Monday, 4 May 2020

Thevan Thantha Valvallavaa தேவன் தந்த வாழ்வல்லவா

Thevan Thantha Valvallavaa தேவன் தந்த வாழ்வல்லவா அதை வேதனை என்று சொல்லலாமா தேவன் தந்த வாழ்வல்லவா அதை சோதனை என்று பேசலாமா சொல்லலாமா நீங்க சொல்லலாமா பேசலாமா நீங்க பேசலாமா --- தேவன் 1. தேவன் தந்த மனைவியல்லவா அவளை அடிமையாக நடத்தலாமா உன்னை நம்பி வந்த மான் அல்லவா அவளை கசந்து கசந்து திட்டலாமா நடத்தலாமா அப்படி ( நீங்க) நடத்தலாமா திட்டலாமா கசந்து திட்டலாமா --- தேவன் 2. தேவன் தந்த கணவரல்லவா அவரை எதிரியாக நினைக்கலாமா பாசம் நிறைந்த புருஷனல்லவா அவரை எதிர்த்து எதிர்த்து பேசலாமா நினைக்கலாமா அப்படி நினைக்கலாமா பேசலாமா எதிர்த்து பேசலாமா--- தேவன் 3. தேவன் தந்த பிள்ளையல்லவா அவனை நாயைப் போல விரட்டலாமா வாரிசாக வந்த செல்வமல்லவா அவனை பாசமின்றி பார்க்கலாமா விரட்டலாமா பிள்ளையை விரட்டலாமா பார்க்கலாமா இப்படி பார்க்கலாமா --- தேவன் 4. தேவன் தந்த தாய் அல்லவா அவரை தனியே ஒதுக்கி தள்ளலாமா கனத்துக்குரிய தந்தையல்லவா அவரை அற்பமாக எண்ணலாமா தள்ளலாமா ஒதுக்கி தள்ளலாமா எண்ணலாமா அற்பமாய் எண்ணலாமா --- தேவன் 5. தேவன் தந்த அத்தையல்லவா அவளை இடைஞ்சல் என்று வெறுக்கலாமா ஆதரவான மருமகள் அல்லவா அவளை குற்றப்படுத்தி தூற்றலாமா வெறுக்கலாமா அத்தையை (மாமியாரை) வெறுக்கலாமா தூற்றலாமா அவளை (மகளை) தூற்றலாமா --- தேவன்

Palare Or Nesar பாலரே ஓர் நேசர்

Palare Or Nesar Undu 1. பாலரே, ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும் இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும் 2. பாலரே, ஓர் வீடு உண்டு விண் மோட்ச வீட்டிலே பேர் வாழ்வுண்டாக இயேசு அங்கரசாள்வாரே ஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ அங்குள்ளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சிதானுண்டோ 3. பாலரே, ஓர் கிரீடம் உண்டு விண் மோட்ச வீட்டிலே நல் மீட்பரின் பேரன்பால் பொற்கிரீடம் அணிவீர் இப்போது மீட்பைப் பெற்று மா நேசர் பின்சென்றார் இவ்வாடா ஜீவ கிரீடம் அப்போது சூடுவார் 4. பாலரே, ஓர் கீதம் உண்டு விண் மோட்ச வீட்டிலே மா ஜெய கீதம் பாட ஓர் வீணையும் உண்டே அந்நாட்டின் இன்பம் எல்லாம் நம் மீட்பர்க்குரிமை நீர் அவரிடம் வாரும் ஈவார் அவ்வின்பத்தை

Saturday, 2 May 2020

Yaarilum Melaana Anbar யாரிலும் மேலான அன்பர்

Yaarilum Melaana Anbar 1. யாரிலும் மேலான அன்பர் மா நேசரே தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர் மா நேசரே மற்ற நேசர் விட்டுப்போவார் நேசித்தாலும் கோபம் கொள்வார் இயேசுவோ என்றென்றும் விடார் மா நேசரே 2. என்னைத் தேடிச் சுத்தஞ் செய்தார் மா நேசரே பற்றிக் கொண்ட என்னை விடார் மா நேசரே இன்றும் என்றும் பாதுகாப்பார் பற்றினோரை மீட்டுக் கொள்வார் துன்ப நாளில் தேற்றல் செய்வார் மா நேசரே 3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு மா நேசரை என்றுமே விடாமல் எண்ணு மா நேசரை எந்தத் துன்பம் வந்தும், நில்லு நேரே மோட்ச பாதை செல்லு இயேசுவாலே யாவும் வெல்லு மா நேசரே 4. என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம் மா நேசரே சோர்வுற்றாலும் வீரங் கொள்வோம் மா நேசரே கொண்ட நோக்கம் சித்தி செய்வார் நம்மை அவர் சேர்த்துக் கொள்வார் மோட்ச நன்மை யாவும் ஈவார் மா நேசரே

Friday, 1 May 2020

Entrum Karthavudan என்றும் கர்த்தாவுடன்

Entrum Karthavudan 1. என்றும் கர்த்தாவுடன் நான் கூடி வாழுவேன் இவ்வாக்கினால் சாகா வரன் செத்தாலும் ஜீவிப்பேன் பற்றாசையால் உம்மை விட்டே நான் அலைந்தேன் நாடோறும் வழி நடந்தே விண் வீட்டைக் கிட்டுவேன் 2. அதோ சமீபமே பிதாவின் வீடு தான் என் ஞானக் கண்கள் காணுமே மின்னும் பொன்னகர் வான் தூயோர் சுதந்தரம் நான் நேசிக்கும் நாடே என் ஆவி மேலெருசலேம் சேரத் தவிக்குமே 3. கர்த்தாவுடன் என்றும் பிதாவே, இங்கும் நீர் இவ்வாக்கை நிறைவேற்றவும் சித்தம் கொண்டருள்வீர் என் பக்கம் தங்கிடின் தப்பாமலே நிற்பேன் கைதூக்கி என்னைத் தாங்கிடின் போராடி வெல்லுவேன் 4. என் ஜீவன் போகும் நாள் கிழியும் இத்திரை சாவை அழிப்பேன் சாவினால் சாகா உயிர் பெற்றே என் நாதரைக் காண்பேன் நின்று களிப்புடன் சிம்மாசனத்தின் முன் சொல்வேன் என்றும் கர்த்தாவுடன்

Deva Prasannam Tharume தேவா பிரசன்னம் தாருமே

Deva Prasannam Tharume தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்விய நாமத்திலே இன்பமுடன் கூடி வந்தோமே 1. வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து குனிந்து தொழுகிறோம் கனிந்தெம்மைக் கண்பாருமே --- தேவா 2. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம் --- தேவா 3. கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம் --- தேவா 4. கர்த்தர் சமூகம் ஆனந்தமே பக்தர் சபையில் பேரின்பமே கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம் சுத்தர்கள் போற்றும் தேவனே --- தேவா 5. நூற்றிருபது பேர் நடுவே தேற்றரவாளனே வந்தீரே உன்னத ஆவியை ஊற்றிடுமே மன்னவனே இந்நேரமே --- தேவா 6. எப்போ வருவீர் என் இயேசுவே ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே பறந்து விரைந்து தீவிரமே இறங்கி வாரும் இயேசுவே --- தேவா

Wednesday, 29 April 2020

Vallamai Thevai Deva வல்லமை தேவை தேவா

Vallamai Thevai Deva வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா இன்றே தேவை தேவா இப்போ தாரும் தேவா பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை 1. மாம்சமான யாவர் மீதும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் மூப்பர் வாலிபர் யாவரும் தீர்க்க தரிசனம் சொல்வாரே 2. பெந்தெகொஸ்தே நாளைப் போல பெரிதான முழக்கத்தோடே வல்லமையாக இறங்கி வரங்களினாலே நிரப்பும் 3. மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக ஆவியைத் தாரும் பிதாவே என்று அழைக்க புத்திர சுவிகாரம் ஈந்திடும்

Saturday, 25 April 2020

Varuthapattu Paaram Sumapavare வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே

Varuthapattu Paaram Sumapavare வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே வருவீர் இயேசுவண்டை இளைப்பாற 1. தாகமுள்ளவரே வாரும் என்றார் தாகத்தோடு வரும் சமாரியாளைக் கண்டார் தண்ணீர் கேட்டார் அவர் தாகம் தீர்த்தார் பாவ மன்னிப்பை கொடுத்து மகிழச் செய்தார் 2. பெரும்பாடுள்ள ஓர் ஸ்திரீ இருந்தாள் கடும் நோய் நீங்க பலரிடம் சென்றாள் நம்பிக்கை இழந்தாள் நாதன் இயேசுவைக் கண்டாள் நடுங்கி வஸ்திரம் தொட்டு சுகமடைந்தாள் 3. நாலு நாளாயிற்றே நாறுமென்றாள் நம்பிக்கை விடாதே அவன் பிழைப்பான் என்றார் கவலைப்பட்டார் இயேசு கண்ணீர் விட்டார் மரித்தவன் உயிர்த்தே வரச் சொன்னார் 4. நாடு நகரமெல்லாம் சுற்றி அலைந்தார் நானே வழி வேறில்லை என பகர்ந்தார் களைப்படைந்தார் அத்தி மரத்தைக் கண்டார் கனியற்றிருப்பதை கண்டு சபித்தார்