழுவேன் உமக்காகவே
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே ரட்சகர்
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
சர்வ வல்லவரே
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
சமாதான காரணரே
1. மரித்து போன அந்த லாசரு
அன்று தேடியே இயேசு வந்தீரே
உந்தன் வாயின் வார்த்தையால்
அங்கு ஜீவன் வந்தது
2. சிலுவையின் அந்த போரிலே
இயேசு நீரே மரித்து போனீரே
ஆனால் உயிரோடு எழுந்தீரே
அந்த எதிரியை ஜெயித்தீரே