Thursday, 22 April 2021
Aachariyame Athisayame ஆச்சரியமே அதிசயமே
Aachariyame Athisayameஆச்சரியமே அதிசயமே ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம் 1. செங்கடல் இரண்டாய் பிரிந்து போக சொந்த ஜனங்களை நடத்தினாரே இஸ்ரவேலின் துதிகளாலே ஈன எரிகோ வீழ்ந்ததுவே 2. ஏழு மடங்கு எரி நெருப்பில் ஏழை தம் தாசருடன் நடந்தார் தானியேலை சிங்கக் கெபியில் தூதன் துணையாய் காத்தனரே 3. பனிமழையை நிறுத்தினாரே பக்தன் எலியா தன் வாக்கினாலே யோசுவாவின் வார்த்தையாலே ஏகும் சூரியன் நின்றதுவே 4. மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும் மாபெலன் தேவனிடம் அடைந்தான் வீழ்த்தினானே கோலியாத்தை வீரன் தாவீது கல் எறிந்தே 5. நம் முற்பிதாக்கள் நம்பின தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரே தம்மை நோக்கி வேண்டும் போது தாங்கி நம்மை ஆதரிப்பார்
Sunday, 18 April 2021
Ungalai Padaithavar உங்களைப் படைத்தவர்
1. உங்களைப் படைத்தவர்
சருவ தயாபரர்
தம்மில் வாழ்ந்து ஜீவிக்க
என்றும் தம்மோடிருக்க
ஆசைப்பட்டோர் உங்களைப்
பார்த்து என் சிநேகத்தை
தள்ளிவிட்டு நிற்பதார்
திரும்புங்கள் என்கிறார்.
2. உங்களை ரட்சித்தவர்
தெய்வ சுதனானவர்
திரு ரத்தம் சிந்தினார்
சிலுவையில் மரித்தார்
நீங்கள் வீணில் சாவதேன்
மரித்துங்களை மீட்டேன்
என்று கூறி நிற்கிறார்
திரும்புங்கள் என்கிறார்.
3. உங்களை நேசிப்பவர்
தூய ஆவியானவர்
நயம் பயம் காட்டினார்
குணப்பட ஏவினார்
தயை பெற வாரீரோ
மீட்பைத் தேடமாட்டீரோ
என்றிரங்கிக் கேட்கிறார்
திரும்புங்கள் என்கிறார்.
Thagam Theerkum jeevanathi தாகம் தீர்க்கும் ஜீவநதி
Thagam Theerkum jeevanathiதாகம் தீர்க்கும் ஜீவநதி தரணியில் உண்டோ எனத் தேடினேன் 1. அருவியின் நீரை பருகி விட்டேன் ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன் துரவுகள் கடலும் தாகம் தீர்க்கவில்லை தூரத்துக் கானலாய் ஆகியதே 2. கானகம் சோலையும் தேடியபின் வானகம் நோக்கியே அபயமிட்டேன் கண்களை மெல்ல நானும் திறந்திட கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன் 3. பருகியே வாழ்த்தினேன் தாகமில்லை அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க கன்மலையாம் என் இயேசு நின்றார் 4. ஐயனின் திருவடி வீழ்ந்தேன் நான் ஆன்மாவின் தாகம் தீர்ந்ததென்றேன் புன்னகை பூத்து புனிதனும் மறைய புது பெலனடைந்தேன் என் உள்ளத்திலே 5. மதகுபோல் ஐந்தில் நீர் சுரக்க மகிழ்வுடன் பருகினேன் தாகமில்லை என் ஆத்ம தாகம் தீர்த்திட்ட கன்மலை என் நேசரேசுவை வாழ்த்துகிறேன்
Friday, 16 April 2021
Annai Anbilum அன்னை அன்பிலும்
Annai Anbilumஅன்னை அன்பிலும் விலை உன் இயேசுவின் தூய அன்பே தன்னை பலியாய்த் தந்தவர் உன்னை விசாரிப்பார் உன் இயேசுவின் தூய அன்பே 1. பாவச் சேற்றினில் வீழ்ந்தோரை பரன் சுமந்து மீட்டாரே தம் நாமத்தை நீ நம்பினால் தளர்ந்திடாதே வா 2. மாய லோகத்தின் வேஷமே மறைந்திடும் பொய் நாசமே மேலான நல் சந்தோஷமே மெய் தேவன் ஈவாரே 3. தேவ ராஜ்ஜிய பாக்கியமே தினம் அதை நீ தேடாயோ உன் தேவனை சந்தித்திட உன் ஆயத்தம் எங்கே 4. ஜீவ புத்தகம் விண்ணிலே தேவன் திறந்து நோக்குவார் உன் பேர் அதில் உண்டோ இன்றே உன்னை நிதானிப்பாய் 5. உந்தன் பாரங்கள் யாவையும் உன்னை விட்டே அகற்றுவார் உன் கர்த்தரால் கூடாதது உண்டோ நீ நம்பி வா
Wednesday, 14 April 2021
Magil Karththavin Manthaiye மகிழ் கர்த்தாவின் மந்தையே
Magil Karththavin Manthaiye1. மகிழ் கர்த்தாவின் மந்தையே மகா கெம்பீரத்துடனே பரத்துக்குன் அதிபதி எழுந்து போனதால் துதி 2. விண்ணோர்க் குழாம் மகிழ்ச்சியாய் கொண்டாடி மா வணக்கமாய் பணிந்த இயேசு ஸ்வாமிக்குப் புகழ் செலுத்துகின்றது 3. ஆ இயேசு தெய்வ மைந்தனே கர்த்தா பார்த்தா முதல்வரே அடியார் நெஞ்சு உமக்கு என்றைக்கும் சொந்தமானது 4. விண்ணோரைப் போல் மண்ணோர்களே நம் ஆண்டவரை என்றுமே அன்பாகக் கூடிப் பாடுங்கள் அவரின் மேன்மை கூறுங்கள்.
Tuesday, 13 April 2021
Sabaiyaare Koodi padi சபையாரே கூடிப் பாடி
Sabaiyaare Koodi padi1. சபையாரே கூடிப் பாடி கர்த்தரை நாம் போற்றுவோம் பூரிப்பாய் மகிழ் கொண்டாடி களிகூரக்கடவோம் இயேசு கிறிஸ்து சாவை வென்று எழுந்தார். 2. சிலுவையில் ஜீவன் விட்டு பின்பு கல்லறையிலே தாழ்மையாக வைக்கப்பட்டு மூன்றாம் நாள் எழுந்தாரே லோக மீட்பர் வெற்றி வேந்தர் ஆனாரே. 3. மீட்பரே நீர் மாட்சியாக ஜீவனோடெழுந்ததால் நாங்கள் நீதிமான்களாகக் கர்த்தர் முன்னே நிற்பதால் என்றென்றைக்கும் உமக்கே மா ஸ்தோத்திரம். 4. சாவின் ஜெயம் ஜெயமல்ல தேகம் மண்ணாய்ப் போயினும் எல்லாம் கீழ்ப்படுத்த வல்ல கர்த்தர் அதை மீளவும் ஜீவன் தந்து மறுரூபமாக்குவார்.
Monday, 12 April 2021
Poorana Valkkaiye பூரண வாழ்க்கையே
Poorana Valkkaiye1. பூரண வாழ்க்கையே தெய்வாசனம் விட்டு தாம் வந்த நோக்கம் யாவுமே இதோ முடிந்தது 2. பிதாவின் சித்தத்தை கோதற முடித்தார் தொல் வேத உரைப்படியே கஸ்தியைச் சகித்தார். 3. அவர் படாத் துக்கம் நரர்க்கு இல்லையே உருகும் அவர் நெஞ்சிலும் நம் துன்பம் பாய்ந்ததே. 4. முள் தைத்த சிரசில் நம் பாவம் சுமந்தார் நாம் தூயோராகத் தம் நெஞ்சில் நம் ஆக்கினை ஏற்றார். 5. எங்களை நேசித்தே எங்களுக்காய் மாண்டீர் ஆ சர்வ பாவப் பலியே எங்கள் சகாயர் நீர். 6. எத்துன்ப நாளுமே மா நியாயத்தீர்ப்பிலும் உம் புண்ணியம் தூய மீட்பரே எங்கள் அடைக்கலம்.
Subscribe to:
Posts (Atom)