Saturday, 9 May 2020

Aandava Prasannamagi ஆண்டவா பிரசன்னமாகி

Aandava Prasannamagi 1. ஆண்டவா பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும் ஆசை காட்டும் தாசர் மீதில் ஆசிர்வாதம் ஊற்றிடும் அருள்மாரி எங்கள் பேரில் வருஷிக்கப் பண்ணுவீர் ஆசையோடு நிற்கிறோமே ஆசீர்வாதம் ஊற்றுவீர் 2. தேவரீரின் பாதத்தண்டை ஆவலோடு கூடினோம் உந்தன் திவ்ய அபிஷேகம் நம்பி நாடி அண்டினோம் 3. ஆண்டவா மெய்பக்தர் செய்யும் வேண்டுகோளைக் கேட்கிறீர் அன்பின் ஜ்வாலை எங்கள் நெஞ்சில் இன்று மூட்டி நிற்கிறீர் 4. தாசர் தேடும் அபிஷேகம் இயேசுவே கடாட்சியும் பெந்தே கோஸ்தின் திவ்ய ஈவை தந்து ஆசிர்வதியும்

Alleluya Devanuke அல்லேலூயா தேவனுக்கே

Alleluya Devanuke 1. அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா ராஜனுக்கே தேவாதி தேவன் ராஜாதி ராஜன் என்றென்றும் நடத்திடுவார் ஆராதனை ஆராதனை (2) அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை உமக்கே 2. வெண்மேகமே வெண்மேகமே வெளிச்சம் தாரும் இந்நேரமே கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி கனிவோடு நடத்திடுவார் 3. துணையாளரே துணையாளரே துன்பத்தில் தாங்கும் மணவாளரே அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி ஆற்றலைத் தந்திடுவார்

Friday, 8 May 2020

Aarathanai Nayagan Neere ஆராதனை நாயகர் நீரே

Aarathanai Nayagan Neere ஆராதனை நாயகர் நீரே ஆராதனை வேந்தனும் நீரே ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன் 1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர் ஆண்டவர் இயேசு நீரே விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே என்றென்றும் தொழுதிடுவேன் 2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம் மகிமையின் தேவன் நீரே முழங்கால் யாவும் முடங்கிடவே மகிழ்வுடன் துதித்திடுவேன் 3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள திரும்பவும் வருவேன் என்றீர் ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே அனுதினம் வணங்கிடுவேன்

Thursday, 7 May 2020

Irangumae En Yesuvae இரங்குமே என் இயேசுவே

Irangumae En Yesuvae இரங்குமே என் இயேசுவே இரக்கத்தின் ஐசுவரியமே கூவி கதறியே ராவும் பகலுமே கெஞ்சும் ஜெபம் கேளுமே 1. உற்றார் பெற்றோரும் குடும்பங்களும் மற்றும் பலர் மாள்வதைக் கண்டு சகித்திடா தென்றும் ஜெபித்திடும் கண்ணீர் ஜெபங் கேளுமே 2. ஐந்து கண்டத்தின் ஜனத்திற்காக ஐங்காயங்கள் ஏற்றீரே தேவன் இல்லை என்று கூறி மடிவோரைத் தேடும் ஜெபங்கேளுமே 3. தாரும் உயிர் மீட்சி சபைதனில் சோரும் உள்ளம் மீளவே கர்த்தாவே உம் ஜனம் செத்த நிலை மாற பக்தர் ஜெபங் கேளுமே

Wednesday, 6 May 2020

Naan Thoothanaga Vendum நான் தூதனாக வேண்டும்

Naan Thoothanaga Vendum 1. நான் தூதனாக வேண்டும் விண் தூதரோடேயும் பொற் கிரீடம் தலை மேலும் நல் வீணை கையிலும் நான் வைத்துப் பேரானந்தம் அடைந்து வாழுவேன் என் மீட்பரின் சமூகம் நான் கண்டு களிப்பேன். 2. அப்போது சோர்வதில்லை கண்ணீரும் சொரியேன் நோய், துக்கம், பாவம், தொல்லை பயமும் அறியேன் மாசற்ற சுத்தத்தோடும் விண் வீட்டில் தங்குவேன் துதிக்கும் தூதரோடும் நான் என்றும் பாடுவேன். 3. பிரகாசமுள்ள தூதர் நான் சாகும் நேரத்தில் என்னைச் சுமந்து போவார் என் இயேசுவண்டையில் நான் பாவியாயிருந்தும் என் மீட்பர் மன்னித்தார் எண்ணில்லாச் சிறியோரும் என்னோடு வாழுவார். 4. மேலான தூதரோடும் நான் தூதன் ஆகுவேன் பொற் கிரீடம் தலைமேலும் தரித்து வாழுவேன் என் மீட்பர்முன் ஆனந்தம் நான் பெற்று வாழ்வதே வாக்குக் கெட்டாத இன்பம் அனந்த பாக்கியமே.

Unnatha Salame உன்னத சாலேமே




Unnatha Salame 1. உன்னத சாலேமே என் கீதம், நகரம் நான் சாகும் நேரமே மேலான ஆனந்தம் விண் ஸ்தானமே கர்த்தா எந்நாள் உம் திருத் தாள் சேவிப்பேனே 2. பூவில் தகாரென்றே தீர்ப்புற்ற நாதனார் தம் தூதரால் அங்கே சீர் வாழ்த்தல் பெறுவார் 3. அங்கே பிரயாணத்தை பிதாக்கள் முடிப்பார் வாஞ்சித்த பிரபுவை ஞானியர் காணுவார் 4. தூய அப்போஸ்தலர் சந்தோஷமாய்க் காண்பேன் பொன் வீணை வாசிப்பர் இசை பாடக் கேட்பேன் 5. சீர் ரத்தச் சாக்ஷிகள் வெள்ளங்கி பூணுவார் தங்கள் தழும்புகள் கொண்டு மாண்படைவார் 6. கேதேர் கூடாரத்தில் இங்கே வசிக்கிறேன் நல் மோட்ச பாதையில் உம்மைப் பின்பற்றுவேன்

Tuesday, 5 May 2020

Pani Pola Peyum பனி போல பெய்யும்

Pani Pola Peyum பனி போல பெய்யும் பரிசுத்தரே மழையாக பொழியும் ஆவியே ஆவியே ஆவியே மழையாக பொழியும் ஆவியே -பனி 1. மென்மையானவரே மேகஸ்தம்பமே ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி (2) ஆனந்த தைலமே (2) – பனி 2. யுத்தங்கள் செய்பவரே யோர்தானை பிளந்தவரே பெருமழையாய் பிரவேசித்த (2) உள்ளங்கை மேகமே (2) – பனி 3. வறண்ட நிலங்களிலே வாய்க்கால்கள் அமைப்பவரே கனிதரும் மரமாக (2) காப்பாற்றி வளர்ப்பவரே (2) – பனி 4. ஆவியானவரே ஆற்றல் தருபவரே தேற்றரவே துணையாளரே (2) விண்ணகத் தூபமே (2) – பனி 5. அக்கினியானவரே அன்பின் ஜுவாலையே ஆசீர்வதியும் அரவணையும் (2) ஆன்மீகத் தீபமே (2) – பனி