Thursday, 26 August 2021

Karthar Periyavar கர்த்தர் பெரியவர்


 

கர்த்தர் பெரியவர் அவர் நமது
தேவனுடைய நகரத்திலே
தமது பரிசுத்த பர்வதத்திலே
மிகத் துதிக்கப்படத் தக்கவர்

1. வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம்
வடிப்பமான ஸ்தானமே
சர்வ பூமியின் மகிழ்ச்சியாயிருக்கிறது
அது மகா ராஜாவின் நகரம்

2. அதின் அரமனையில் தேவன் உயர்ந்தவராய்
அடைக்கலமாக அறியப்பட்டார்
இதோ ராஜாக்கள் ஏகமாய்க் கடந்து வந்து
அதை கண்டு விரைந்தோடினர்

3. தேவனே உமது ஆலயம் நடுவே
உம் கிருபையை சிந்திக்கிறோம்
பூமியின் கடையாந்தர பரியந்தமும்
உம் புகழ்ச்சியும் விளங்கிடுதே

4. இந்த இயேசு தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
நித்திய மகிமையில் சேர்த்திடுவார்

Tham kirubai Perithallo


 

தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே

1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாள் எல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்யக் கிருபை தாருமேதம் கிருபை

2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்று கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமேதம் கிருபை

3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமேதம் கிருபை

4. மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய்ச் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமேதம் கிருபை

5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை
என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமே
நிலை நிற்கும் கிருபை தாருமேதம் கிருபை

6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெப வரம் கிருபை தாருமேதம் கிருபை

7. கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை
காத்திருந்தே அடைந்திடவே
இயேசுவே உம்மைச் சந்திக்கவே
இரக்கமாய்க் கிருபை தாருமேதம் கிருபை

Wednesday, 25 August 2021

Nam Devanai Thuthithu Paadi நம் தேவனை துதித்துப் பாடி


 

நம் தேவனைத் துதித்துப் பாடி
அவர் நாமம் போற்றுவோம்

களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம்

1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றுவோம்களி கூர்

2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
அவர் நாமம் போற்றுவோம்
நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றுவோம்களி கூர்

3. மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
பேரின்ப நாடு தன்னில் வாழ
அவர் நாமம் போற்றுவோம்களி கூர்

 

Ummai Thuthipaen உம்மை துதிப்பேன்


 

உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே
உம் கிரியைகள் அற்புதமானதே
உம்மைத் துதிப்பேன் தேவாதி தேவனே
உம் ஆலோசனைகள் அருமையானதே

1. என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்
என் நினைவுகளையும் தூரத்தில் அறிவீர்
என் நாவினிலே சொல் பிறவா முன்னமே
எந்தன் தேவனே அவையாவும் அறிவீர்

2. உமக்கு மறைவாய் இருளும் மூடாதே
இரவும் பகலைப் போல் வெளிச்சமாகுதே
உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்
இந்த அறிவு ஆச்சரியமானதே

3. என்னை சோதித்து அறிந்து கொள்ளுமே
வேதனை வழி என்னின்று அகல
நித்திய வழி என்னை நடத்துமே
எந்தையே எந்தன் உள்ளம் பாடிட

4. வானில் சென்றாலும் அங்கே இருக்கிறீர்
விடியற்காலத்துச் செட்டையில் பறந்தாலும்
பாதாளத்திலே படுக்கை போட்டாலும்
உமது கரத்தால் என்னைப் பிடிக்கிறீர்

Monday, 23 August 2021

Yesu Entra Thiru Namathirku இயேசு என்ற திரு நாமத்திற்கு


 

இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்

1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமம் அது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது

2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திருநாமமது
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே

3. பாவத்திலே மாளும் பாவியை மீட்க
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது

4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது

5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடை முற்றும் அகற்றிடும் நாமமது

Senai Athiban Nam சேனை அதிபன் நம்


 

1. சேனை அதிபன் நம் கர்த்தருக்கே

செலுத்துவோம் கனமும் மகிமையுமே

அற்புதமே தம் அன்பெமக்கு  

அதை அறிந்தே அகமகிழ்வோம்


ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்

ஜெயமாக நடத்திடுவார்

ஜெயக்கீதங்கள் நாம் பாடியே

ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்

ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே


2. தாய் மறந்தாலும் நான் மறவேன்

திக்கற்றோராய் விட்டு விடேன்

என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்

என்றும் வாக்கு மாறிடாரே — ஜெய


3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே

நானே நல்ல மேய்ப்பன் என்றார்

இன்பச் சத்தம் பின் சென்றிடுவோம்

இன்பப் பாதைக் காட்டிடுவார் — ஜெய


4. சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய

சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க

சாத்தானின் சேனை நடுங்கிடவே 

துதி சாற்றி ஆர்ப்பரிப்போம் — ஜெய


5. கறை திரை முற்றும் நீங்கிடவே

கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்

வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை

வழுவாமல் காத்துக் கொள்வார் — ஜெய

Sunday, 22 August 2021

Thiyangum Ullam kandaar தியங்கும் உள்ளம் கண்டார்


 

தியங்கும் உள்ளம் கண்டார்

தயக்கம் என்ன என்றார்

திகைக்கும் என் மனதில்

திரு வார்த்தை அருளித் தந்தார்

 

1. துதிப்பேன் என் கர்த்தரை

துதி சாற்றி மகிழ்ந்திடுவேன்

என்னைக் கண்டு மனதுருகும்

அன்பர் இயேசு என்அருகில் உண்டே

 

2. கதறும் ஆத்துமாவே

கலங்காதே என்றவரே

கலைமான்களும் கதறி அழும்

நீரோடையை  வாஞ்சிப்பதால்

 

3. அவர் என் கன்மலையே

அசையாத நல் பர்வதமே

அரும் பாவ உலகமதில்

அவர் அன்பதில் நிலைத்திருப்பேன்