Saturday, 11 December 2021

Karthar Yesu Vakkai Nambuvom கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம்


 

கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் என்றும்
கர்த்தர் அவரில் நிலைத்து ஓங்குவோம்
சுத்தராய் வாழ்ந்துமே தேவ சேவை செய்து
இயேசு ராஜன் பின் செல்லுவோம் --- கர்த்தர் இயேசு

1. சுற்றி நிற்கும் பாவம் யாவும் முற்றும் தள்ளியே
கர்த்தர் ராஜ்யம் சேர்ந்திட முன்னே செல்லுவோம்
தேவ கிருபையில் நிலைத்து நின்றிட
தாழ்மையோடு தேவ பாதம் சேர்ந்திடுவோம் -- கர்த்தர் இயேசு  

2. வானம் பூமி யாவும் முற்றும் மாறிப் போயினும்
தேவ வார்த்தை என்றுமாய் நிலைத்து நிற்குமே
சத்திய வாக்கினில் உறுதி யடைந்துமே
சத்திய தேவன் வாக்கை நம்பி முன் செல்லுவோம் --- கர்த்தர் இயேசு

3. வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் உண்மையுள்ளவர்
முற்றுமாக நம்பியே முன்னே செல்லுவோம்
கிறிஸ்து இயேசுவே நமது நம்பிக்கை
பரம தேசம் சென்று ஏகி வாழ்ந்திடுவோம் --- கர்த்தர் இயேசு


Friday, 10 December 2021

Ventranarae Nam Yesu Paran வென்றனரே நம் இயேசு பரன்


 

வென்றனரே நம் இயேசு பரன்
என்றென்றும் ஜெயித்தெழுந்தார்
ஜெயமே அடைந்துமே
இரட்சகரில் வளருவோம்  வென்றனரே

1. சேதமேதும் நெருங்கிடா
தேவ தேவன் தாங்குவார்
துன்பம் யாவும் நீங்கிடும்
இன்பம் என்றும் தங்கிடும்வென்றனரே

2. தீங்கு நாளில் மறைத்துமே
சுகமாய் காத்து மூடுவார்
தகுந்த வேளை கரத்தினில்
உயர்த்தி ஜெயமே நல்குவார்வென்றனரே

3. தேவனோடு செல்லுவேன்
மதிலைத் தாண்டி பாயுவேன்
உலகை ஜெயிக்கும் தேவனால்
யாவும் ஜெயித்து செல்லுவேன்வென்றனரே

4. நீதிமானை உயர்த்துவார்
நீதிபரனாம் இயேசுவே
சத்துரு வீழ்ந்து அழிந்திட
தேவன் ஜெயமே தந்திடுவார்வென்றனரே


Thursday, 9 December 2021

Yesu Devanai Valthiduvomae இயேசு தேவனை வாழ்த்திடுவோமே


 

இயேசு தேவனை வாழ்த்திடுவோமே
இன்ப துதிகள் செலுத்திடுவோமே
எம்மை நேசிப்பவர் இவர் தாமே
எங்கள் ஆத்தும இரட்சகராமே

1. கண்ணின் மணிபோல காத்தார்
கர்த்தர் எந்தன் நல் மேய்ப்பர்
சாலேமின் ராஜா சாரோனின் ரோஜா
சமாதானப் பிரபு நம் இயேசுவே

2. தேவ சமாதானம் நதி போல்
தேவ வசனமோ பனி போல்
கன்மலை வெடிப்பில் தங்கிடும் சபையில்
கிருபையோடு வந்திறங்குதே

3. நீதிமான்களைப் பனை போல்
நல்ல கனி தரும் மரம் போல்
வேலி அடைத்திட்ட சிங்கார வனமாய்
வற்றாத நீருற்றாய் மாற்றுகிறார்

4. வாசிப்போம் தினம் வேதம்
நேசிப்போம் இயேசு நாமம்
இறுதி காலம் விழிப்படைவோம்
இடைவிடாமல் ஜெபித்திடுவோம்

5. அந்தி கிறிஸ்துவே ஆளும்
அந்த மிருகத்தின் காலம்
நாசங்கள் மோசங்கள் நானிலம் வருதே
நாமோ இப்பூமியை விட்டேருவோம்

6. இயேசு நமக்காக வருவார்
மேகமீதினில் ஒரு நாள் 
முந்திக் கொள்வோம் நாம் இயேசுவை சந்திக்க
மறுரூபமாய் பறந்திடுவோம்

துதி கீதமே பாடியே வாழ்த்தி வணங்கிடுவோம்


 

Thuthi geethamae paadiyae
vaalthi vanangiduvom
jothiyin thevanaam
Yesuvai panninthiduvom

1. Thanthai pol nammai thaangiyae
tholil enthi sumanthanarae
setham ethum anugidaamal
kaatha thevanai thuthithiduvom

2. Kaarirul pontra vaelaiyil
paaril nammai thetrinaarae
nampinorai thaangum thevan
intrum entrumaai thuthithiduvom

3. Panjai pol vennmai aagida
paavam yaavum neekinaarae
sontha iraththam sinthi nammai
meeta thevanai thuthithiduvom

4. Kattugal yaavum aruthumae
kanneer kavalai agatrinaarae
thuthiyin aadai aruli seitha
theva thevanai thuthithiduvom

5. Vaanathil Yesu thontriduvaar
aayathamaagi ekiduvom
anpar Yesu saayal adainthu
entrum magilnthae vaalthiduvom

 

Wednesday, 8 December 2021

Varum Vanjaipata Yesu வாரும் வாஞ்சைப்பட்ட யேசு


 

1. வாரும் வாஞ்சைப்பட்ட யேசு

 மீட்பராக வந்த நீர்

பாரமான பாவக்கேடு

நீங்கச் செய்து தேற்றுவீர்

 

2. இஸ்ரவேலின் சர்வ வல்ல

மேசியாவாம் கர்த்தர் நீர்

மாந்தர் யாரும் எதிர்பார்த்த

பாவ நாசர் தேவரீர்

 

3. ரட்சித்தாளப் பாரில் வந்த

பிள்ளையான ராயரே

என்றும் உம்மை அண்டிக் கொள்ள

அருள் செய்யும் மீட்பரே

 

4. நித்திய ஆவி எங்கள் நெஞ்சில்

தங்கி ஆள அருளும்;

உந்தன்  புண்யத்தாலே விண்ணில்

நாங்கள் வாழச் செய்திடும்.

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே


 

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கி வா
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்

1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரேஊற்றுத்

2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்
கனி தந்திட நான் செழித்தோங்கிட
கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிடஊற்றுத்

3. இரட்சிப்பின் ஊற்றுகள் எந்தன் சபைதனிலே
எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே
ஆத்ம பாரமும் பரிசுத்தமும்
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே ஊற்றுத்

4. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்கள் வெளிப்படுதே
பாவக்கறைகள் முற்றும் நீங்கிட
பரிசுத்தர் சமூகத்தில் ஜெயம் பெற்றிடஊற்றுத்

5. கிருபையின் ஊற்றுகள் பெருகிடவே
புது பெலனடைந்து நான் மகிழ்ந்திடவே
பரிசுத்தத்தை நான் பயத்துடனே
பூரணமாக்கிட தேவ பெலன் தாருமேஊற்றுத்


Tuesday, 7 December 2021

Wherewith O God


 

1.  Wherewith O God, shall I draw near,

And bow myself before thy face

How in thy purer eyes appear

What shall bring to gain thy Grace

 

2.  Will gifts delight the Lord most high

Will multiplied oblations please

Thousands of rams his favour buy

Or slaughtered hecatombs appease

 

3.  Can these assuage the wrath of God

Can these wash out my guilty stain

Rivers of oil, and seas of blood,

Alas  they all must flow in vain.

 

4.  Guilty I stand before thy face,

On me I feel thy wrath abide

Tis just the sentence should take place

Tis just but O thy Son hath died

 

5.  Jesus, the Lamb of God hath bled,

He bore our sins upon the tree;

Beneath our curse he bowed his head

Tis finished he hath died for me

 

6.  See where before the throne he stands,

And pours the all prevailing prayer;

Points to his side, and lifts his hands,

And shows that I am graven there.

 

7.  He ever lives for me to pray;

He prays that I with him may reign

Amen to what my Lord doth say

Jesus, thou canst not pray to vain.