Iratchippai Uyarthi Solvom இரட்சிப்பை உயர்த்தி சொல்வோம்
Iratchippai Uyarthi Solvom
1. இரட்சிப்பை உயர்த்தி சொல்வோம்
லோகம் நடுங்க
நரகாக்கினையை சொல்வோம்
பாவம் அடங்க
பூர்வ காலத் தேவ தாசர்
விஸ்தரித்தாப்போல்,
மோட்ச லோகம் போகுமுன்னே,
செல்வோம், செல்வோம்
ஆர்ப்பரிப்புடனே
செய்வோம், செய்வோம்,
போர் பலத்துடனே
நானா ஜாதி பாஷைக்காரர்
இரட்சிப்படைய
மோட்சலோகம் போகு முன்னே.
2. இயேசு வீரர் யுத்த சத்தம்
பூமியெங்கும் கேள்
மீட்படைந்த பேதைகளின்
சாட்சிகளுங் கேள்
முழு லோகத்தையும் வெல்ல
இன்னும் கொஞ்ச நாள்
மோட்ச லோகம் போகு முன்னே.
3. தீதாய்ச் சத்துருக்கள் என்ன
சொன்ன போதிலும்
சுத்த ஆவியின் பலத்தைப்
பெற்று யாவிலும்
உண்மையாகப் போர் புரிந்தால்
வெல்வோம் சாவிலும்
மோட்ச லோகம் போகு முன்னே.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.