Unnai Kaakiravar Urangaar
உன்னைக் காக்கிறவர் உறங்கார்
உந்தன் காலைத் தள்ளாட வொட்டார்
கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார் - 2
1. மலை போன்ற துன்பம் தினம் வந்தாலும்
ஆழிபோல் சோதனை பெருகினாலும்
கோட்டையும் அரணுமாய் கர்த்தர் இருப்பதால்
நெஞ்சே நீ கலங்கிடாதே - உன்னை
2. பாவமும் சாபமும் சூழ்ந்த போது
பாவத்துக்காய் மனம் திரும்பும்போது
பாவத்தை மீண்டும் நினையேன் என்றதால்
நெஞ்சே நீ கலங்கிடாதே - உன்னை
3. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து
பட்டினியாகவும் இருக்கும் போது
கர்த்தரை தேடுவோர்க்குக் குறைவில்லை என்றதால்
நெஞ்சே நீ கலங்கிடாதே - உன்னை
4. வழுவாது உன்னைக் காத்திடவும்
மகிமையின் சந்நிதியில் மகிழ்ந்திடவும்
மாசற்று நிறுத்த வல்லவர் இருப்பதால்
நெஞ்சே நீ கலங்கிடாதே - உன்னை
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.