Saturday, 10 August 2019

Theva Pitha Enthan தேவ பிதா எந்தன்

Theva Pitha Enthan

தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே .

அனுபல்லவி
ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்
அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ

சரணங்கள்
ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ

சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,
சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ;
வானபரன் என்னோடிருப்பார் ;
வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ

பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்
சுக தைலம் கொண்டேன் தலையை
சுகமாய் அபிஷேகம் செய்குவார் -தேவ

ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும் ,
நேயன் வீட்டினில் சிறப்போடே ,
நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன் –தேவ

Arul Natha Nambi Vanthen அருள் நாதா நம்பி வந்தேன்

Arul Natha Nambi Vanthen

அருள் நாதா நம்பி வந்தேன்
நோக்கக் கடவீர்
கை மாறின்றி என்னை
முற்றும் ரட்சிப்பீர்

2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப்பாதத்தில்
பாவ மன்னிப்பருள்வீர்
இந்நேரத்தில்

3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்
சுத்தி செய்வீர் மாசில்லாத
ரத்தத்தால்

4. துணை வேண்டி நம்பி வந்தேன்
பாதை காட்டுவீர்
திருப்தி செய்து நித்தம்
நன்மை நல்குவீர்

5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்
ஞானம் பெலனும்
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்

6. இயேசு நாதா நம்பி
வந்தேன்தவறாமலே
என்னை என்றும் தாங்கி
நின்று காருமே

Vaanam Boomi Yaavatrilum வானம் பூமி யாவற்றிலும்

Vaanam Boomi Yaavatrilum

 1.         வானம் பூமி யாவற்றிலும்
                   யேசு மேலானவர்
            மனிதர், தூதர், பேய்தானும்
                        அவர் முன் வீழுவர்.
                     
            நான் நம்புவேன், நான் நம்புவேன்
                        யேசு எனக்காய் மரித்தார்,
            பாவம் நீங்கச் சிலுவையில்
                        உதிரம் சிந்தினார்.

2.         இரட்சகர் உயிர் விட்டதும்
                        எந்தனுக்காகவே;
            வெறெந்த மாமன் றாட்டுக்கும்
                        ஆங்கிட மில்லையே.

3.         பாவத்தின் மாளும் யாவர்க்கும்
                        உயிரளிக்குமே;
            பெலனற்ற ஆத்மாவுக்கும்
                        சக்தி கொடுக்குமே.

4.         லோகம் இவ்வன்பின் மாட்சிமை
                        ருசித்துப் பார்க்காதோ?
            மீட்ப ருதிர வல்லமை
                        வந்து சோதியாதோ?

5.         என் மரணப் படுக்கையில்
                        யேசென்ற நாமத்தை,
            பிரஸ்தாபிக்கும் சந்தோஷத்தில்
                        அடைவேன் நித்திரை.

Friday, 9 August 2019

Kiristhuvin Adaikalathil கிறிஸ்துவின் அடைக்கலத்தில்

Kiristhuvin Adaikalathil

கிறிஸ்துவின் அடைக்கலத்தில்
சிலுவையின் மாநிழலில்
கன்மலை வெடிப்பதனில்
புகலிடம் கண்டு கொண்டோம்

1. கர்ச்சிக்கும் சிங்கங்களும்
ஓநாயின் கூட்டங்களும்
ஆடிடைக் குடிலினில்
மந்தைகள் நடுவினில்
நெருங்கவும் முடியாது  --- நாம்

2. இரட்சிப்பின் கீதங்களும்
மகிழ்ச்சியின் சப்தங்களும்
கார்மேக இருட்டினில்
தீபமாய் இலங்கிடும்
கர்த்தரால் இசை வளரும்  --- நாம்

3. தேவனின் இராஜ்ஜியத்தை
திசை எங்கும் விரிவாக்கிடும்
ஆசையில் ஜெபித்திடும்
அதற்கென்றே வாழ்ந்திடும்
யாருக்கும் கலக்கம் இல்லை  --- நாம்

4. பொல்லோனின் பொறாமைகளும்
மறைவான சதி பலவும்
வல்லோனின் கரத்தினில்
வரை படமாயுள்ள
யாரையும் அணுகாது  --- நாம்


Tuesday, 6 August 2019

Devan Thantha Thiruch Sabaiyae தேவன் தந்த திருச் சபையே

Devan Thantha Thiruch Sabaiyae

தேவன் தந்த திருச் சபையே
விசுவாச வாழ்வு தரும் சபையே
மலரும் சந்தோஷம் ஒளிரும் நல்நேசம்
இன்றும் என்றும் அருளிச்செய்யும்

1. ஆதி அந்தம் வரையில்
நித்ய ஜீவன் நல்கும் மீட்பரை
நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
இந்த நல் தேவனின் திருச்சபையே

2. போற்றும் போற்றும் இயேசுவை
சுப வாழ்வு தரும் நேசரை
நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
இந்த நல் தேவனின் திருச் சபையே

3. மீண்டும் ஒர் நாள் வருவேன்
   என்று வாக்குரைத்த வல்லோனை
   நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
  விந்தைகள்  தேவனின்  திருச் சபையே

Monday, 5 August 2019

Athi Seekirathil Neengi Vidum அதி சீக்கிரத்தில் நீங்கி விடும்

Athi Seekirathil Neengi Vidum

அதி சீக்கிரத்தில் நீங்கி விடும்
இந்த இலேசான உபத்திரவம்

சோர்ந்து போகாதே -நீ   (2)

உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்கப்படுகின்ற நேரமிது    -- சோர்ந்து

ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே    -- சோர்ந்து

காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்    -- சோர்ந்து

கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே    -- சோர்ந்து

மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்   -- சோர்ந்து

மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்    -- சோர்ந்து

Sunday, 4 August 2019

Palipeedathil Ennai Parane பலிபீடத்தில் என்னைப் பரனே

Palipeedathil Ennai Parane

பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே

கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கறை நீங்க இருதயத்தை

1. நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னைக்
காத்துமக்காய் நிறுத்தி

2. ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் தந்தேன்
ஆலய மாக்கியே இப்போ
ஆசீர்வதித்தருளும்

3. சுயமென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் மாய
தேவா அருள் செய்குவீர்