Tuesday 5 October 2021

Konja Kaalam கொஞ்ச காலம்


 

கொஞ்ச காலம் இயேசுவிற்காக

கஷ்டப்பாடு சகிப்பதினால்

இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்

இயேசுவை நான் காணும் போது

 

அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன்

ஆனந்த கண்ணீர் வடிப்பேன்

எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்

அந்த நாடு சுதந்தரிப்பேன்

 

1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை

கடந்தென்று நான் மறைவேன்

ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே

தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் - கொஞ்ச

 

2. இந்த தேகம் அழியும் கூடாரம்

இதை நம்பி யார் பிழைப்பார்

என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே

இயேசுவோடு நான் குடியிருப்பேன் - கொஞ்ச

 

3. வீணை நாதம் தொனித்திடும் நேரம்

வரவேற்பு அளிக்கப்படும்

என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்

எனக்கானந்தம் பொங்கிடுமே - கொஞ்ச

 

4. பலியாக காணிக்கையாக

படைத்தேனே உமக்காக

என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே

ஏழை நான் என்றும் உம் அடிமைகொஞ்ச

Monday 4 October 2021

Kaalai Thorum Karthanae காலை தோறும் கர்த்தனே


 

காலை தோறும் கர்த்தனே புது
கிருபையை தினம் பொழிகின்றீரே
காலை தோறும் கர்த்தனே

நம் தேவன் நல்லவரே
மாதேவன் வல்லவரே
உம் சமூகம் எனக்கானந்தமே

1. ஆழியின் அலைகள் ஓயாதுபோல்
அன்பின் அலைகள் எழும்புமே
மலைகள் விலகும் பர்வதம் அகலும்
மாறா உம் கிருபை நீங்கிடாதே

2. ஆதி அதிசயம் அற்புதங்கள்
வல்லமை நானும் கண்டிடவே
மகிமையின் சாயல் அணிந்து நானும்
மனதில் மறுரூபமாகிடுவேன்

3. சபையின் நடுவில் வல்லமை விளங்க
சந்ததம் ஓங்கும் புகழ் நிற்க
சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில்
சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய்

4. கனிமரமாய் செழித்திடவே
கர்த்தரே உமது பெலன் தாரும்
காலா காலத்தில் பலனைக் கொடுக்க
கண்மணி போல் என்னைக் காத்திடுவீர்

5. ஜாதிகள் நடுவில் உம் ஜனமே
கலங்கரை விளக்காய் திகழவே
எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய
அக்கினி ஆவி ஊற்றிடுவீர்

Saturday 2 October 2021

Alleluya Alleluya En Aathumaave அல்லேலூயா அல்லேலூயா என் ஆத்துமாவே


 

அல்லேலூயா அல்லேலூயா
என் ஆத்துமாவே கர்த்தரை துதி

1. நான் உயிரோடு இருக்குமட்டும்
என் தேவனை துதிப்பேனே
நான் உள்ளளவும் என் இயேசுவையே
கீர்த்தனம் பண்ணிடுவேன்

2. நான் மனிதனை என்றும் நம்பிடேன்
அவன் யோசனை அழிந்திடுமே
யாக்கோபின் தேவன் என் துணையே
என்றென்றும் பாக்கியவான்

3. என் ஆத்துமத் தாகம் பெருக
என் கட்டுகள் அறுந்திடுமே
கர்த்தரின் கரம் என்னைக் காத்திடுமே
என்றென்றும் வாழ்ந்திடுவேன்

4. கர்த்தர் சதா காலமும்
சீயோனில் அரசாளுவார்
தலைமுறை தலைமுறையாய் அவரே
இராஜரீகம் பண்ணிடுவார்

Friday 1 October 2021

Yesuvaalae Pidikkapattavan இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்


 

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
அவர் இரத்ததாலே கழுவப்பட்டவன்
எனக்கென்று எதுவுமில்ல
இப்பூமி சொந்தமில்ல

எல்லாமே இயேசுஎன் இயேசு
எல்லாம் இயேசு இயேசு இயேசு

1. பரலோகம் தாய்வீடு
அதைத் தேடி நீ ஓடு
ஒருவரும் அழிந்து போகாமலே
தாயகம் வர வேண்டும் தப்பாமலே

2. அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட
அடிமையை தெரிந்தெடுத்தார்இந்த

3. பாடுகள் அநுபவிப்பேன்
பரலோக தேவனுக்காய்
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்
களிர்கூர்ந்து மகிழ்ந்திருப்பேன்நான்

4. இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகின்றேன்
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
எல்லாமே இழந்து விட்டேன் நான்

5. பின்னானவை மறந்தேன்
முன்னானவை நாடினேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கித் தொடருகின்றேன்

6. நீதியை விரும்புகிறேன்
அக்கிரமம் வெறுக்கிறேன்
ஆனந்த தைல அபிஷேகத்தால்
அனுதினம் நிரம்புகிறேன்

Thursday 30 September 2021

Naan Nesikum நான் நேசிக்கும்


 

நான் நேசிக்கும் தேவன்

இயேசு என்றும் ஜீவிக்கிறார்

அவர் நேற்றும் இன்றும் நாளை

என்றும் மாறாதவர்

 

நான் பாடி மகிழ்ந்திடுவேன்

என் இயேசுவைத் துதித்திடுவேன்

என் ஜீவிய காலமெல்லாம்

அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்

 

1. கடலாம் துன்பத்தில் தவிக்கும்

வேளையில் படகாய் வந்திடுவார்

இருள் தனிலே பகலவனாய்

இயேசுவே ஒளி தருவார்

 

2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்

மருத்துவராகிடுவார்

மயங்கி விழும் பசிதனிலே

மன்னாவைத் தந்திடுவார்

 

3. தூற்றும் மாந்தரின் நடுவில்

எந்தனை தேற்றிட வந்திடுவார்

கால் தளர ஊன்றுகோலாய்

காத்திட வந்திடுவார்

 

4. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க

நான் இனி கலங்கிடேனே

எந்தனுக்கே காவல் அவர்

நான் உடல் அவர் உயிரே

Wednesday 29 September 2021

Singa Kuttigal Pattini சிங்கக் குட்டிகள் பட்டினி


 சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்

ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

குறையில்லையே குறையில்லையே

ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே


1. புல்லுள்ள இடங்களிலே

என்னை மேய்க்கின்றார்

தண்ணீரண்டைக் கூட்டிச் சென்று

தாகம் தீர்க்கின்றார்


2. எதிரிகள் முன் விருந்தொன்றை

ஆயத்தப்படுத்துகின்றார்

என் தலையை எண்ணெயினால்

அபிஷேகம் செய்கின்றார்


3. ஆத்துமாவைத் தேற்றுகின்றார்

ஆவி பொழிகின்றார்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்

கிருபை என்னைத் தொடரும்


4. என் தேவன் தம்முடைய

மகிமை செல்வத்தினால்

குறைகளையே கிறிஸ்துவுக்குள்

நிறைவாக்கி நடத்திடுவார்

Tuesday 28 September 2021

En Yesu Raja என் இயேசு ராஜா


 

என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும் (2)
அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிருபை முன் செல்ல அருளும் (2)

1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2)
கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ
கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) – என் இயேசு

2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2)
பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது
பரமனே என் முன் தீபமாய் வாரும் (2) – என் இயேசு

3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (2)
இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்
என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) – என் இயேசு