Tuesday 21 December 2021

Aththi Maram Thulir Vidamal அத்திமரம் துளிர் விடாமல்


 


அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களி கூருவேன்

1.ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்

2.மந்தையிலே ஆடுகளின்றிப்போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்

3.எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்

4.உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும்


Monday 20 December 2021

Pesum Theivam Neer பேசும் தெய்வம் நீர்


 

பேசும் தெய்வம் நீர்

பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல

 

1.என்னைப் படைத்தவர் நீர்

என்னை வளர்த்தவர் நீர்

என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கி

என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

 

2.என் பாரம் சுமப்பவர் நீர்

என் தாகம் தீர்ப்பவர் நீர்

என்னைப் போஷித்து என்னை உடுத்தி

என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

 

3.என் குடும்ப வைத்தியர் நீர்

ஏற்ற நல் ஔஷதம் நீர்

எந்தன் வியாதி பெலவீனங்களில்

என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

 

4.என்னை அழைத்தவர் நீர்

என்றும் நடத்திடுவீர்

என் மேல் கண் வைத்து ஆலோசனை தந்து

என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

 

5.எனக்காய் வருபவர் நீர்

என் கண்ணீர் துடைப்பவர் நீர்

எல்லாம் முடித்து சீயோனில் சேர்த்து

என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்


Sunday 19 December 2021

Aarathika Koodinom Aarparithu Padiduvom ஆராதிக்கக் கூடினோம்ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்


 

ஆராதிக்கக் கூடினோம்
ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்
வல்ல இயேசு நம் தேவன்
என்றென்றும் அவர் நல் தேவன்

1. தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே
மகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே
மகிமை மகிமையே என் மனம் பாடுதே
மக்கள் மத்தியில் என்றும் மகிழ்ச்சி பொங்குதே

2. சீயோன் பெலனே வெற்றி சிகரமே
சேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார்
ஜீவன் பெலனும் ஆசீர்வாதமே
நித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே

3. கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையே
கர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார்
அல்லேலூயா என் ஆவி பாடுதே
ஆராதனை அழகு என்னை கவர்ந்து கொண்டதே

4. தேவ சாயல் சபையில் தோன்றுதே
தேவர் நடுவில் இயேசு நியாயம் செய்கிறார்
தேவ சேவையே என் கெம்பீர சேவை
தேவாவியில் நிறைந்து நானும் ஆடிப்பாடுவேன்


Aasaiyai Kooduvom ஆசையாய்க் கூடுவோம்


 


1. ஆசையாய்க் கூடுவோம்

அன்புடன் பாடுவோம்

ஈசனார் தம் நேசமாக

வீந்ததைக் கொண்டாடுவோம்

 

மா சந்தோசம் மா கெம்பீரம்

மாந்தர் நாமெல்லாருக்கும்

மாட்சியுறும் காட்சி காண

வாரும் பெத்லகேமுக்கு

 

2. முன்னணை மீதினில்

சின்னவோர் பாலனாய்

உன்னதனொரே குமாரன்

ஒய்யாரமாய் தோன்றினார்

 

3. ரூபமில்லாதவர்

சோபித பூரணர்

சாபம் நிறை பாவ மாம்ச

ரூபெடுத்து வந்தனர்

 

4. தேசுறை பாலகர்

ஜேசென்னும் பேரினர்

மாசு திகில் நீக்கி நம்மை

மீட்க மனுவாயினர்


Saturday 18 December 2021

Just As I am Without One Plea


 

1. Just as I am without one plea
But that Thy blood was shed for me
And that Thou bid’st me come to Thee
O Lamb of God I come I come

 

2. Just as I am and waiting not
To rid my soul of one dark blot
To Thee whose blood can cleanse each spot
O Lamb of God I come I come

 

3. Just as I am though tossed about
With many a conflict many a doubt
Fightings within and fears without
O Lamb of God I come I come

 

4. Just as I am poor, wretched blind
Sight riches, healing of the mind
Yes all I need in Thee to find
O Lamb of God I come I come

 

5. Just as I am Thou wilt receive
Wilt welcome pardon cleanse relieve
Because Thy promise I believe
O Lamb of God I come I come

 

6. Just as I am Thy love unknown
Has broken every barrier down
Now to be Thine yea Thine alone
O Lamb of God I come I come


Thursday 16 December 2021

When Upon Life's Billows


 


1. When upon life’s billows you are tempest tossed,

When you are discouraged, thinking all is lost,

Count your many blessings name them one by one,

And it will surprise you what the Lord hath done.

 

Count your blessings, name them one by one;

Count your blessings, see what God hath done;

Count your blessings, name them one by one,

 And it will surprise you what the Lord hath done

 

2. Are you ever burdened with a load of care

Does the cross seem heavy you are called to bear

Count your many blessings   every doubt will fly

And you will be singing as the days go by.

 

3. When you look at others with their lands and gold,

Think that Christ has promised you His wealth untold.

Count your many blessings, money cannot buy

your reward in heaven, nor your Lord on high.

 

4. So amid the conflict, whether great or small,

Do not be discouraged, God is over all;

Count your many blessings, angels will attend,

Help and comfort give you to your journey’s end.


Wednesday 15 December 2021

Enthan Yesuvin Anbathaiye எந்தன் இயேசுவின் அன்பதையே


 

எந்தன் இயேசுவின் அன்பதையே
எண்ணும் வேளையில் ஆனந்தமே

1. கடந்த நாட்களில் கைவிடாமலே
கண்ணின் மணிபோல் காத்ததினால்
மனப்பூர்வமாய் துதிப்பேன் மகிழ்வுடனே
மன்னன் கிறிஸ்தேசுவையே

2. அழைத்த பாதையில் தளர்ந்த வேளையில்
அன்பின் மொழியால் பேசினாரே
புது ஜீவனும் நிறைவாய் அளித்ததினால்
புண்ணியனைப் போற்றிடுவேன்

3. வறுமை வியாதியின் வலிய தோல்வியும்
வந்த வேளையில் தாங்கினாரே
ஜெய கீதமே தினமும் எவ்வேளையிலும்
ஜெயத்துடன் பாடிடுவேன்

4. நெகிழ்ந்த கரங்களை உயிர்த்து இதுவரை
இழந்த வரங்களும் ஈந்ததினால்
அவர் சேவையை புரிந்து கனம் மகிமை
அவருக்கே செலுத்திடுவேன்

5. நிறைந்த ஜோதியாய் திறந்த வானிலே
நீதி சூரியன் தோன்றிடுவார்
மறு ரூபமே அடைந்தே பறந்திடுவேன்
மட்டற்ற பேரின்பமுடன்