Desame Payapadathe தேசமே பயப்படாதே
Desame Payapadatheதேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
மன்னவர் இயேசு உந்தனுக்கே
மாபெரும் காரியம் செய்திடுவார்
1. செழிப்பான புதுவாழ்வு
தேவனே அருளிடுவார்
சுகவாழ்வு சமாதானம்
சந்தோஷம் தந்திடுவார் - தேசமே
2. மலைபோல வருவதெல்லாம்
பனிப் போல் மறைந்திடுமே
உன்னதரின் கிருபைகளும்
உந்தனைச் சூழ்ந்திடுமே - தேசமே
3. தேவனுடன் உறவு கொண்டு
தினம் தினம் வாழ்ந்திடுவாய்
இம்மையிலும் மறுமையிலும்
இன்பத்தை ருசித்திடுவாய் - தேசமே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.