Saturday, 18 January 2020

Karthavin Janame Kaithalamudane கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

Karthavin Janame Kaithalamudane கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் பாடி ஆடு அல்லேலூயா அல்லேலூயா (2) சரணங்கள் 1. பாவத்தின் சுமையகற்றி — கொடும் பாதாள வழி விலக்கி பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) — கர்த்தாவின் 2. நீதியின் பாதையிலே — அவர் நிதம் நம்மை நடத்துகின்றார் எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) — கர்த்தாவின் 3. மறுமையின் வாழ்வினிலே — இயேசு மன்னவன் பாதத்திலே பசிதாகமின்றி துதி கானம் பாடி பரனோடு நிதம் வாழுவோம் அல்லேலூயா (2) — கர்த்தாவின்

Friday, 17 January 2020

Thuthikintrom Thuthi Padal Padi துதிக்கின்றோம் துதி பாடல் பாடி

Thuthikintrom Thuthi Padal Padi துதிக்கின்றோம் துதி பாடல் பாடி தூயாதி தூயவரை கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே எந்நாளும் துதி துதியே 1. கோட்டையும் குப்பை மேடாகுமே துதிக்கின்ற வேளையிலே எரிகோ போன்ற சூழ்நிலையும் (2) மாறிடும் துதிக்கும்போது 2. சேனைகள் சிதறியே ஓடிடுமே துதிக்கின்ற வேளையிலே யோசபாத்தின் சூழ்நிலையும் (2) மாறிடும் துதிக்கும் போது 3. சிறைச்சாலை கதவுகள் திறந்திடுமே துதிக்கின்ற வேளையிலே கடுமையான சூழ்நிலையும் (2) மாறிடும் துதிக்கும்போது

Thursday, 16 January 2020

Yesu Enaku Jeevan இயேசு எனக்கு ஜீவன்

Yesu Enaku Jeevan இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே (2) துதி பாடல் நான் பாடி இயேசுவையே போற்றி என்றென்றும் வாழ்த்திடுவேன்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (4) சமாதானம் தந்தார் இயேசு (4) --- துதி புது வாழ்வு தந்தார் இயேசு (4) --- துதி விடுதலை தந்தார் இயேசு (4) --- துதி வல்லமை தந்தார் இயேசு (4) --- துதி அபிஷேகம் தந்தார் இயேசு (4) --- துதி

Thuthi Thuthi Yesuvai துதி துதி இயேசுவை

Thuthi Thuthi Yesuvai துதி துதி இயேசுவை துதி துதி துதிகளின் தேவனை துதி துதி (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் சேனைகளின் கர்த்தர் வல்ல மீட்பர் சேனைகளின் கர்த்தர் மகாராஜா அந்த ராஜாவுக்கு பிள்ளை நீ துதி துதி 1. பாவங்களை மன்னித்தாரே துதி துதி சாபங்களை தள்ளினாரே துதி துதி ரோகங்களை தீர்த்தவரை துதி துதி இனிய ராகங்களை தந்தார் பாடி துதி துதி --- சேனைகளின் 2. சோதனையில் தாங்கினாரே துதி துதி வேதனையில் தேற்றினாரே துதி துதி வியாதியிலே வைத்தியராம் துதி துதி உந்தன் வியாகுலத்தில் தேற்றுவாரே துதி துதி --- சேனைகளின் 3. காலை மாலை எப்பொழுதும் துதி துதி எந்த காலத்திலும் நேரத்திலும் துதி துதி ஜீவனை கொடுத்தவரை துதி துதி என்றும் ஜீவனோடிருப்பவரை துதி துதி --- சேனைகளின்

Wednesday, 15 January 2020

En Yesu Rajavukae என் இயேசு ராஜாவுக்கே

En Yesu Rajavukae என் இயேசு ராஜாவுக்கே எந்நாளும் ஸ்தோத்திரம் என்னோடு வாழ்பவர்க்கே எந்நாளும் ஸ்தோத்திரம் 1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை நித்தமும் நினைக்கிறேன் முழு உள்ளத்தோடு உம் நாமம் பாடிப் புகழுவேன் --- என் இயேசு 2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் நேசர் நீர் அணைத்தீரே கைவிடப்பட்டு கதறினேன் கர்த்தர் நீர் தேற்றினீர் --- என் இயேசு 3. இனி நான் வாழ்வது உமக்காக உமது மகிமைக்காக உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன் ஓயாமல் பாடுவேன் --- என் இயேசு 4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே நோய்களை சுகமாக்கினீர் எனது ஜீவனை அழிவில் நின்று காத்து இரட்சித்தீரே --- என் இயேசு

Tuesday, 14 January 2020

Eppadi Paduven Naan எப்படி பாடுவேன் நான்

Eppadi Paduven Naan எப்படி பாடுவேன் நான் – என் இயேசு எனக்குச் செய்ததை ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய் ஆத்தும ஆதாயம் செய்வேன் 1. ஒரு வழி அடையும் போது புதுவழி திறந்த தேவா திறந்த வாசலை என் வாழ்க்கையில் (2) அடைக்காத ஆண்டவரல்லோ (2) 2. எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நான் போவதில்லை அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே (2) எப்போதும் பாடிடுவேன் (2) 3. கடந்து வந்த பாதையில் கண்மணி போல் காத்திட்டீர் கடுகளவும் குறை வைக்காமலே (2) அதிகமாய் ஆசிர்வதித்தீர் (2)

Um Patham panithen உம் பாதம் பணிந்தேன்

Um Patham panithen உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே சரணங்கள் 1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம்பாதம் 2. புது எண்ணெய்யால் புது பெலத்தால் புதிய கிருபை புது கவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம்பாதம் 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் — உம்பாதம் 4. என் முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே — உம்பாதம் 5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க கிளை நறுக்கிக் களை பிடுங்கி கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் — உம்பாதம் 6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா ஆருயிரே நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன் — உம்பாதம் 7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில் சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் — உம்பாதம்