Sunday, 24 May 2020

Munnorin Deivamam முன்னோரின் தெய்வமாம்



Munnorin Deivamam 1. முன்னோரின் தெய்வமாம் உன்னத ராஜராம் அநாதியானோர் அன்பராம் மா யெகோவா சர்வ சிருஷ்டியும் உம் பேர் நாமம் சாற்றும் பணிந்து போற்றுவோம் என்றும் உம் நாமமே 2. உன்னத பரனை தூய தூதர் சேனை நீர் தூயர் தூயர் தூயரே என்றிசைப்பார் நேற்றும் இன்றும் என்றும் இருக்கும் கர்த்தரும் மா யெகோவா நம் பிதாவும் துதி ஏற்பார் 3. மீட்புற்ற கூட்டமே மா நாதர் போற்றுமே பிதா சுதன் சுத்தாவிக்கே துதி என்றும் முன்னோர்க்கும் நமக்கும் தெய்வம் ஆனோர்க்கென்றும் வல்லமை மகத்துவமும் உண்டாகவும்

Saturday, 23 May 2020

Uyirthelunthare Alleluya உயிர்தெழுந்தாரே அல்லேலூயா



Uyirthelunthare Alleluya உயிர்தெழுந்தாரே அல்லேலூயா ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென் சொந்தமானாரே 1. கல்லறை திறந்திடவே கடும் சேவகர் பயந்திடவே வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே வல்ல பிதாவின் செயலிதுவே 2. மரித்தவர் மத்தியிலே ஜீவ தேவனைத் தேடுவாரோ நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே நித்திய நம்பிக்கை பெருகிடுதே 3. எம்மா ஊர் சீஷர்களின் எல்லா மன இருள் நீக்கினாரே எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே எல்லையில்லாப் பரமானந்தமே 4. மரணமுன் கூர் எங்கே பாதாளமுன் ஜெயமெங்கே சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார் சபையோரே துதி சாற்றிடுவோம் 5. ஆவியால் இன்றும் என்றும் ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவே ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 6. பரிசுத்தமாகுதலை பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம் எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக எழும்புவோமே மகிமையிலே

Friday, 22 May 2020

Boologathaare Yavarum பூலோகத்தாரே யாவரும்



Boologathaare Yavarum 1. பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்; ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள். 2. பராபரன் மெய்த் தெய்வமே நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்; நாம் ஜனம், அவர் ராஜனே நாம் மந்தை, அவர் மேய்ப்பனார். 3. கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்; சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி, துதிசெய்யுங்கள். 4. கர்த்தர் தயாளர், இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே; அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே. 5. பின் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்.

Thursday, 21 May 2020

Devanbai Kaankirom Aananthamae தேவன்பைக் காண்கிறோம் ஆனந்தமே

 Devanbai Kaankirom Aananthamae

1. தேவன்பைக் காண்கிறோம் ஆனந்தமே அவர்தாம் கொடுத்த வேதத்திலே வேதத்தின் மாட்சிமை யாவிலுமே இயேசுவின் அன்புதான் பேரின்பமே ஆனந்தம் இயேசு அன்பு வைத்தார் என் மேலுமே அன்பு வைத்தார் ஆனந்தம் இயேசு அன்பு வைத்தார் என் மேலுமே வைத்தார் 2. அவ்வன்பை மறந்து திரிந்தாலும் எங்குமே அதென்னை தொடர்ந்திடும் மீட்பரின் பாசத்தை நினைக்கவே ஓடுவேன் அன்பரின் கரத்துக்கே 3. மகாராஜன் மகிமை காட்சி காண்பேன் நித்தியம் அவர் மேல் பாடிடுவேன் ஒப்பில்லா ஓரின்ப கீதத்தையே ஆனந்தம் என் நாதர் அன்பு என்றே 4. மீட்பரை அன்பு தான் கொண்டு வந்தே மாளவும் செய்ததே குருசிலே என்னையும் நேசித்தார் நிச்சசயமே இவ்வன்பர் நேசிப்பேன் எந்நாளுமே 5. தேறுதல் அடைந்தேன் நிச்சயத்தால் பாக்கியம் பெறுவேன் நம்பிக்கையால் சாத்தானும் ஓடினான் என்னை விட்டே இயேசுவின் அன்பை நான் கூறவுமே

Wednesday, 20 May 2020

Sathiya Vedham Baktharin Geetham சத்திய வேதம் பக்தரின் கீதம்

Sathiya Vedham Baktharin Geetham சத்திய வேதம் பக்தரின் கீதம் சுத்தர்கள் போகும் பாதையின் தீபம் உத்தம மார்க்கம் காட்டும் எத்தனை துன்பம் துயரம் வந்தும் பக்தனை தேற்றிடும் ஒளஷதம் 1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம் சுத்த பசும்பொன் தெளிந்திடும் தேன் இதயம் மகிழும் கண்கள் தெளியும் இருண்ட ஆத்துமா உயிரடையும் 2. பேதைகளிடம் ஞானம் அருளும் வேத புத்தகம் மேன்மை தரும் இரவும் பகலும் இதன் தியானம் இனிமை தங்கும் தனிமையிலும் 3. வேதப் பிரியர் தேவப் புதல்வர் சேதமடையா நடத்திடுவார் இலைகள் உதிரா மரங்கள் போல இவர்கள் நல்ல கனி தருவார் 4. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும் கள்ளங் கபடெல்லாம் அகற்றும் கடிந்து கொள்ளும் கறைகள் போக்கும் கனமடைய வழி நடத்தும் 5. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி கன்மலையையும் நொறுக்கிடுமே இதய நினைவை வகையாய் அறுக்கும் இரு புறமும் கருக்குள்ளதே 6. வானம் அகலும் பூமி அழியும் வேத வசனம் நிலைத்திருக்கும் பரமன் வேதம் எனது செல்வம் பரவசம் நிதம் அருளும்

Tuesday, 19 May 2020

Alangara Vaasalale அலங்கார வாசலாலே

Alangara Vaasalale 1. அலங்கார வாசலாலே கோவிலுக்குள் போகிறேன் தெய்வ வீட்டின் நன்மையாலே ஆத்துமத்தில் பூரிப்பேன் இங்கே தெய்வ சமூகம் மெய் வெளிச்சம், பாக்கியம். 2. கர்த்தரே, உம்மண்டை வந்த என்னண்டைக்கு வாருமேன் நீர் இறங்கும் போதனந்த இன்பத்தால் மகிழுவேன். என்னுட இதயமும் தெய்வ ஸ்தலமாகவும். 3. பயத்தில் உம்மண்டை சேர என் ஜெபம் புகழ்ச்சியும் நல்ல பலியாக ஏற உமதாவியைக் கொடும். தேகம் ஆவி யாவையும் சுத்தமாக்கியருளும். 4. நல்ல நிலத்தில் விழுந்த விதை பயிராகுமே நானும் அவ்வாறே மிகுந்த கனிகளைத் தரவே வசனத்தைக் காக்க நீர் ஈவளிக்கக் கடவீர். 5. விசுவாசத்தை விடாமல் அதில் பலப்படவும் ஒருக்காலும் தவறாமல் உம்மை நான் பின்செல்லவும், மெய்வெளிச்சத்தை நீரே என்னில் வீசும் கர்த்தரே. 6. சொல்லும், கர்த்தரே, நான் கேட்பேன் நீர் இப்பாழ் நிலத்திலே பெய்யப்பண்ணும் மன்னா சேர்ப்பேன் நல் தியானத்துடனே தாரும் ஜீவ பானத்தை தீரும் பசிதாகத்தை.

Sunday, 17 May 2020

Evvannamaaga Karthae எவ்வண்ணமாக கர்த்தரே

Evvannamaaga Karthae 1. எவ்வண்ணமாக கர்த்தரே உம்மை வணங்குவேன் தெய்வீக ஈவைப் பெறவே ஈடென்ன தருவேன் 2. அநேக காணிக்கைகளால் உம் கோபம் மாறுமோ நான் புண்ணிய கிரியை செய்வதால் கடாட்சம் வைப்பீரோ 3. பலியின் ரத்தம் வெள்ளமாய் பாய்ந்தாலும் பாவத்தை நிவிர்த்தி செய்து சுத்தமாய் ரட்சிக்க மாட்டாதே 4. நான் குற்றவாளி ஆகையால் என் பேரில் கோபமே நிலைத்திருந்து சாபத்தால் அழிதல் நியாயமே 5. ஆனால் என் பாவம் சுமந்து ரட்சகர் மரித்தார் சாபத்தால் தலை குனிந்து தம் ஆவியை விட்டார் 6. இப்போதும் பரலோகத்தில் வேண்டுதல் செய்கிறார் உம் திவ்விய சந்நிதானத்தில் என்னை நினைக்கிறார் 7. இவ்வண்ணமாக கர்த்தரே உம்மை வணங்குவேன் என் நீதி இயேசுகிறிஸ்துவே அவரைப் பற்றினேன்.