Varuthapattu Paaram Sumapavare
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே
வருவீர் இயேசுவண்டை இளைப்பாற
1. தாகமுள்ளவரே வாரும் என்றார்
தாகத்தோடு வரும் சமாரியாளைக் கண்டார்
தண்ணீர் கேட்டார் அவர் தாகம் தீர்த்தார்
பாவ மன்னிப்பை கொடுத்து மகிழச் செய்தார்
2. பெரும்பாடுள்ள ஓர் ஸ்திரீ இருந்தாள்
கடும் நோய் நீங்க பலரிடம் சென்றாள்
நம்பிக்கை இழந்தாள் நாதன் இயேசுவைக் கண்டாள்
நடுங்கி வஸ்திரம் தொட்டு சுகமடைந்தாள்
3. நாலு நாளாயிற்றே நாறுமென்றாள்
நம்பிக்கை விடாதே அவன் பிழைப்பான் என்றார்
கவலைப்பட்டார் இயேசு கண்ணீர் விட்டார்
மரித்தவன் உயிர்த்தே வரச் சொன்னார்
4. நாடு நகரமெல்லாம் சுற்றி அலைந்தார்
நானே வழி வேறில்லை என பகர்ந்தார்
களைப்படைந்தார் அத்தி மரத்தைக் கண்டார்
கனியற்றிருப்பதை கண்டு சபித்தார்
Kalai Velaiyile Nam Nathanai
காலை வேளையிலே நம் நாதனை போற்றிடுவோம் (2)
துதி மாலையுடன் புகழ் பாடியே (2)
அவர் பாதம் வீழ்ந்து பணிவோம் மகிழ்வோம்
1. காலை தோறும் புது கிருபையினால்
நிறைத்திடும் தேவனை வாழ்த்திடுவோம்
குறைகள் யாவும் குருசினில் ஏற்ற (2)
திருமைந்தன் இயேசுவை வணங்கிடுவோம் (2)
சரணம் சரணம் சரணம் (2) --- காலை வேளையிலே
2. பாவத்தை உணர்த்தும் தினம் வழி நடத்தும்
ஆவியாம் தேவனை துதித்திடுவோம்
மூன்றில் ஒன்றாய் அருள் ஒளி சுடராய் (2)
திகழ்ந்திடும் திரியேகரை நமஸ்கரிப்போம் (2)
சரணம் சரணம் சரணம் (2) --- காலை வேளையிலே
Athikalai Neram Aandavar Samoogam
அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்
அமைதலாய் காத்திருப்பேன்
என் இயலாமை மௌனம் அறிவிக்க
அவரைப் போலாவேன்
1. வடதிசை வாழும் என் குடும்பம்
என் நினைவில் என்றும் கலந்துவிடும்
தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட
வல்லமை தேவன் வெளிப்படுவார் (2)
2. இலட்சியத்தோடு அர்த்தமுள்ள
பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர்
அனைவரின் உள்ளமும் சங்கமமாகும்
ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார் (2)
3. தனக்கென வாழ நினைவிலும் மறந்து
மற்றவர் மீது நாட்டம் கொண்டால்
சுவிசேஷம் தானாய்ச் சிதறியே வேகம்
சமுகத்தை சீக்கிரம் வசப்படுத்தும் (2)