Tuesday, 30 November 2021

Kanmani Nee Kanvalarai கண்மணி நீ கண்வளராய்


 

கண்மணி நீ கண்வளராய்

விண்மணி நீ உறங்கிடுவாய்

கண்மணி நீ கண்வளராய்

 

1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட

நீங்கும் துன்பம் நித்திரை வர

ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட

தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்

கந்தை துணி பொதிந்தாயோ

 

2. சின்ன இயேசு செல்லப் பாலனே

உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே

என்னைப் பாரும் இன்ப மைந்தனே

உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற

ஏழை மகவாய் வந்தனையோ

 

3. வீடும் இன்றி முன்னனைதானோ

காடும் குன்றும் சேர்ந்ததேனோ

பாடும் கீதம் கேளாயோ நீயும்

தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய

ஏழ்மைக் கோலம் கொண்டனையோ


Friday, 26 November 2021

Karthar Ennai Visaarippavar கர்த்தர் என்னை விசாரிப்பவர்


 

கர்த்தர் என்னை விசாரிப்பவர்
கர்த்தர் என்னை ஆதரிப்பவர்
கர்த்தர் என்னை உயர்த்துபவர்
கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர்

1. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னை
அவர் நித்தம் நடத்திச் செல்வதால்
எந்தன் கவலை பாரத்தை முற்றும்
அவர் மீது வைத்திடுவேன் நான்

2. எந்தன் தலையிலுள்ள மயிரெல்லாம்
உன்னதரே எண்ணி வைத்துள்ளார்
அவரின் உத்தரவில்லா தொன்றும்
கீழே விழாது என்று அறிவேன் நான்

3. தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க
மனிதன் எனக்கு என்னதான் செய்வான்
எந்தன் கண்ணீரைத் தம் துருத்தியில்
அவரின் கணக்கில் வைத்துள்ளாரல்லோ

4. வலது கரத்தைப் பிடித்து என்னையும்
உனது துணை நான் என்று சொல்லி
வழக்காடுவோர் அனைவரையுமே
வெட்கப்பட்டு போக செய்வாரே

5. தேவன் தமது ஐசுவரியத்தினால்
எந்தன் குறைகளை எல்லாமே
கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில்
நிறைவாக்குவாரே கவலை ஏன்

Thursday, 25 November 2021

Siluvaiyin Nilalil Anuthinam சிலுவையின் நிழலில் அனுதினம்


 

சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாறிடுவேன்

சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்சிலுவையின்

1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்து
தளர்ந்த என் ஜீவியமே
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகில்
ஏகுவேன் பறந்தே வேகம்சிலுவையின்

2. எவ்வித கொடிய இடறுக்கும் அஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன்
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார்சிலுவையின்

3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன்
திருமறை இன்னிசை நாதம்
தேனிலும் இனிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம்சிலுவையின்

Tuesday, 23 November 2021

En Yesuvae Ummai Allal என் இயேசுவே உம்மை அல்லால்


 

என் இயேசுவே உம்மை அல்லால்
மண்ணில் ஆறுதல்
ஒன்றும் கண்டிலேன்

1. சுக செல்வ மகிமை பெருமையிலெங்கும்
இன்பம் தரும் பொருள் காணேன்
தாகம் பெருகும் தண்ணீரேயன்றி
லோகம் வேறொன்றும் நல்காதே

2. ஆபத்துக் காலத்தில் அனுகூலமான
துணையும் நீர் பெலனுமே நாதா
ஆகையால் பூமி நிலை மாறினாலும்
அஞ்சேன் கடல் பொங்கினாலும்

3. பாழ்மணல் பாதையில் எரியும் வெயிலில்
பரனே உம் கிருபையின் நிழலில்
பாடி மகிழ்வேன் குருசை புகழ்வேன்
பேரின்ப நாட்டில் நான் வாழ்வேன்

4. என் நேசர் இயேசுவில் நித்தமும் சார்ந்து
பரதேச  யாத்திரை செய்வேன்
பாரினில் பொங்கும் துயரங்கள் தங்கும்
பாரங்கள் ஏதும் நானறியேன்

5. உமதன்பின் இனிமையை என்றும் ருசிப்பேன்
உலகின் வினைகள் மறப்பேன்
உருகும் என் நெஞ்சம் அருளும் நல் தஞ்சம்
பெருகும் என் இதயத்தின் இன்பம்

Friday, 19 November 2021




இஸ்ரவேலின் ஜெய பெலனே

சேனை அதிபதியே

முன்னே செல்லும் எங்கள் இயேசு

வெற்றி சிறந்தவரே

 

1. எகிப்தின் ஜனத்தை இருளும் பின்ன

திகைத்து தவித்தனரே

ஒளியில் என்றும் இஸ்ரவேலை

நடத்தி நிதமே காத்திடுவார்

 

2. கடலைப் பிளந்து வழியைத் திறப்பார்

கர்த்தர் பெரியவரே

பார்வோன் சேனை தொடர்ந்து வரினும்

துணிந்து முன்னே சென்றிடுவோம்

 

3. தேவ ஜனத்தின் எதிராய் தோன்றும்

சத்ரு வீழ்ந்திடுவான்

ஓங்கும் புயமும் தேவ கரமும்

தாங்கி நம்மை நடத்திடுமே

 

4. பாலைவனத்தில் பசியை ஆற்ற

மன்னா அளித்தனரே

நமது ஆத்ம தாகம் தீர்த்து

புதிய பெலனை அளித்திடுவார்

 

5. பொங்கி எழும்பும் யோர்தான் நதியை

தடுத்து நிறுத்தினாரே

அல்லல் யாவும் நீக்கி நம்மை

அக்கரையில் சேர்த்திடுவார்

Thursday, 18 November 2021

Aranum Kotaiyum அரணும் கோட்டையும்



 




அரணும் கோட்டையும்

பெலனாய் காப்பவர்

திடமாய் ஜெயித்திட

எனது என்றென்றும் துணையே

 

1. ஜீவ நம்பிக்கை நல்க

இயேசு மரித்து எழுந்தார்

அழிந்திடாத உரிமை பெறவே

மறு ஜென்மம் அடையச் செய்தார் - அரணும்

 

2. மகிழ்ச்சி ஆனந்தம் தங்க

மகிமை நம்பிக்கை ஈந்தார்

நீதிமானை செழிக்கச் செய்து

என்றென்றும் ஜெயம் நல்குவார் - அரணும்

 

3. தம்மால் மதிலை தாண்டி

உம்மால் சேனைக்குள் பாய்வேன்

எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன்

என்றென்றும் துணை செய்கின்றார் - அரணும்

 

4. வாழ்வில் முன்னேறிச் செல்ல

நல்ல நம்பிக்கை ஈந்தார்

கிருபை சொரிந்து அன்பை பொழிந்தார்

வளர்ந்தே நிலைத்திடுவோம்   - அரணும்

 

5. இருளை வெளிச்சமாக்க

ஒளியை அருளிச் செய்வார்

எந்தன் தீபம் நின்று எரிய

என்றென்றும் அருள் செய்குவார் - அரணும்


Jeevikirar Yesu Jeevikirar ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்


 

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்

1. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்

2. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே