உன்னை சிருஷ்டித்தவர் உன்னை மறப்பாரோ
உன்னை உண்டாக்கினவர் உன்னை விடுவாரோ – 2
கலங்கிடும் மாந்தரே
கண்ணீ ரை துடைத்திடு – 2
கவலையை விட்டு விட்டு வா
இயேசுவைப் பின்பற்றி வா – 2
1. காற்றும் கடலும் எதற்காக
கனிமரமெல்லாம் எதற்காக – 2
சூரிய சந்திரனும் எதற்காக
அத்தனையும் அது உனக்காக – 2
2. மலையும் மலர்களும் எதற்காக
நிலமும் நீரும் எதற்காக – 2
பாடும் பறவைகள் எதற்காக
அத்தனையும் அது உனக்காக – 2
3. சிலுவை சுமந்தது எதற்காக
சிந்தின இரத்தம் எதற்காக – 2
ஜீவனை கொடுத்தது எதற்காக
அத்தனையும் அது உனக்காக – 2
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.