Saturday, 17 July 2021

Yesuvukkai Thondu Seithidave இயேசுவுக்காய் தொண்டு செய்திடவே


 

இயேசுவுக்காய் தொண்டு செய்திடவே
ஏகமாய் எழும்பிடுவீர் சபையே
நாசமிந் நானிலத்தில் வருதே

1. தமக்கு முன் வைத்த மகிமை எண்ணி
தளராமல் பாடுகள் சகித்தவரை
நோக்கியே நாம் ஓடிடுவோம்
தாங்கியே காப்பாரே கடைசிவரைஏசுவுக்காய்

2. பாவத்தில் மா ஜனம் அழிகிறதே
லோகத்தின் இரட்சிப்பைக் கருதியே நாம்
நள்ளிரவோ நடுப்பகலோ
நருங்குண்ட ஆவியில் ஜெபித்திடுவோம்- ஏசுவுக்காய்

3. பேதுரு பவுலும் ஸ்தேவானும் அன்று
பெரும் ரத்தசாட்சியாய் மரித்தது போல்
புறப்படுவோம் ஏசுவுக்காய்
போர் முனையில் ஜீவன் வைத்திடவேஏசுவுக்காய்

4. ஒருவரும் கிரியை செய்ய இயலா
இருண்ட இராக்காலம் எதிர்படுமுன்
ஏகோபித்து எழும்பிடுவோம்
இயேசுவின் சத்தியம் சாற்றிடவேஏசுவுக்காய்

5. மேகத்தில் ஏசுதான் தோன்றிடும் நாள்
வேகத்தில் நெருங்கிடும் காலமிதில்
பரிசுத்தத்தை காத்துக் கொண்டே
பரமனுக்காய் கடும் சேவை செய்வோம்ஏசுவுக்காய்

 


Friday, 16 July 2021

Thothira Pathirane தோத்திர பாத்திரனே


Thothira Pathirane 

தோத்திர பாத்திரனே தேவா

தோத்திரந் துதியுமக்கே

நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்

நித்தியம் துதியுமக்கே


1. சத்துரு பயங்களின்றி  நல்ல

நித்திரை செய்ய எமை

பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே

சுற்றிலுங் கோட்டையானாய் 


2. விடிந்திருள் ஏகும்வரை  கண்ணின்

விழிகளை மூடாமல்,

துடி கொள் தாய்போல் படிமிசை எமது

துணை எனக் காத்தவனே 


3. காரிருள் அகன்றிடவே  நல்ல

கதிரொளி திகழ்ந்திடவே

பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன

பாங்கு சீராக்கி வைத்தாய்


4. இன்றைத் தினமிதிலும்  தொழில்

எந்தெந்த வகைகளிலும்

உன் திருமறைப்படி ஒழுகிட எமக்கருள்

ஊன்றியே காத்துக் கொள்வாய்

Ratha Satchi Koottam இரத்த சாட்சி கூட்டம்


 

1. இரத்த சாட்சி கூட்டம் சத்திய பாதையில்

நித்தம் தம்மைத் தத்தம் செய்து வீர சேவையில்

ஜீவன் சுகம் பெலன் யாவையும்  ஈந்ததால்

சுத்த சுவிசேஷம் ஓங்குதே

 

போர் வீரரே பூமி மாளுதே

பாய்ந்து செல்லுவீர் நம் இயேசுவின் பின்னே

தேவ ராஜ்யம் ஓங்கவே பாவ மக்கள் மீளவே

தியாகப் பரிசுத்தராய் சேவை செய்குவோம்

 

2. ஜாதி மதபேதம் முற்றும் நீங்கிட

ஜோதியாய்ப் பிறந்து லோகப் பாவம் போக்கிட

கல்வாரியில் மரித்தே உயிர்த்தெழுந்த

கர்த்தரின் நற்செய்தி சாற்றுவோம் -போர் வீரரே

 

3. நாடு நகரமோ காடு மலையோ

நாடி தேடி ஓடியே நல் ஊழியம் செய்வோம்

மாண்டழியும் மக்கள் மேல் மனதுருகி

கண்டறிந்த சாட்சி கூறுவோம் -போர் வீரரே

 

4. தாகமோ பசியோ நோக்கிடாமலே

லோக இன்ப துன்பமோ நெருங்கிடாமலே

முன் வைத்த காலையும் பின் வைத்திடாமலே

இன்னமும் முன்னேறி சேவிப்போம் -போர் வீரரே

 

5. உன்னத அழைப்பை என்றும் காத்திட

ஊக்கமாய் உறுதியாய் தகுதி பெற்றிட

ஆவியிலே அனலாய் நிலை நின்றிட

ஆண்டவர் அருள் பொழிகுவார் -போர் வீரரே

 

6. சுத்த ஜீவியம் நற்சாட்சி பெறுவோம்

சத்திய வழி நடக்கும் பக்தி நாடுவோம்

வாக்கு வரம் வல்லமை அடைந்திடுவோம்

வல்ல விசுவாச சேவையில் -போர் வீரரே

 

7. பிரதி பலன் ஏந்தி ஏசு வருவார்

பாடுபட்ட கர்த்தரோடு நாமும் சேருவோம்

ஆதிப்பிதாக்களுடன் ரத்த சாட்சிகள்

ஆர்ப்பரித்து கூடி வாழுவோம் -போர் வீரரே

Thursday, 15 July 2021

En Idhayam Yaarukku Theriyum என் இதயம் யாருக்கு தெரியும்


 

என் இதயம் யாருக்கு தெரியும்
என் வேதனை யாருக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னை தேற்றக் கூடும்  (2)

1. நெஞ்சின் நோவுகள்
அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே
உள்ளம் ஏங்குதே  (2)

2. சிறகு ஒடிந்த பறவை
அது வானில் பறக்குமோ
உடைந்த உள்ளமும்
ஒன்று சேருமோ  (2)

3. மங்கி எரியும் விளக்கு
பெருங்காற்றில் நிலைக்குமோ
வீசும் புயலிலே
படகும் தப்புமோ (2)

4.அங்கே தெரியும் வெளிச்சம்
கலங்கரை தீபமோ
இயேசு ராஜனின்
முகத்தின் வெளிச்சமே – (2)

என் இதயம் இயேசுவுக்கு தெரியும்
என் வேதனை இயேசுவுக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
இயேசென்னை  தேற்றுவார் (2)

En Jeevan Kiristhu Thamae என் ஜீவன் கிறிஸ்து தாமே


 

1. என் ஜீவன் கிறிஸ்து தாமே
அதாலே எனக்கு
என் சாவாதாயமாமே
நெஞ்சே மகிழ்ந்திரு.

2. நான் இயேசு வசமாக
சேர்ந்தென்றும் வாழவே
மா சமாதானமாக
பிரிந்து போவேனே.

3. பாடற்றுப்போம் அந்நாளே
என் நோவும் முடியும்
என் மீட்பர் புண்ணியத்தாலே
மெய் வாழ்வு தொடங்கும்

4. நான் பேச்சு மூச்சில்லாமல்
குளிர்ந்துபோயினும்
என் ஆவியைத் தள்ளாமல்
உம்மண்டை சேர்த்திடும்.

5. அப்போது நான் அமர்ந்து
என் நோவை மறப்பேன்
உம் சாந்த மார்பில் சாய்ந்து
நன்கிளைப்பாறுவேன்.

6. நான் உம்மைக் கெட்டியாக
பிடித்தும்முடனே
அநந்த பூரிப்பாக
வாழட்டும் இயேசுவே.

Unnatha Salame உன்னத சாலேமே


 

1. உன்னத சாலேமே
என் கீதம் நகரம்
நான் சாகும் நேரமே
மேலான ஆனந்தம்.

விண் ஸ்தானமே
கர்த்தா எந்நாள்
உம் திருத் தாள்
சேவிப்பேனே

2. பூவில் தகாரென்றே
தீர்ப்புற்ற நாதனார்
தம் தூதரால் அங்கே
சீர் வாழ்த்தல் பெறுவார்.

3. அங்கே பிரயாணத்தை
பிதாக்கள் முடிப்பார்
வாஞ்சித்த பிரபுவை
ஞானியர் காணுவார்.

4. தூய அப்போஸ்தலர்
சந்தோஷமாய்க் காண்பேன்
பொன் வீணை வாசிப்பவர்
இசை பாடக் கேட்பேன்.

5. சீர் ரத்தச் சாக்ஷிகள்
வெள்ளங்கி பூணுவார்
தங்கள் தழும்புகள்
கொண்டு மாண்படைவார்.

6. கேதேர் கூடாரத்தில்
இங்கே வசிக்கிறேன்
நல் மோட்ச பாதையில்
உம்மைப் பின்பற்றுவேன்.

Wednesday, 14 July 2021

Yarai Naan Pugaluven யாரை நான் புகழுவேன்


 

1. யாரை நான் புகழுவேன்
யாரை நான் அறிகிறேன்
என் கதியும் பங்கும் யார்
நான் பாராட்டும்மேன்மை யார்
தெய்வ ஆட்டுக்குட்டிதான்

2. யார் நான் நிற்கும் கன்மலை
யார் என் திட நம்பிக்கை
குற்றத்தைச் சுமந்தோர் யார்
தெய்வ நேசம் தந்தோர் யார்
தெய்வ ஆட்டுக்குட்டிதான்

3. என்தன் பிராண பெலன் யார்
ஆத்துமத்தின் சாரம் யார்
யாரால் பாவி நீதிமான்
யாரால் தெய்வ பிள்ளை நான்
தெய்வ ஆட்டுக்குட்டியால்

4. கஸ்தியில் சகாயர் யார்
சாவின் சாவு ஆனோர் யார்
என்னைத் தூதர் கூட்டத்தில்
சேர்ப்போர் யார் நான் சாகையில்
தெய்வ ஆட்டுக்குட்டிதான்

5. இயேசுதான் என் ஞானமே
அவர் என் சங்கீதமே
நீங்களும் புகழுங்கள்
அவரைப் பின்செல்லுங்கள்
தெய்வ ஆட்டுக்குட்டியை.