Saturday, 21 December 2019

Deva Palan Pirantheere தேவபாலன் பிறந்தீரே

Deva Palan Pirantheere தேவபாலன் பிறந்தீரே மனுக்கோலம் எடுத்தீரே வானலோகம் துறந்தீர் இயேசுவே நீர் வாழ்க வாழ்கவே --- தேவ பாலன் 1.மண் மீதினில் மாண்புடனே மகிமையாய் உதித்த மன்னவனே வாழ்த்திடுவோம் வணங்கிடுவோம் தூயா உன் நாமத்தையே --- தேவ பாலன் 2.பாவிகளை ஏற்றிடவே பாரினில் உதித்த பரிசுத்தரே பாடிடுவோம் புகழ்ந்திடுவோம் தூயா உன் நாமத்தையே --- தேவ பாலன்

Friday, 20 December 2019

Van Velli Pragasikkuthe வான் வெள்ளி பிரகாசிக்குதே

Van Velli Pragasikkuthe வான் வெள்ளி பிரகாசிக்குதே உலகில் ஒளி வீசிடுமே யேசு பரன் வரும் வேளை மனமே மகிழ்வாகிடுமே (2) 1. பசும் புல்லணை மஞ்சத்திலே திருப்பாலகன் துயில்கின்றான் அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார் நல் ஆசிகள் கூறிடுவார் – வான் 2. இகமீதினில் அன்புடனே இந்த செய்தியை கூறிடுவோம் மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம் அவர் பாதம் பணிந்திடுவோம் – வான் 3. இந்த மாடடை தொழுவத்திலே அவர் மானிடனாய் பிறந்தார் மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் நம் இயேசுவை வணங்கிடுவோம் --- வான்

Eerayiram Aandugal Mun ஈராயிம் ஆண்டுகள் முன்

Eerayiram Aandugal Mun 1.ஈராயிம் ஆண்டுகள் முன் மரியாளின் நன் மகனாய் தெய்வ மைந்தன் தோன்றினார் தேவன் பூவினில் வந்துதித்தார் வானதூதர் சேனைத்திரள் பாடும் தொனி கேளாய் மானிடர் என்றும் வாழ்வாரே தேவன் பூவினில் உதித்ததால் எக்காளம் முழங்க தூதர் சேனை பாடும் தொனி கேளாய் மானிடர் என்றும் வாழ்வாரே தேவன் பூவினில் உதித்ததால் 2.ராக்கால மந்தை மேய்ப்பர்கள் காக்க பேரொளி தோன்றினது தூதர்கள் கூட்டம் முழங்கின பாடல் தூரத்தில் கேட்டது 3.யோசேப்பும் மரியாளும் ஒன்றாய் பெத்தலகேம் ஊர் வந்தனர் பிள்ளையை கிடத்த இடமில்லை தேவ மைந்தனுக்கிடமில்லை 4.பெத்தலகேம் சத்திர முன்னனை மாட்டு தொழுவத்திலே பிறந்தார் மரியாளின் மகனாய் தோன்றினார் தேவன் பூவினில் வந்துதித்தார்

Wednesday, 18 December 2019

En Yesu Rajan Varuvar என் இயேசு ராஜன் வருவார்

En Yesu Rajan Varuvar என் இயேசு ராஜன் வருவார் எண்ணிலடங்கா தூதரோடு என்னை மீட்ட இயேசு ராஜன் என்னை ஆளவே வருவார் 1.அவர் வருகையை எதிர்பார்க்கும் பக்தருக்கு அவர் வருகை மிகப்பெரும் மகிழ்ச்சி அவர் வருகையை எதிர்பாரா மாந்தருக்கு அவர் வருகை மிகபெரும் அதிர்ச்சி 2.உலகில் நடப்பவை எல்லாம் அவர் வருகைக்கு உண்மையைக் கூறும் அவர் வருகை மிகவும் சமீபம் அவர் வரவை சந்திக்க ஆயத்தமா 3.வானில் ஓர் பேரொளி தோன்றும் விண்ணில் ஓர் மின்னொளி தோன்றும் மேற்கும் கிழக்கும் நடுங்க மேகங்கள் மீதே வருவார்

Tuesday, 17 December 2019

Aa Ambara Umbara ஆ அம்பர உம்பர

Aa Ambara Umbara ஆ அம்பர உம்பர மும் புகழுந்திரு ஆதிபன் பிறந்தார் ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ 1. அன்பான பரனே அருள் மேவுங் காரணனே – நவ அச்சய சச்சிதா – ரட்சகனாகிய உச்சிதவரனே – ஆ 2. ஆதம் பாவமற, நீதம் நிறைவேற – அன்று அல்லிராவினில் வெல்லையடியினில் புல்லணையிற் பிறந்தார் – ஆ 3. ஞானியர் தேட வானவர் பாட – மிக நன்னய உன்னத – பன்னரு மேசையா இந்நிலம் பிறந்தார் – ஆ 4. கோனவர் நாட, தானவர் கொண்டாட – என்று கோத்திரர் தோத்திரஞ் – சாற்றிடவே யூத கோத்திரன் பிறந்தார் – ஆ 5. விண்ணுடு தோண, மன்னவர் பேண – ஏரோது மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட விந்தையாய்ப் பிறந்தார் – ஆ

Samathanam Oothum சமாதானம் ஓதும் இயேசு

Samathanam Oothum சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து இவர் தாம் இவர் தாம் இவர் தாம் இவர் தாம் 1. நமதாதி பிதாவின் திருப் பாலரிவர் அனுகூலரிவர் மனுவேலரிவர் --- சமாதானம் 2. நேய கிருபையின் ஓரு சேயர் இவர் பரம ராயர் இவர் நம தாயரிவர் --- சமாதானம் 3. ஆதி நரர் செய்த தீதறவே அருளானந்தமாய் அடியார் சொந்தமாய் --- சமாதானம் 4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே அறிஞோர் தேடவே இடையோர் கூடவே --- சமாதானம் 5. மெய்யாகவே மே சையாவுமே நம்மை நாடினாரே கிருபை கூறினாரே --- சமாதானம் 6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே --- சமாதானம்

Monday, 16 December 2019

Vana Thoothar Senaigal வான தூதர் சேனைகள்

Vana Thoothar Senaigal வான தூதர் சேனைகள் கீதங்களைப் பாடியே ஓய்வின்றி துதித்துப் பாலனை வாழ்த்தினாரே 1. ராவேளை மேய்ப்பர்கள் மந்தை காக்கையில் தோன்றினர் தூதர்கள் அட்சணமே அச்சத்தை நீக்கியே மேய்ப்பரிடம் நற்செய்தி கூறியே மகிழ்வித்தனர் சேர்ந்து நாமும் சென்றங்கு காண்போம் நம் பாலனை - வானதூதர் 2. பொன் தூபம் வெள்ளைப் போளம் ஏந்திடுவோம் சென்றனர் பாலனை தரிசிக்கவே வான் நட்சத்திரத்தின் ஒளியிலே மாட்டுத் தொழுவத்தை அடைந்தனர் சேர்ந்து நாமும் சென்றங்கு காண்போம் நம் பாலனை - வானதூதர் 3. ஏவையின் சாபத்தை நீக்கிடவே மானிடர் ரூபமாய் ஜென்மித்தார் பாவிகளை மீட்டு ரட்சிக்கவே மனுக்குமாரன் வந்துதித்தார் சேர்ந்து நாமும் சென்றங்கு காண்போம் நம் பாலனை - வானதூதர்