Unnai Sirushtithavar
உன்னை சிருஷ்டித்தவர் உன்னை மறப்பாரோ
உன்னை உண்டாக்கினவர் உன்னை விடுவாரோ
கலங்கிடும் மாந்தரே
உன் கண்ணீரை துடைத்திடு
கவலையை விட்டு விட்டு வா
இயேசுவைப் பின்பற்றி வா
1. காற்றும் கடலும் எதற்காக
கனிமரமெல்லாம் எதற்காக
சூரிய சந்திரனும் எதற்காக
அத்தனையும் அது உனக்காக
2. மலையும் மலர்களும் எதற்காக
நிலமும் நீரும் எதற்காக
பாடும் பறவைகள் எதற்காக
அத்தனையும் அது உனக்காக
3. சிலுவை சுமந்தது எதற்காக
சிந்தின இரத்தம் எதற்காக
ஜீவனை கொடுத்தது எதற்காக
அத்தனையும் அது உனக்காக
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.