Annai Anbilumஅன்னை அன்பிலும் விலை உன் இயேசுவின் தூய அன்பே தன்னை பலியாய்த் தந்தவர் உன்னை விசாரிப்பார் உன் இயேசுவின் தூய அன்பே 1. பாவச் சேற்றினில் வீழ்ந்தோரை பரன் சுமந்து மீட்டாரே தம் நாமத்தை நீ நம்பினால் தளர்ந்திடாதே வா 2. மாய லோகத்தின் வேஷமே மறைந்திடும் பொய் நாசமே மேலான நல் சந்தோஷமே மெய் தேவன் ஈவாரே 3. தேவ ராஜ்ஜிய பாக்கியமே தினம் அதை நீ தேடாயோ உன் தேவனை சந்தித்திட உன் ஆயத்தம் எங்கே 4. ஜீவ புத்தகம் விண்ணிலே தேவன் திறந்து நோக்குவார் உன் பேர் அதில் உண்டோ இன்றே உன்னை நிதானிப்பாய் 5. உந்தன் பாரங்கள் யாவையும் உன்னை விட்டே அகற்றுவார் உன் கர்த்தரால் கூடாதது உண்டோ நீ நம்பி வா
Friday, 16 April 2021
Annai Anbilum அன்னை அன்பிலும்
Annai Anbilumஅன்னை அன்பிலும் விலை உன் இயேசுவின் தூய அன்பே தன்னை பலியாய்த் தந்தவர் உன்னை விசாரிப்பார் உன் இயேசுவின் தூய அன்பே 1. பாவச் சேற்றினில் வீழ்ந்தோரை பரன் சுமந்து மீட்டாரே தம் நாமத்தை நீ நம்பினால் தளர்ந்திடாதே வா 2. மாய லோகத்தின் வேஷமே மறைந்திடும் பொய் நாசமே மேலான நல் சந்தோஷமே மெய் தேவன் ஈவாரே 3. தேவ ராஜ்ஜிய பாக்கியமே தினம் அதை நீ தேடாயோ உன் தேவனை சந்தித்திட உன் ஆயத்தம் எங்கே 4. ஜீவ புத்தகம் விண்ணிலே தேவன் திறந்து நோக்குவார் உன் பேர் அதில் உண்டோ இன்றே உன்னை நிதானிப்பாய் 5. உந்தன் பாரங்கள் யாவையும் உன்னை விட்டே அகற்றுவார் உன் கர்த்தரால் கூடாதது உண்டோ நீ நம்பி வா
Wednesday, 14 April 2021
Magil Karththavin Manthaiye மகிழ் கர்த்தாவின் மந்தையே
Magil Karththavin Manthaiye1. மகிழ் கர்த்தாவின் மந்தையே மகா கெம்பீரத்துடனே பரத்துக்குன் அதிபதி எழுந்து போனதால் துதி 2. விண்ணோர்க் குழாம் மகிழ்ச்சியாய் கொண்டாடி மா வணக்கமாய் பணிந்த இயேசு ஸ்வாமிக்குப் புகழ் செலுத்துகின்றது 3. ஆ இயேசு தெய்வ மைந்தனே கர்த்தா பார்த்தா முதல்வரே அடியார் நெஞ்சு உமக்கு என்றைக்கும் சொந்தமானது 4. விண்ணோரைப் போல் மண்ணோர்களே நம் ஆண்டவரை என்றுமே அன்பாகக் கூடிப் பாடுங்கள் அவரின் மேன்மை கூறுங்கள்.
Tuesday, 13 April 2021
Sabaiyaare Koodi padi சபையாரே கூடிப் பாடி
Sabaiyaare Koodi padi1. சபையாரே கூடிப் பாடி கர்த்தரை நாம் போற்றுவோம் பூரிப்பாய் மகிழ் கொண்டாடி களிகூரக்கடவோம் இயேசு கிறிஸ்து சாவை வென்று எழுந்தார். 2. சிலுவையில் ஜீவன் விட்டு பின்பு கல்லறையிலே தாழ்மையாக வைக்கப்பட்டு மூன்றாம் நாள் எழுந்தாரே லோக மீட்பர் வெற்றி வேந்தர் ஆனாரே. 3. மீட்பரே நீர் மாட்சியாக ஜீவனோடெழுந்ததால் நாங்கள் நீதிமான்களாகக் கர்த்தர் முன்னே நிற்பதால் என்றென்றைக்கும் உமக்கே மா ஸ்தோத்திரம். 4. சாவின் ஜெயம் ஜெயமல்ல தேகம் மண்ணாய்ப் போயினும் எல்லாம் கீழ்ப்படுத்த வல்ல கர்த்தர் அதை மீளவும் ஜீவன் தந்து மறுரூபமாக்குவார்.
Monday, 12 April 2021
Poorana Valkkaiye பூரண வாழ்க்கையே
Poorana Valkkaiye1. பூரண வாழ்க்கையே தெய்வாசனம் விட்டு தாம் வந்த நோக்கம் யாவுமே இதோ முடிந்தது 2. பிதாவின் சித்தத்தை கோதற முடித்தார் தொல் வேத உரைப்படியே கஸ்தியைச் சகித்தார். 3. அவர் படாத் துக்கம் நரர்க்கு இல்லையே உருகும் அவர் நெஞ்சிலும் நம் துன்பம் பாய்ந்ததே. 4. முள் தைத்த சிரசில் நம் பாவம் சுமந்தார் நாம் தூயோராகத் தம் நெஞ்சில் நம் ஆக்கினை ஏற்றார். 5. எங்களை நேசித்தே எங்களுக்காய் மாண்டீர் ஆ சர்வ பாவப் பலியே எங்கள் சகாயர் நீர். 6. எத்துன்ப நாளுமே மா நியாயத்தீர்ப்பிலும் உம் புண்ணியம் தூய மீட்பரே எங்கள் அடைக்கலம்.
Friday, 9 April 2021
Jeevanin Ootramae ஜீவனின் ஊற்றாமே
Jeevanin Ootramae1. ஜீவனின் ஊற்றாமே இயேசுபரன் தீர்த்திடுவார் உந்தன் தாகமதை பாவங்கள் ரோகங்கள் சாபங்கள் போக்கிட பரிவாய் அழைக்கிறார் வல்லவரே இயேசு நல்லவரே மிக அன்பு மிகுந்தவரே இயேசு வல்லவரே அவர் நல்லவரே உனக்காகவே ஜீவிக்கிறார் 2. ஆரு மற்றவனாய் நீ அலைந்தே பாவ உளைதனிலே அமிழ்ந்தே மாழ்ந்திடாது உன்னை தூக்கி எடுத்தவர் மந்தையில் சேர்த்திடுவார் - வல்லவரே 3. வியாதியினால் நொந்து வாடுவதேனோ நேயன் கிறிஸ்து சுமந்ததனை சிலுவை மீதினில் தீர்த்ததாலே - இனி சுகமடைந்திடுவாய் - வல்லவரே 4. பரனின் அன்பதை அகமதிலே சொரிந்து தன் திரு ஆலயமாய் மாற்றியே தம்மைப்போல் தேவசாயலாக்கி மகிமை சேர்த்திடுவார் - வல்லவரே 5. வானமும் பூமியும் மாறிப்போயினும் வாக்கு மாறாதவர் வல்ல மீட்பர் காப்பார் வழுவாது உள்ளங்கையில் வைத்தே கலங்கிடாதே நீ வா – வல்லவரே
Wednesday, 7 April 2021
Aruvigal Aayiramaai அருவிகள் ஆயிரமாய்
Aruvigal Aayiramaai1. அருவிகள் ஆயிரமாய் பாய்ந்து இலங்கிடச் செய்வார் அனைத்தும் ஆள்வோர் தாகமாய் இருக்கிறேன் என்றார் 2. வெம்போரில் சாவோர் வேதனை வியாதியஸ்தர் காய்ச்சலும் குருசில் கூறும் இவ்வொரே ஓலத்தில் அடங்கும் 3. அகோரமான நோவிலும் மானிடர் ஆத்துமாக்களை வாஞ்சிக்கும் தாகம்முக்கியம் என் ஆன்மாவும் ஒன்றே 4. அந்நா வறட்சி தாகமும் என்னால் உற்றீர் பேர் அன்பரே என் ஆன்மா உம்மை முற்றிலும் வாஞ்சிக்கச் செய்யுமே
Tuesday, 6 April 2021
Karthar Anbe Thooya Anbe கர்த்தர் அன்பே தூய அன்பே
Karthar Anbe Thooya Anbe கர்த்தர் அன்பே தூய அன்பே பக்தர்கள் போற்றும் அன்பே - என் இயேசுவின் அன்பு மா பெரிதே எப்படி பாடுவேனோ 1. ஆண்டவர் அன்பின் ஆழம் நீளம் அன்பின் அகலம் உயரம் கண்டேன் இயேசு பக்தருடன் சேர்ந்துணர்ந்தேன் இன்றதைப் பாடிடுவேன் - என் - கர்த்தர் 2. இந்த உலகத் தோற்றம் முன்னே அந்த மேலான அன்பினிலே மாசற்றோராக நிறுத்த எம்மை மாதேவன் தெரிந்து கொண்டார் - தம்முன் - கர்த்தர் 3. என் முழு ஆத்துமா மனதுடனே என் முழு சக்தி பெலத்துடனே தேவனிடம் அன்பு கூர்ந்திடவே தேடியே நாடிடுவேன் - என் - கர்த்தர் 4. குற்றமில்லாத அன்புடனே மற்றவரை நான் நேசிக்கவே கற்பனையில் பிரதானம் ஒன்றே கைக் கொண்டு வாழ்ந்திடுவேன் - அவர் - கர்த்தர் 5. சத்துருவான மித்திரனை சோதரன் தோழனாய் நேசித்தீரே பாதம் பணிந்தும்மை வேண்டுகின்றேன் பூரண அன்பருள்வீர் - திருப் - கர்த்தர் 6. ஜீவனைத் தந்த அன்பதுவே தேவனின் சேவை செய்திடவே கர்த்தர் வருகையை கண்டிடவே காத்திருந்தே அடைவேன்- என் - கர்த்தர் 7. ஆவியின் வரங்கள் ஒன்பதுவே ஆவியின் நற்கனி ஈந்திடுமே தேவ அருள் வரம் தேவை அதே தாகத்தைத் தீர்த்திடுமே - என்றும் - கர்த்தர்
Subscribe to:
Posts (Atom)