Sunday 6 September 2020

Unnai Kaakiravar Urangaar உன்னைக் காக்கிறவர் உறங்கார்

Unnai Kaakiravar Urangaar உன்னைக் காக்கிறவர் உறங்கார் உந்தன் காலைத் தள்ளாட வொட்டார் கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார் கடைசி மட்டும் கைவிடாதிருப்பார் - 2 1. மலை போன்ற துன்பம் தினம் வந்தாலும் ஆழிபோல் சோதனை பெருகினாலும் கோட்டையும் அரணுமாய் கர்த்தர் இருப்பதால் நெஞ்சே நீ கலங்கிடாதே - உன்னை 2. பாவமும் சாபமும் சூழ்ந்த போது பாவத்துக்காய் மனம் திரும்பும்போது பாவத்தை மீண்டும் நினையேன் என்றதால் நெஞ்சே நீ கலங்கிடாதே - உன்னை 3. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாகவும் இருக்கும் போது கர்த்தரை தேடுவோர்க்குக் குறைவில்லை என்றதால் நெஞ்சே நீ கலங்கிடாதே - உன்னை 4. வழுவாது உன்னைக் காத்திடவும் மகிமையின் சந்நிதியில் மகிழ்ந்திடவும் மாசற்று நிறுத்த வல்லவர் இருப்பதால் நெஞ்சே நீ கலங்கிடாதே - உன்னை

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.